Pages

என் குத்தமா, உங்குத்தமா





சில வருடங்களுக்கு முன், இதுபோல பெய்த ஒரு பேய்மழையில், என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குள்ளும் வெள்ளம் புகுந்துவிட்டது.  செய்திகளில் மட்டுமே அதுவரை கண்டுவந்த ஒரு நிகழ்வு, முதன்முதலாக தெரிந்த ஒருவருக்கும் நிகழ்ந்தது என்றபோது, அதன் நடைமுறைத் தாக்கங்கள் தெரிய வர அதன் அதிர்ச்சியிலிருந்து நான் - நேரடியாகப் பாதிக்கப்படாத நான் - மீளவே பல காலமாயிற்று.

பெய்யும் மழையின் நீர் சுத்தமானது என்றாலும், அது கொண்டு வரும் வெள்ளம் மிக மிக அசுத்தமானது. அதில் வீட்டுப்பொருட்கள் மூழ்கும்போது, ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானவை அல்ல. வீட்டினுள் மழைவெள்ளம் புகுவது  என்பது மனம், உடல், பொருள், உறவு என எல்லா வகைகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்!!

வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் சகதி படியும்!!  எவ்வளவு சுத்தம் செய்து கழுவினாலும் நாற்றம் எளிதில் போகாது. துண்மணிகளை துவைத்த பின்னரும் உடுத்த மனம் வராது. எதிர்பாராமல் வந்த வெள்ளம் என்பதால், குழந்தைகளின் பள்ளிப்பைகள் முதல் பாஸ்போர்ட் வரை தண்ணீரில் ஊறிப் போயின. பள்ளிப் புத்தகங்களைக் கூட பின்னர் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், பாஸ்போர்ட் மாற்றுவதைவிட மறந்துவிடுவதுதான் நல்லது.

ப்போது எல்லார் மனதிலும், “ஏரி, குளம் இருந்த இடத்துல வீடு கட்டுனா வெள்ளம் வராம வேறென்ன வரும்?” என்று ஒரு எண்ணம் தோன்றும்!! இந்த இடங்களில் வீடு கட்டியவர்கள் எல்லாம் அனுமதி வாங்காமல் கட்டவில்லை! அது புறம்போக்கு நிலமும் அல்ல! படிப்பறிவு மிகுந்துவிட்ட இந்த காலத்தில், அரசின் அப்ரூவல் இருக்கிறதா என முறையாக எல்லாம் பரிசோதித்துத்தான் வாங்குகிறார்கள். எனில் இதில், மக்களைக் குறை சொல்வது என்ன நியாயம்?

புறநகர்ப்பகுதி என்பதால் இன்னும் குடிநீர், கழிவுநீர் வசதிகள் ஏன், பேருந்து வசதிகூட இல்லை என்றபோதும், விலை குறைவாகக் கிடைப்பதால், அத்தனை வசதிக்குறைவுகளையும் பொறுத்துக் கொண்டு,  வாழ்க்கையில் பாதியை அலுவலகம்/பள்ளி சென்று வருவதிலேயே தொலைக்க நேரிட்ட போதும், சொந்தமாக இருக்க ஒரு சிறு வீடு வேண்டும் என்ற ஒரு எளிய குடும்பத்தின் கனவு இல்லம் அது. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, ஏரியா கவுன்சிலர்களுக்கும்கூட கப்பம் கட்டி, கட்டிய வீடு அது.

இடத்திற்கான அப்ரூவல், கட்டும் வீட்டிற்கான அப்ரூவல் எல்லாம் அரசாங்கம்தானே தருகிறது? பிறகேன் கட்டியவர்கள் மீது பழி?

ன்னொரு பழி, கழிவுநீர் வடிகால்கள் எல்லாம் பிளாஸ்டிக்கால் அடைபட்டு விட்டன என்பது. அதுவும் உண்மையே. ஆனால், இந்த ப்ளாஸ்டிக் கவர்கள் எல்லாம், பயனீட்டாளர்கள் தம் வீட்டில் சொந்தமாக உருவாக்கிக் கொண்டவையா என்ன?

ப்ளாஸ்டிக் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது என்றால், அதை உற்பத்தி நிலையிலேயே தடுக்கும் வாய்ப்பு அரசுகளுக்கு இல்லையா? தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல, ப்ளாஸ்டிக் கவர்கள் உற்பத்திக்கு தடையில்லை. பயன்படுத்த மட்டுமே தடை என்றால்?

சரி, ப்ளாஸ்டிக் மறுசுழற்சி செய்யலாம்தான். ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவையாக, எளிதில் அணுகக்கூடியவையாக எத்தனை மறுசுழற்சி மையங்கள் உள்ளன? அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கே நேரம் போதாத சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு வலிந்து மறுசுழற்சிக்கு ஒதுக்க ஏது நேரம்?

உற்பத்திக்கு அனுமதி கொடுத்த அரசின் கடமையல்லவா உரிய முறையில் அகற்றலும், மறுசுழற்சியும்? எல்லாவற்றையும் மக்களே பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டிருந்தால், அரசாங்கம் எதற்கு?

ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மீது எந்த பொறுப்புமில்லை; ஆனால் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்தாம் அந்தப் பொறுப்பு என்பது என்ன நீதி?

மேலை நாடுகளில், ப்ளாஸ்டிக் பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும், தமது உற்பத்திகளில் ப்ளாஸ்டிக்கைப் பயன்படுத்தினாலும், அந்நிறுவனங்கள் மீது கூடுதல் வரி போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதன்மூலம் தமது தயாரிப்புகளில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்த அல்லது பொருட்களின் பயன்பாட்டு காலம் முடிந்த பின், கன்ஸ்யூமர்களிடமிருந்து அப்பொருளை மறுசுழற்சிக்கு வாங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இம்முறைக்கு Extended producer responsibility  என்று பெயர்.

நம் தமிழ்நாட்டிலேயே, முன்பு காளிமார்க் போன்ற உள்நாட்டுத் தயாரிப்பு குளிர்பானங்கள் வாங்கும்போது, அந்த போத்தலைத் திருப்பிக் கொடுத்தால்தான் அதை வாங்கும்போது அதிகப்படியாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2010 முதல் சில வருடங்கள் மட்டும் கடுமையான ப்ளாஸ்டிக் தடை இருந்தது. இந்தியாவில் சில சுற்றுலா தளங்களிலும் தடை உண்டு. அங்கெல்லாம் சாத்தியம் என்றால், பிற இடங்களிலும் சாத்தியமே. நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையே. ஆனால் அக்கடமைகள் இங்கு பயனாளிகளின் மீது ஒருதலைபட்சமாகத் திணிக்கப்படுகின்றன.

தைப்போலவே, ஒரு இடம் விற்பனைக்கும், வீடு கட்டுவதற்கும் உரிய இடம்தான் என்று ஒப்புதல் அளித்து ஒப்பிட்ட அரசு அலுவலர், அதன் விற்பனையைப் பதிவு செய்த அலுவலர், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான வரைபடத்தை சரிபார்த்து ஒப்பிட்ட அலுவலர் ஆகியோருக்கும், கொள்கை வரைந்த அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா இதில்? ஒரு சாதாரண பொதுஜனம் - காமன் மேன் - தான் வாங்கும் இடம் முன்பு ஏரியாகவோ, குளமாகவோ இருந்ததா என்பதை அறிந்து கொள்வதொன்றும் சுலபமில்லை. அரசு அந்த இடத்தை விற்க அப்ரூவல் கொடுத்திருக்கிறது என்பதுதான் பொதுஜனத்திற்கு இருக்கும் ஒரே உத்தரவாதம்.

மக்களின்மீது எந்தத் தவறுமே இல்லை என்றோ, மக்களுக்கு எந்தப் பொறுப்புமே இல்லை என்றோ வாதிடவில்லை. தனியொரு மனிதன் எல்லாவற்றையும் சுயமாக ஆராய்ந்தறிந்து சரியாக வாழ்ந்திட முடியும் என்றால், அரசாங்கம் எதற்கு, ஆட்சியாளர்கள் எதற்கு, அரசாங்கப் பணியாளர்கள்தான் எதற்கு?

மக்கள்தான் சுயபொறுப்போடு நடந்து கொள்ள வேண்டுமென்றால், ஏன் டாஸ்மாக்கை மூடச் சொல்லிக் கேட்கிறோம்? மக்கள் கட்டுப்பாட்டோடு இருந்துகொண்டால் போதுமே?

தாம் எடுக்கும் முடிவுகளுக்கும், போடும் கையெழுத்துகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் ஒரு போதும் தான் ஜவாப்தாரி இல்லை என்ற தைரியம்தான் தொடர்ந்து இத்தவறுகள் நடக்க வாய்ப்பாகின்றன.  வழக்கமாக, அனுமதி பெற்ற அளவைவிட அதிக இடம் ஆக்கிரமித்து விட்டார்கள் அல்லது கூடுதல் தளங்கள் கட்டிவிட்டார்கள் என்று அரசு தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அதேபோலே,மழைநீர் புகுந்த வீடுகளின் உரிமையாளர்களில் ஒருவராவது இவ்வாறு ஏரி-குளமாக இருந்த இடத்தை விற்கவும், வீடுகட்டவும் அனுமதித்தது தவறு என்று, கையொப்பமிட்ட அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளின்மீது வழக்குத் தொடர வேண்டும்!!

Post Comment

பெண்ணிய பேலியோ!!




ழக்கமா, மட்டன் வாங்கிட்டு வரும்போதெல்லாம் எங்கூட்ல எனக்கும் எங்கூட்டுக்காரருக்கும் ஒரே வாக்குவாதமாத்தான் இருக்கும்.(வாங்காட்டியும் இருக்கத்தான் செய்யுங்கிறதைச் சொல்லணுமா என்ன.... காரணத்துக்கா பஞ்சம்?)

”கொழுப்பைக் கழிக்கிறேன்னு இம்புட்டு  கழிக்கிறே... கொஞ்சமாச்சும் கொழுப்பு இருந்தாத்தான் ருசி இருக்கும்...”

“அப்படியொண்ணும் ருசியாத் திங்க வேணாம்... ஏற்கனவே பிறப்பிலேயே இருக்கிறது காணாதுன்னு சாப்பாடுலயும் கொலஸ்ட்ரால் சேர்க்கணுமா...”

ருசியைச் சொன்னால் வழிக்கு வரமாட்டேன் என்று, உடனே பொருளாதாரம்  பேசுவார். விலையைச் சொன்னா, நகையைக் கூட வேண்டாம்னு சொல்றவ நான் என்ற தந்திரம் அறிந்தவர்!!

“மட்டன் என்ன விலை தெரியுமா? இப்படி ஒரு கிலோவுல கால்கிலோவை கொழுப்புனு கழிச்சா எவ்வளவு பணம் வேஸ்டாகுது?” 

“ம்ம்.. டாக்டருக்குக் கொடுக்கிற பணம் மிச்சமாகுதே... அதுக்கு இது சரியா வரும்... போங்க பேசாம...”
 
ப்படித்தான், ”Red Meat” வகைகள் உடலுக்கு நல்லதில்லை என்ற “ஆரோக்கியக் குறிப்பை” நம்பி மட்டன் வங்குவதே அரிதாகி வந்த நிலையில்... பேலியோவுக்கு வந்தபின், மட்டன் நிறைய உண்ணலாம் என்ற உண்மை தெரிந்ததும், அதுவும் கொழுப்போடு சேர்த்து உண்ண வேண்டும் என்று தெரிந்து கொண்டதும், அதற்கும் குற்ற உணர்ச்சி வந்தது!!
 
பேலியோவுக்குப் பின், கடைக்குப் போயிருந்த போது, மட்டன் செக்‌ஷனில் ஆர்டர் கொடுத்து விட்டு கடைக்காரர் கறியை வெட்டுவதைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். நான் பேலியோவுக்கு வந்தபின் “திருந்திய” கதையெல்லாம் பக்கத்துல நின்ன என்  ட்டுக்காரருக்கு தெரியாது.

பரிதாபமா, “பாரு, இங்கயே எவ்ளோ கொழுப்பைக் கழிக்கிறாரு பாரு.. அதோடு சேந்து எவ்ளோ மட்டன் வேஸ்டாகுதுன்னு பாரு... அவர்கிட்ட சண்டை போட்டு கொழுப்பைக் கழிக்கச் சொல்லி வாங்கிட்டு வந்தா, சரியாவே வெட்டி வாங்கலைன்னு நீ என்கிட்ட சண்டை போடுற. அதுக்கு மேலே நீயும் கொழுப்பைக் கழிக்கிறேன்னு கழிச்சு, ஒரு கிலோ மட்டனை அரைகிலோவா ஆக்குறது மட்டுமில்லாம, டேஸ்டா இல்லாம ஆக்கிடுற...” என்றார்.
 
”மனம் திருந்திய மனைவி”யாக நான் என் மனதிற்குள், “இல்லங்க, இனிமே கொழுப்பை வெட்ட வேணாம்னு சொல்லுங்க.. கொழுப்பு நல்லதாம்..” என்று நினைத்துக் கொண்டாலும், சொல்ல நா எழவில்லை. தயங்கியே நின்றேன்... 
 
ந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக்... 18 வருடங்கள் முன்பு....
 
கல்யாணமான புதிதில் என் மாமியார் ஒருமுறை என்னிடமும், என் மச்சினர் மனைவியிடமும் , “சாயாக்கு இஞ்சி போடும்போது, தோலைச் சுரண்டிட்டு போடுங்கோ.. தோல் நல்லதில்லை” என்றார். நாங்க ரெண்டு பேரும் பெரிசா கண்டுக்கலை. பின்னர் ஒரு நாள் வீட்டுக்கு வந்த என் பெரிய மைனி, “இஞ்சியோட தோல் விஷமாம். தோல் சேர்க்காமதான் டீயில போடணுமாம். அந்தப் பத்திரிகையில் போட்டிருந்தாங்க. வெளிநாட்டுல இன்ன ரிசர்ச் செண்டர்ல ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க” என்று ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியைப் புள்ளி விபரத்தோடு சொன்னார். 

அதிலிருந்து நாங்கள் ஒழுங்காக தோலைச் சீவிவிட்டுப் போட ஆரம்பித்தோம். அதைப் பார்த்த என் மாமியார், “படிக்காத கிழவி சொன்னா ஏத்துக்க முடியலை. படிச்சவ வந்து இங்லீஷ்ல சொன்னவுடனே கேட்டுகிடுறீங்க என்ன?” என்று கிண்டல் செய்தார்.
 
தேபோல, இப்போ அவர் சொல்லி கேட்க இந்த விஷயத்தை பேலியோ க்ரூப்ல பாத்து தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னா, ”புருஷன் சொல்லி பொண்டாட்டி கேட்டதா சரித்திரம் உண்டா”ன்னு கிண்டல் பண்ணக்கூடாதே.... அதனால வெளியே சொல்லிக்காம, திருந்துன விஷயத்தை உள்ளுக்குள்ளயே வச்சுகிட்டேன்.  

முன்னல்லாம் ஒரு கிலோ மட்டனை அக்குவேறா ஆணிவேறா பிரிச்சு சுத்தம் பண்ண எனக்கு குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகும்!! இப்பலாம், கை துறுதுறுன்னு வந்தாலும் கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணி - 18 வருஷப் பழக்கத்தை திடீர்னு விட்டுட முடியுமா? - அரைமணி நேரத்துல க்ளீன் பண்ணி முடிச்சுடுறேன்.
 
டுத்து, அரிசி கோதுமை தவிர்ப்பதால், இட்லி, தோசை, சப்பாத்தி, நாண், இடியாப்பம், ரொட்டி, பாலாடைன்னு அதிக நேரம் எடுத்து செய்ய வேண்டியிருந்த வேலைகள் இப்போ இல்லை. ஏதாச்சும் ஒரு க்ரில், வறுவல், பொரியல்,குழம்புன்னு சமையல் இப்ப ரொம்ப ஈஸியா முடியுது!! (இது குடும்பத்தில் எல்லாருமே பேலியோவாக இருந்தால்தான் சாத்தியம்) இப்படியாக, பேலியோவுக்கு வந்ததன் முதற்பயனாக நேரமும், உழைப்பும்(!!!) மிச்சப்படுகிறது.
 
ன்னுமொரு முக்கியமான விஷயம், முந்தைய பதிவில் சொன்னதுபோல, பெண்களின் சரிவிகித உணவு. சாதாரணமா, பெண்கள் மட்டன் சிக்கன் போன்றவைகளை, வீட்டில் சமைச்சாலும் அதிகமா சாப்பிடமாட்டாங்க.  ஏன்னா, பிள்ளைங்களுக்கு, புருஷனுக்குன்னு எடத்வச்சுடுவாங்க. ஆனா இந்த டயட்ல இது மட்டுமே சாப்பிட்டாகணும் என்பதால், சத்துக்கள் முறையா கிடைக்கும். 

ப்படி எல்லா வகையிலும் சமைக்கும் பெண்களுக்கு முழு ஆதரவாக இருக்கும் பேலியோ டயட்டைக் கண்டுபிடித்தவர் கண்டிப்பாக ஒரு பெண்ணாக இருக்க முடியாது. ரசம் காய்ச்சி, பொறியல் வைக்கவே நேரம் சரியாக இருக்கும்போது, எங்கே ஆராய்ச்சி - அறிவியல் செய்ய... பெண்களுக்கு உதவும் மிக்ஸி, க்ரைண்டர், வாஷிங் மெஷின் போன்றவைகளைக் கண்டுபிடித்ததும் ஆண்கள்தான்.  தப்பித்தவறி, அந்த வேலையைச் செய்ய நேர்ந்ததுதான் காரணமாக இருக்கலாம்.

 என் தோழி, அவர் கணவரிடம் வெந்நீர் போட கெட்டில் வாங்கிக் கேட்டார், கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து, அவருக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாதபோது, அவரது கணவர் டீ போட அடுக்களைக்குப் போனார். முதலில் அடுப்பில் வெந்நீர் வைத்தார். அது சூடாகுது, சூடாகுது, சூடாகிகிட்டே இருக்குது. கொதி வரதுக்குள்ளே வெறுத்துப் போ அவர் செய் முல் வேலை, உடனே ஒரு கெட்டில் வாங்கிக் கொடுத்ததுதான்!!

 அதே போல, இந்த டயட்டைக் கண்டுபிடித்ததும், ஒரு நாள் - ஒரே ஒரு நாள் - கரண்டியைக் கையில் பிடிக்க வேண்டிய நிர்பந்தம் வந்த ஒரு ஆணாகத்தான் இருக்குமோ???!!

Post Comment