Pages

வானம் எனது எல்லை.... உள்ளே வராதே...




ழைகளும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், விமானக் கம்பெனி தொடங்கி, பின்னர் அதை நல்ல விலைக்கு விற்றுவிட்ட “ஏர் டெக்கான்” கோபி நாத் குறித்து ”சூரரைப் போற்று!!” புண்ணியத்தில்  எல்லாருக்குமே இப்போது தெரியும்.

ஏர் இந்தியா மட்டுமே கோலோச்சி வந்த 90-களில், வளைகுடாவில் கஷ்டப்பட்டு சம்பாதித்த தென்னிந்தியர்கள், பம்பாய் வந்துதான் தமது ஊர்களுக்குச் செல்ல முடியும். பயணச் செலவு எகிறுவதோடு, உள்ளூர்ப் பயணத்திலேயே விடுமுறையும் வீணாகச் செலவாகி வந்த காலம் அது. 


வானத்தைத் தனியாருக்குத் திறந்து விட்ட 1991-ம் வருடம், கேரளாவைச் சேர்ந்த வாஹித் சகோதரர்கள் “EAST WEST AIRLINES" என்ற விமானச் சேவையைத் தொடங்கி, உண்மையிலேயே பெரும் சேவை செய்து வந்தனர்.

அன்னை தெரசா அம்மையாருக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களது விமானத்தில் இலவசச் சேவை அளித்து வந்தனர்.

ஆனால், இத்தொழிலில் அவர்கள் சந்தித்து வந்தது சாதாரணத் தொழிற்போட்டியோ, எதிர்ப்போ அல்ல - கொலை மிரட்டல்!!

பம்பாயில், விமான டிக்கெட் புக்கிங் செய்து கொடுக்கும் ஒரு ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர்கள் அச்சகோதரர்கள். மும்பையில் தொழில் செய்யும் தென்னிந்தியர்களுக்கு நேரும் அதே எதிர்ப்புகளோடு, சிறுபான்மைச் சமூகம் என்பதினால் எழும் வெறுப்பையும் சந்தித்து வந்தாலும், தம் உழைப்பினால் தொடர்ந்து தம் தொழிலில் வெற்றிக் கொடி நாட்டி வந்தனர். விமானச் சேவையின் நெளிவு சுளிவுகளோடு, பயணிகளின் கஷ்டநஷ்டங்களும் அறிந்திருந்ததால், தனியாருக்கு வானத்தின் வாசல் திறக்கப்பட்டதும், வாய்ப்பை உடன் பயன்படுத்திக் கொண்டனர்.

விமானச் சேவை தொடங்கு முன்பே மிரட்டல்கள் தொடங்கிவிட்டன. பொருட்படுத்தாது, நிறுவனம் தொடங்கி,  விமானச் சேவையிலும் வெற்றிக் கொடி  நாட்டினர்.

ஆனால், நான்கே வருடங்களில், ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸின் நிறுவனர் தகியுத்தீன் வாஹித், படுகொலை செய்யப்பட்டார்!! அத்துடன் நிறுவனம் பல நஷ்டங்களுக்கு உள்ளாகி, மூடப்பட்டது.

மும்பையின் நிழலுகத்தின் அடியாட்களால் நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட இப்படுகொலை, வழக்கம்போல “சாட்சியங்கள்” இல்லாத காரணத்தால், கொலையாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

வட இந்தியாவில் ஒரு தென்னிந்தியர், அதுவும் சிறுபான்மை இனத்தவர் தொழிலில் முன்னேறுவது எவ்வளவு சாத்தியம் என்பதற்கு இவரின் மரணமும் ஒரு சாட்சி!! திரைப்படமாக எடுக்க முழுத் தகுதியுள்ள கதை.




தொடர்புடைய சுட்டிகள்:
http://www.kairosinstitute.in/blog1/2019/10/27/east-west-airlines-the-pioneers-of-the-indian-private-airline-industry/

https://en.wikipedia.org/wiki/East-West_Airlines_(India)#Fleet

https://www.youtube.com/watch?v=FSJpFdL5ukI

https://www.onmanorama.com/business/news/2018/07/25/the-rise-and-fall-of-east-west-airlines.html

https://www.indiatoday.in/magazine/interview/story/19960131-i-will-return-to-india-and-face-trial-but-after-teaching-dawood-a-lesson-says-chhota-rajan-833413-1996-01-31

https://m.youtube.com/watch?v=bNfTF_vmlg8

https://www.onmanorama.com/news/nation/2020/01/10/ejaz-lakdawala-thakiyudeen-wahid-east-west-airlines-md-murder.html?fbclid=IwAR1xkNxiGF81FfU__kTe_8wn2170wVa5v31wPMBVKamlwPSd_Ku3j4taplM

Post Comment

சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் மேலானவன்...




முஸ்லிம்களின் குழு ஒன்று உம்ரா செய்வதற்காக மதீனாவிலிருந்து கிளம்பியது.  ஆனால் அவர்களை மக்காவில் நுழைய விடாமல், எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர் மக்காவாசிகள். காரணம் கொரோனா அல்ல. ஏனெனில் இது நடந்தது 1400 ஆண்டுகளுக்கும் முன்பாக. 

மக்கா, அப்போது சிலைகளை வணங்கும் குறைஷி வம்சத்தினர் வசம் இருந்தது. தமது ஆட்சி, அதிகாரம், ஆள்பலம், ஆயுதங்கள் தந்த ஆணவச் செருக்கில் திளைத்திருந்த குறைஷிகள், இறையில்லத்தைக் காணும் ஆசையோடு, பக்தியுடன் ஆயுதங்கள் இன்றி வந்த முஸ்லிம்களை, உள்ளே வரக்கூடாது என்று தடுத்தனர். திரும்பிப் போய்விட்டு, அடுத்த வருடம் வாருங்கள் என்று ஆணையிட்டனர்.

அது மட்டுமின்றி, பற்பல நிபந்தனைகள் அடங்கிய ஒரு ஒப்பந்தத்தில் அக்குழுவின் தலைவரான முஹம்மது நபி(ஸல்)-ஐக்   கையெழுத்திட வைத்தனர்.  முஸ்லிம்களை அவமானப் படுத்துவதாகவும்,  பலவீனப் படுத்தக் கூடியதாகத் தெரிந்த அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதிற்காக நபியின் மீது வருத்தம் கொண்டனர் முஸ்லிம்கள். தைரியசாலியான உமர்(ரலி) அவர்களோ ஒரு படி மேலே போய், உணர்ச்சிக் கொந்தளிப்பில் ”நாமென்ன தவறு செய்தோம்? ஏன் பணிந்து போக வேண்டும்? ஆணையிடுங்கள், போர் செய்கிறோம்” என்று நபியிடமே கேள்வி எழுப்பினார்.

சாந்த நபியோ அனைவரையும் ஆற்றுப் படுத்தினார்கள். “இது பலவீனமல்ல. அடங்கிப் போவதுமல்ல. பொறுத்தார் பூமியாழ்வார்” என்று ஊக்கமளித்தார். இறைவனும் இது வெற்றி என்றே தன் வேதத்தில் உறுதியளித்தான். அதைக் கேட்டுக் கொண்டு, எதிர்ப்பைக் கைவிட்டாலும், மனதில் குழப்பமும் கொந்தளிப்புமாகவே இருந்தனர் முஸ்லிம்கள்.  
வெகு விரைவாகவே காட்சிகள் மாறத் தொடங்கின. குறைஷிகள் முஸ்லிம்களுக்கு விதித்த நிபந்தனைகள் அனைத்துமே, அவர்களுக்கு எதிராகவே திரும்பின.  முஸ்லிம்களைப் பலவீனப்படுத்தும் நயவஞ்சகத் திட்டத்தோடு போட்ட அந்த ஒப்பந்தம், அவர்களையே அடியோடு பலவீனப்படுத்தி, மக்காவை எந்த எதிர்ப்புமில்லாமல், முஸ்லிம்கள் வசம் சமர்ப்பித்தார்கள்!! கத்தியின்றி, இரத்தமின்றி மக்கா வெற்றி கொள்ளப்பட்டது!! 

பெருவெற்றி பெற்ற நிலையிலும் முஹம்மது நபியோ(ஸல்) முஸ்லிம்களோ ஆடவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை, கொண்டாடவில்லை,  பழி தீர்க்கவில்லை. மாறாக, இறைவனுக்கு சிரம் தாழ்ந்து நன்றி கூறிவிட்டு, மக்கத்து குறைஷிகளிடம்,  “எங்கள் சகோதரர்கள் நீங்கள். எங்கள் ஆட்சியின் கீழ் நிம்மதியாக இருக்கலாம்” என்றே அரவணைத்தார்கள்!!

இது வரலாற்றின் தொடக்கக் கால சம்பவம். தொடரும் வரலாறுகளும் அவ்வாறே!! எப்போதெல்லாம் முஸ்லிம்களை அடக்கியாள்வது போன்ற நிலை ஏற்படுகிறதோ, அது முஸ்லிம்களுக்கு நன்மையையே ஏற்படுத்தித் தரும். இறைவன் ஒருபோதும் அவனை வணங்குபவர்களைக் கைவிடுவதில்லை!!

இதோ... #கொரோனா_ஜிஹாத் செய்கிறார்கள் என்று முஸ்லிம்களைப் பழித்தார்கள்; இப்போது குணமான முஸ்லிம்களின் பிளாஸ்மாவை சிகிச்சைக்குக் கேட்கிறார்களாம்!!

#68:35. நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா? (குர் ஆன்)


Post Comment