கணப்பொழுதேனும் பிரிய மனமின்றி
கைப்பிடித்தே திரிந்தோம்
காணும்போது சிரித்து
காணாதபொழுதும்
கண்டிருந்த கணங்களை
கவனத்தில் கொண்டு நகைத்து, இனி
காணும்பொழுதில் கதைக்கவேண்டியதை
கருத்துருவாக்கி
கண்டதும் கலகலவென
கரைகடந்த வெள்ளமாய்
கலந்து கதைகள் பேசி
களித்திருந்தோமே
கண்பட்டுவிட்டதோ கண்ணே
காணவே கணமில்லாமல் போனதே
களைப்புறாமல் காத்திருப்போம்
கலங்காதிரு என் செல்ல வலைப்பூவே!!
.
.
.
.
.
.
.
.
.
ஹி..ஹி... பெற்றோர் வருகை, தங்கை பிரசவம், வீடு நிறைய ஆட்கள்... என செம பிஸி!! அதைவிட, மாமனார்-மாமியார் முன்பு மாப்பிளையை கெத்தோடு “மரியாதையாக” நடத்தவேண்டிய கட்டாயமிருப்பதால் வீட்டு வேலை அத்தனையும் என் தலையில் என்பதுதான் உண்மையான காரணம். க்க்ர்ர்ர்ர்ர்..... :-)
|
Tweet | |||