Pages

பசுமை நிறைந்த நினைவுகளே!!






தொடர்புடைய பதிவுகள்:

 இதற்குத்தானே ஆசைப்பட்டாய்.... 
பார்வைகள்

என் முதல் தோட்டத்தின் ஒரு பகுதி
 
 சுமார் 17 வருடங்களுக்கு முன் அமீரகம் வந்தபோது வசித்த முதல் வீட்டில்,  தோட்டவளத்துறையில் பணிபுரிந்த உறவினர் ஒருவர் பரிசளித்த செடிகள், கொடுத்த ஆலோசனைகளால், என் “முதல் தோட்டம்” உருவானது!!

வீடு முழுக்க செடிகளால் நிறைந்து பார்க்கவே மனதுக்கு இதமாகஇருக்கும்.  எல்லாரும்  அலங்காரப் பொருட்கள், நகை, புடவைன்னு ஷாப்பிங் போனா,  என் ஷாப்பிங்கோ, செடிகொடி, தொட்டி, மண் என்று இருக்கும். ‘விசித்திரமான பிறவி’ன்னு எங்கூட்டுக்கார் நினைச்சிருப்பார்.  ஆனாலும், செலவு குறைவா இருந்ததால ஆரம்பத்துல விட்டுட்டார்.

ஆனா, அந்தத் தொல்லை தொடர ஆரம்பிச்சு, ‘சிறுதுளி பெரு வெள்ளமா’ முழுக வைக்கும் லெவலில் போகத் தொடங்கவும்... வீட்டுக்குள்ள தொட்டி வாங்கிவச்சா சரிவராது, உனக்கு தோட்டம் இருக்கிற வீட்டுக்கே குடிவைக்கிறேன்னு சொல்லி அழைச்சுட்டுப் போனார். பாத்தா ஆளேயில்லாத ஒரு குக்கிராமத்துல பங்களா மாதிரி வீடு!!  தோட்டத்துக்காக அதையும் சகிச்சுகிட்டு இருந்ததுல அஞ்சு வருஷம் போனதே தெரியலை!!


கிராமத்துத் தோட்டம்.. நகரத்தில் பால்கனித் தோட்டம்...
அஞ்சு வருஷம் கழிச்சு, வீட்டைக் காலி பண்ண மாட்டேன்னு நானே சொல்லுமளவு தோட்டம், துரவு, வேம்பு, அகத்தி, கருவேப்பிலை, முருங்கை, வெண்டை, தக்காளி, லவ் பேர்ட்ஸ், முயல், ஊஞ்சல்னு ஒரு  மினி-ஜமீன்தாரிணியா வாழ்ந்த வசந்த காலம்!! பொறுக்குமா.... மறுபடி ஒரு ஃப்ளாட்டுக்குள்ள பிடிச்சுப் போட்டுட்டாங்க. அங்கயும் பால்கனில செடிகள் வச்சிருந்தேன், ஆனா, சுற்றுவட்டார கட்டுமானப் பணிகளால் செடிகள் எல்லாம் போயிடுச்சு!! :-(((

தோட்ட ஆசை மறுபடி தலைதூக்க... அடிச்சுப் பிடிச்சு இந்த வீட்டுக்கு வந்தோம்.  புறநகர்ப்பகுதியில் இருந்தாலும் விஸ்தாரமான வீடு, சுற்றி தோட்டம் வைக்க நிறைய இடம்,  முன்னாடி விளையாட இடம், ஊஞ்சல்... எல்லாத்தையும்விட  பார்க்கிங் பிரச்னை இல்லை!! என்னவரின் உதவியால், வெறும்தரையாக இருந்த தோட்டத்தில், மண் மாற்றி,  காய்கறிக் கழிவுகளைக் கொண்டு வளப்படுத்தி அப்படி இப்படின்னு,  மூணு வருஷத்துல இப்பத்தான் முருங்கை, வேப்பிலைனு நாங்க வெச்ச கன்றுகள் மரமாகி வருது... இப்ப மறுபடியும் ‘பெட்டியைக் கட்டு’ன்னுட்டார்!!!


வேப்பங்கொழுந்துக்கு பஞ்சமில்லை!
இதனருகில் காலையில் தேனீக்கள் கூட்டம் மொய்க்கும்!!
வலது ஓரத்தில் கற்பூரவல்லி...

முன்பு ஜமீந்தாரிணி என்றால், இம்முறை ‘பண்ணையாரம்மா’வாகக் கொடிகட்டிப் பறந்தேன். ’ஜன்னலைத் திறந்தால் வேப்பமரக்காற்று’ என்ற என் இலட்சியம் இந்த வீட்டில் நிறைவேறியது. சொந்த மண்ணில் சொந்தமாக ஒரு விளைநிலம் என்பது இதுவரை கனவாகவே இருப்பதால், கிடைத்த இந்த வாய்ப்பை  முழுதாக அனுபவித்தேன். இறைவனுக்கே எல்லாப் புகழும்.


Damas tree பிண்ணனியில்...
மரம் வளர்க்கும் ஆசையில், இங்கே சமீபகாலமாக அதிகம் வளர்க்கப்படும் ‘டமாஸ்’ என்ற மரக்கன்றுகளையும் வாங்கி நட்டுவைத்தோம். அசுர வேகத்தில் வளர்ந்த அவற்றை ஆச்சரியத்தோடு பார்த்தபோதுதான், செய்தி தெரிந்தது. இதுவும் சென்ற பதிவில் நாம் பார்த்த ‘யூகலிப்டஸ்’ மரம்போல, வேர்கள் ஆழமாகச் சென்று நீரை கபளீகரம் பண்ணுமாம். இருந்தாலும், வளர்ந்து நிழல் தரும் மரத்தை வெட்ட மனசில்லாமல் தவித்த நிலையில், வீட்டு ஓனர், காலி செய்யுமுன் அந்த மரங்களை வெட்டச் சொல்லி ஆணையிட்டார்!! அவர் கவலை நிலத்தடி நீரைக் குறித்தல்ல, அந்த மரம் அதிகமாக இலைகள் உதிர்க்கிறதாம்!! வெட்டிட்டோம்... :-(

இரண்டு தங்கைகளும், ஒரு கஸினும் இதே ஏரியாவில் இருப்பதால், அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. இந்த வீட்டை விட்டுப் போவதால், இந்த வாய்ப்பும் குறையும் வருத்தமும்.
தொட்டிகளில் ‘சேமிப்பு’!!

இந்தச் செடி பூக்கும்னே தெரியாது; ஃப்ரீயா கிடைச்சதால், சும்மா அலங்காரத்துக்கு வச்சிருந்தோம். திடீர்னு போன வாரம் இதில் ஒரு அழகான பூ!! செடிக்கு பேரேல்லாம் தெரியாது. (ராமலக்ஷ்மிக்காவுக்குத் தெரிஞ்சுருக்கலாம்! :-) )

கரத்தினுள் குடியேறணும் என்ற அவசியத்தால் தோட்ட ஆசை மீண்டும் கனவாகும் நிலை. நகரமையத்தில் கிடைக்கும் வீட்டில் தோட்டத்தைவிட பார்க்கிங்கிற்கு இடம் இருந்தால் போதும் என்ற நிலையாகிவிட்டது!! என்றாலும்,  தொட்டிகளில் செடிகள் வைத்துக் கொள்ளலாம் என்பதால் முடிந்த வரை தொட்டிச் செடிகளைச் சேகரித்திருக்கிறேன்.  இப்போப் பார்த்திருப்பதும் நல்ல வீடுதான் என்றாலும், வீட்டு ஓனர் பக்கத்து வீட்டிலேயே குடியிருக்கிறார் என்பதுதான் கொஞ்சம் கிலியேற்படுத்துகிறது!! எந்த நாடானால் என்ன, ஹவுஸ்  ஓனர்கள் ஒரே மாதிரிதான்ப்பா இருக்காங்க!


ந்த பதினேழு வருட அமீரக வாசத்தில், எனக்கு அண்டைவீட்டுக்காரர்கள் என்ற ஒன்று வாய்த்ததே இல்லை. எப்போதும் பக்கத்து வீடுகளில் கம்பெனி அல்லது பேச்சிலர்ஸ்தான் இருப்பார்கள். பகல்முழுதும் தனிமை, அமைதிதான்!  இந்த வீடும் அப்படித்தான், ஆனாலும் பகல் நேரத்தில் தனியே இருக்கிறோம் என்ற நினைவே வரவிடாத அளவு பறவைகள் ஒலி இருந்துகொண்டே இருக்கும்! காலை எழுந்தது முதல் மாலை மங்கும் வரை  “கீச்.. மூச்... கிய்யா.. முய்யா...” என்று விதவிதமாகச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். மரங்களைவிட இதைத்தான் நான் அதிகம் மிஸ் பண்ணுவேன்!!


Post Comment

தங்கத்தாவரம்







”பணங்காய்க்கும் மரம்”னு கேள்விப்பட்டிருப்போம். நிஜத்துல அப்படி பணம் மரத்துல காய்க்காதுன்னாலும், பணப்பயிர்களையோ, பணம் சம்பாதிக்கும் ஆட்களையோ இப்படிக் குறிப்பிடுவதுண்டு. “இங்க பணம் என்ன மரத்துலயா காய்க்குது?” என்பதும் பிரபல சொல்வழக்கு.

பணம் மரத்தில் காய்ப்பதில்லைதான்; ஆனா, தங்கம் மரத்தில் காய்க்குதாம்!! நிஜம்மாத்தான் சொல்றேங்க!!

ஸ்திரேலியாவில் ஆராய்ச்சிக்காக, விஞ்ஞானிகள் சில மரங்களைப் பரிசோதித்தபோது அவற்றின் இலைகளில் தங்கம் படிந்திருந்ததைக் கண்டறிந்தார்கள். மேலும் ஆராய்ந்தபோது, வறட்சி காலத்தில் தண்ணீரைத் தேடி  மரத்தின் வேர்கள் பூமியின் ஆழத்திற்கு நீண்டபோது, அங்கு இருந்த  கனிமங்களிலிலிருந்து தங்கத்தையும் நீரோடு சேர்த்து உறிஞ்சி, இலைகளுக்குக் கடத்தியுள்ளன. அத்தங்கத்தினால் மரத்திற்குப் பயன் இல்லை என்பதால், அதை இலை வழியாக வெளியேற்ற முயற்சித்ததில் அவை இலைகளில் படிந்துள்ளன.



http://www.nature.com/ncomms/2013/131022/ncomms3614/full/ncomms3614.html

அவ்வாறு ஒரு மரத்தில் படிந்துள்ள தங்கத்தின் அளவு, ஒரு மனித முடியில் ஐந்தில் ஒரு பங்குதான் இருக்குமாம்!!  குறைந்தது ஐநூறு மரங்களாவது இருந்தால்தான், ஒரு மோதிரத்திற்கான தங்கம் கிடைக்குமாம்.

டனே, அடுத்த அக்‌ஷய திரிதியைக்கு ”தங்க மரம்” வாங்குங்கன்னு நகைக்கடைகளுக்குப் போட்டியா ‘ஈமு ஃபார்ம்ஸ்’ பார்ட்டிகள் கடைபோட ஐடியா செய்வதற்குமுன் ஒரு தகவல்:  எல்லா மரங்களிலும் இப்படிக் கிடைக்காது. எங்கு பூமிக்கடியில் தங்கம் இருக்க வாய்ப்பிருக்கிறதோ, அங்குதான் - அதுவும் வேர் ஆழமாகச் செல்லக்கூடிய யூகலிப்டஸ் போன்ற மரங்கள் வைத்தால் மட்டுமே - இது சாத்தியம். 

மேலும் இது தங்கத்திற்கு மட்டுமல்ல, எல்லாவகையான கனிமங்களுக்கும் பொருந்தும். பொதுவாகவே ஒரு இடத்தில் கிடைக்கும் தண்ணீரும், காய்கனிகளும் பூமியின் தன்மையைத்தானே பிரதிபலிக்கும். இங்கு தங்கம் நிறைய இருந்ததால், தங்கம். 

ந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். ஏனெனில்,  Oil exploration, Mineral mining போன்ற துறைகளில்  அகழ்வாராய்தல்தான் பெருத்த செலவு பிடிக்கும் பணி.  அதனாலேயே பல ஆராய்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் கிடைக்காமல், தடைபடுகின்றன. இனி, இம்மாதிரி மரங்களின்மூலம்,  அவற்றினடியில் உள்ள பூமியில் என்ன வகையான கனிமம் இருக்கின்றன என்று நிச்சயப்படுத்திக் கொள்வது சுலபமாகிவிடுகிறது.  செலவு கணிசமாகக் குறைந்துவிடும் என்பதால்,  பயனுள்ள ஆராய்ச்சிகள் அதிகமாகலாம். 

ன்னொரு விஷயம் பாத்தீங்கன்னா, இக்கண்டுபிடிப்பில் பங்காற்றியவை  யூகலிப்டஸ் மரங்கள். இவற்றின் வேர்கள், சுமார் 30 மீட்டர்கள் ஆழத்தையும் தாண்டி நீண்டு நெடிந்து செல்லும் தன்மை உடையவை என்பதால்தான் இது சாத்தியமானது.  தமிழகத்திலும் யூகலிப்டஸ் மரங்கள் ஊட்டி/கொடைக்கானல் பகுதிகளில் உண்டு.  பல வருடங்களுக்குமுன்பே, ஒரு பத்திரிகையில் (கல்கண்டு என்று ஞாபகம்) இவற்றின் வேர்களின் நீருறிஞ்சும் தன்மையின் அபாயத்தினால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்று எச்சரித்திருந்தது.

தற்போது இந்தக் கண்டுப்பிடிப்பின்மூலம் அது உண்மையென நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சீமைக்கருவேல மரத்திற்கு இருக்கும் எதிர்ப்பில் சிறிதளவுகூட இதற்கு இல்லையென்பது ஆச்சரியமே.

தே ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், இந்தக் கண்டுபிடிப்பை தம் ஆராய்ச்சி மையங்களின் பசுமைக் குடில்களில், இப்பரிசோதனையை யூகலிப்டஸ் மற்றும்
கருவேல வகை (Acacia aneura) மரங்களைக் கொண்டு மீண்டும் செய்துபார்த்து உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.  

இப்பரிசோதனையில் கருவேல வகை (
Acacia) மரத்தை ஏன் எடுத்துக் கொள்ளக் காரணம், பொதுவாகவே வறட்சி நிலத்தில் அதிகம் காணப்படும் இந்த Acacia வகை மரங்கள் நிலத்தடி நீரை ஆழமாகச் சென்று அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டவை.  


சீமைக் கருவேல மரம்
கருவேல மரம்


ஒருவகைக் கருவேலமரமான  Acacia nilotica தமிழகத்தில் மிகுந்து காணப்படுகிறது!!   ஆனால், ஆஸ்திரேலியாவில், நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சியெடுத்து, சூழலியல் ஏற்றத்தாழ்வு (ecological imbalance)  மூலம் பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு அச்சுறுத்தல் உண்டாக்குவதால், இந்த கருவேல மரத்தை  “களைச்செடி” - Pest என்று அறிவித்து அவற்றை முழுமையாக அழிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்கள்!!

(இந்த  கருவேல மரமும் Acacia nilotica,  சமீபகாலமாக தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பைக் கிளப்பியிருக்கும் “சீமைக்கருவேல மரம் - Prosopis juliflora, வேறுவேறு என்றாலும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்).

”என்னாச்சு உனக்கு? மரத்தில தங்கம்னு ஆரம்பிச்சு, சுத்தி வளைச்சு யூகலிப்டஸ், கருவேல மரம்னு வந்தாச்சு; இப்ப என்னதான் சொல்ல வர்றே”ன்னு ஏன் சலிச்சுக்கிறீங்க? ஒருவேளை உங்க கனவுல புதையல் காக்கும் பூதம் வந்து தங்கம் இருக்குதுன்னு சொன்னால்,  சத்தங்காட்டாம, அந்த நிலத்தை வளைச்சுப் போட்டு  இந்த மரங்களை வளர்க்க ஆரம்பிச்சிடுங்க!! யாருக்கும் பங்கு கொடுக்காம, எந்தச் சந்தேகமும் வராம நீங்க மட்டும் தங்கத்தை அனுபவிக்கலாம்னு சொல்ல வந்தேன்... ஹூம்... நல்லதுக்குக் காலமில்ல!!

Post Comment