கேட்டுக்கொண்டிருந்த பெரியவன், “எம்.ஜி.ஆர். இறந்தா, பஸ் ஏன் கிடைக்காது?” என்று கேட்டான். எல்லாம் விளக்கமா சொல்லி முடிச்சதும், “அது ஏன் ஒருத்தர் இறந்தா, பஸ்ஸை எரிக்கணும், கடையை உடைக்கணும்?”னு கேக்க ஆரம்பிச்சான். ஒருமாதிரியா சொல்லி விளங்க வைச்சேன். ஆனாலும், “ஏன்?ஏன்?”ன்னு கேட்டுகிட்டேயிருந்தான்.
1987ல அரசியல்ல கொஞ்சமே கொஞ்சமாவது நாகரீகச் சூழல் இருந்துது. இந்நாளைய அரசியல் நிலைமைகளைக் கவனிச்சா, இன்னிக்கு இருக்கிற வயசான/ வயசாகாத அரசியல்வாதிகள் யாரும் இறக்கவே வேண்டாம், நூறென்ன, இருநூறு வயசுகூட வாழட்டும்னு மனசார “வாழ்த்த”த் தோணுது!!
!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!
அமீரகத்தில் இந்த மாசம், இந்த வருஷத்தின் பன்னிரெண்டாவது “தொட்டில் குழந்தை”யை அஜ்மான் நகரில் ஒரு பள்ளிவாசலிலிருந்து கண்டெடுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் கல்பா நகரில், பிறந்து 12 மணிநேரமே ஆன இன்னொன்று !! எந்த நாட்டுக் குழந்தைகள் என்று தெரியவில்லை என்றபோதிலும் உடன் தத்து எடுக்கப்படவிருக்கின்றன!!
அதே சமயம், மருத்துவமனைகளில் IVF ட்ரீட்மெண்டில் உருவாக்கப்பட்ட கருமுட்டைகளை உறையச் செய்து (Frozen embryos - கருவா, கருமுட்டையா?) வைத்திருப்பது சட்டப்படி அனுமதிக்கப்படாது என்று இம்மாதம் இங்கு சட்டம் நிறைவேறியதால், அக்கருக்களை அவற்றின் பெற்றோர் விரும்பினால் வேறு நாட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்துகொள்ளலாம் என்று அம்மருத்துவமனைகள் கருவைச் சேமித்து வைத்தவர்களைத் தேடியபோது, அவற்றில் சிலர் (சொல்லாமலே) ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்களாம். ஒரு சிறு சதவிகிதத்தினர் தவிர, மற்றவர்கள், அந்தக் கரு தமக்குத் தேவையில்லையெனவும், அழித்துவிடலாம் எனவும் சொல்லிவிட்டார்களாம்!! எத்தனை அழிக்கப்பட்டவிருக்கின்றன என்று எண்ணிக்கையைச் சொல்ல மனம் வரவில்லை.
!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!
ஒரு முறை ஒரு சித்த(ஆயுர்வேத?) மருத்துவர் சொன்னதாகப் படித்தது: இயற்கை உணவுப் பொருட்கள் பெரும்பாலும், அதன் ஒரு நிலையில் உள்ள குணம், அடுத்த நிலையில் நேர்மாறாக இருக்குமாம். அதாவது, மாங்காய் குளிர்ச்சி என்றால் மாம்பழம் சூடு. தேங்காய் - குளிர்ச்சி; தேங்காயெண்ணெய் - சூடு; தே.பால் - குளிர்ச்சி; பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவையும் அப்படியே!! (சரியா?)
அதை வைத்து யோசித்துப் பார்த்தால், மனிதர்களும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. குழந்தைகள் - குளிர்ச்சி; டீனேஜ் - சூடு; நடுத்தர வயது - பெற்றோராவதால், பெற்றோரின் அருமைகள் தெரியவருவதால், கொஞ்சமாகக் குளிர்ச்சி; நாப்பது வயசு - நாய்க்குணம்!! அறுபதுகளில் - மீண்டும் குளிர்ச்சி!!
அதுக்காக, எனக்கும் சித்தர் பட்டம்லாம் தரவேண்டாம்!!
!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!
போன வாரம், ஒரு நாள், ரங்க்ஸ், பிள்ளைகளோட அலுவலகம் வந்து என்னை அழைத்துச் செல்வதாகப் பிளான்!! வந்துவிட்டதாக மிஸ்ட் கால் வந்ததும், கீழே இறங்கிச் சென்று, வெயிலுக்குப் பயந்து வெளியே செல்லாமல், உள்ளிருந்தே தலையை மட்டும் நீட்டி, இடது பக்கம் பார்த்தேன் - காரைக் காணோம்; வலதுபக்கம் பார்த்தேன் - இல்லை; வர்றதுக்கு முந்தியே என்னைக் கீழே வரவைச்சிட்டாங்களேன்னு எரிச்சலோட உள்ளே தலையை இழுத்துக் கொண்டபோது ஹார்ன் சத்தம் கேட்டது. பார்த்தால் எனக்கு நேரெதிரே, என் முன்னால் ஏற்கனவே வண்டி நிக்குது!! ஹி..ஹி.. வழிஞ்சுகிட்டே காரில ஏறினா, புள்ளைங்க, “ஏம்மா, ரோடு கிராஸ் பண்றமாதிரி இடமும், வலமும் மட்டும் பாத்துட்டு போறே?”ன்னு கிண்டல்!! நமக்கென்ன பல்ப் புதுசா என்ன!!
!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!
ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மால் வாசல்ல ஒரு டாக்ஸி டிரைவர்க்கும் (மலையாளி) அதில் வந்த சூடான் நாட்டுப் பெண்ணிற்கும் “சில்லறை”த் தகராறு!! ஒரு சிறு கூட்டம் கூடியது. அந்தப் பெண் அழகான ஆங்கிலத்தில் கோபப்பட, டிரைவரும் என்னவோ சொல்ல, ஒரு சிலர், டிரைவரை அமைதிகாக்கும்படி மெதுவாக அறிவுறுத்திக் கொண்டிருக்க.. நான் வேடிக்கை பார்க்க.. கூட்டத்திலிருந்து ஒரு சூடான் நாட்டு ஆண் பாய்ந்து வந்தார். டிரைவரை, பெண்ணிடம்போய் தகராறு பண்ணுவதற்காகக் கோபித்துவிட்டு அந்த வார்த்தைகளைச் சொன்னார்!!
இம்மாதிரிச் சூழ்நிலைகளில் நம் தங்கத் தமிழ்நாட்டில் மட்டுமே சொல்லப்படும் வார்த்தைகள் என்று நினைத்துக் கொண்டிருந்தவற்றை அவரிடம் கேட்டதிலிருந்து அது ‘உலகப் புகழ்’ பெற்றது என்று நிரூபணமானது. அதாங்க ... “நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?”
!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!
|
Tweet | |||