Pages

ரசிப்பும் ருசிப்பும் வியப்பும்.....




செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா...

இந்தப் பாடலை ரசிக்காதவர் யாரும் இருக்க முடியாது...  அதிலும், அதில் வரும்... 

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்  போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்”

போன்ற உருவகங்கள்...  அதுவரை இதுபோல யோசித்திராதவர்களைக்கூட, அதன்பிறகு இயற்கையில்  காணும் எல்லாவற்றையும்  கலைக்கண்ணோடு பார்க்க வைக்கும்! 

மரம், மலை, மலர், மழை, மேகம், மருண்டோடும் மான்... 
இப்படி எதுவானாலும் அதன் அழகை ரசிப்பது என்பது அனைவரும் விரும்பிச் செய்யும் ஒன்று.

இயற்கையின் அழகை ரசிப்பதற்காகவே பல இடங்களுக்கும் சுற்றுலா செல்லும் வழக்கமும் நம்மிடத்தில் உண்டு!!

அழகில் லயித்து ரசிக்கும் ஒரு சாமான்யன், ஒரு கவிஞனாக மாறி அதைக்  கவிதையாக வடிப்பதும்,  கலைஞனாக  புகைப்படங்களில் பதிவு செய்வதும் ரசிப்புக் கலையின்  அடுத்த கட்டங்கள். 

இயற்கை அழகும், அது தூண்டிவிடும் ரசிப்புத் தன்மையும் ஒரு  சாதாரணமானவனையும்கூட கலைஞனாக மாற்றிவிடக்கூடிய அளவுக்கு வலிமையானவை!! 

சரி.... எல்லாவற்றையுமே இப்படியே ரசித்துக் கொண்டிருந்தால் மட்டுமே போதுமா? அதற்காகத்தான் - அதற்கு மட்டும்தான்-  அவை படைக்கப்பட்டிருக்கிறதா? கண்களால்  ரசிக்க மட்டும்தானா?  

அழகை ரசிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், அந்த ரசனை நம்மை அதன் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறதா? 
மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்க்கவும் கேட்கவும் வைக்கும் அழகும், இனிமையும்  அதன் அடுத்த கட்டமான சிந்தனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டாமா? 

நாம் ரசிக்கும் அந்தப் படைப்பைக் குறித்துச்  சிந்திக்க வேண்டாமா? அதன் படைப்பின் பிரம்மாண்டம், துல்லியம், நுணுக்கம், நோக்கம், செயற்பாடுகள், பயன்கள், விளைவுகள் நம்மை அதிர வைக்க வேண்டாமா?  

படைப்பே இப்படி அதிர வைக்கிறதென்றால், அதைப்  படைத்தவன் எப்பேர்ப்ட்டவனாக இருப்பான்?

சிந்தித்திருக்கிறோமா? அல்லது அழகில் மட்டுமே மயங்கி மதிமறந்துவிட்டோமா?

ண்ணீரில்லாமல் மீன் உயிர் வாழுமா என்ன? "தரையில் துடிக்கும் மீன் போல..." என்று உவமானம் சொல்லப் படித்திருக்கிறோமே...  அப்படிஎன்றால், நீரில்லாவிட்டால் மீன் இறந்துவிடும் என்றுதானே அர்த்தம்? ஆனால், தரையிலும் மீன்கள் தண்ணீரின்றி வாழும். வீடியோ பாருங்கள். Lungfish வகை மீன் 3- 7 வருடங்கள்  வரை தாக்குப் பிடிக்குமாம்!!



மீபத்தில் ஒரு இளைஞனுக்கு, காது சரியாகக் கேட்பதில் பிரச்னை இருந்ததால், காது கேட்கும் கருவி ஒன்றைப் பொருத்தினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அதைப் பயன்படுத்த மறுத்துவிட்டான். காரணம்?

அதிகச் சத்தமாகக் கேட்கிறதாம்!! அதற்கு மெலிதாகக் கேட்பதே பரவாயில்லை என்று சொல்லிவிட்டான்.   :-(

தே சமயத்தில் கிடைத்த இன்னொரு தகவல் இன்னமும் ஆச்சரியப்படுத்தியது.

சிறு வயது முதல் காது கேட்காத ஒரு பெண், பல வருடங்கள் கழித்து கனடாவில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். தலைக்குள் ஒரு கருவியை வைக்கிறார்கள்.

இப்போது அவருக்கும் அதே போல பிரச்னை! என்னவென்றால், நுண்ணிய ஓசைகளும் பெரிதாகக் கேட்கின்றனவாம். ஒரு பேப்பரில் பேனாவால் எழுதினால், அந்த எழுதும் ஓசை கூட கேட்கிறதாம். பத்தாவது மாடியில் இருக்கும்போது, கீழே செல்லும் வண்டிகளின் சப்தம் கேட்கிறதாம்!! இன்னும் பலப்பல....

அந்த இளைஞனாவது கருவியைக் கழட்டிப் போட்டு விட்டான். இப்பெண்ணுக்கோ தலைக்குள் கருவி!! எத்தனை முறை அறுவை சிகிச்சை செய்ய முடியும்?

//The secondary function of the auditory ossicles is the attenuation of sound waves #to_control_the_volume_of_sounds_reaching_the_inner_ear. A pair of skeletal muscles, the tensor tympani and stapedius, contract to reduce the vibration of the malleus and stapes in response to loud sounds. Sound attenuation is very important in daily life by limiting the sounds produced during chewing and the sound of one’s own voice while talking.//
http://www.innerbody.com/anato…/skeletal/head-neck/bones-ear

விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும், எத்தனையெத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும், இறைவனின் படைப்பின் துல்லியத்தை விஞ்ஞானத்தால் அடைய முடியாது!!

67:23. (நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் #செவிப்புலனையும்#பார்வைகளையும் #இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.

அதன் நுட்பத்தை, பிரம்மாண்டத்தை உணர்ந்தால் மட்டுமே, நன்றி உடையவர்களாக இருக்க முடியும்!!


அழகை ரசித்து ருசிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.  ரசிப்பவனால்தான்   அதனைப் படைத்தவனை நேசிக்கவும் முடியும்.

Post Comment

வாய்ச்சொல்லில் வீரர்கள்





வெள்ளிக்கிழமை, ஷர்ஜாவில் நடக்கும் புத்தகக் கண்காட்சியைப் பார்க்கப் போகலாம் என்று திட்டமிட்டபோது, அதே வெள்ளியன்று, திரு.ஸ்டாலின் மற்றும் திரு. எஸ்ரா இருவரும் அந்தக் கண்காட்சியில் உரையாற்றுகின்றனர் என்றறிந்தபோது அட! என மகிழ்ச்சியாக இருந்தது.  இந்தியா செல்லும்போது இம்மாதிரி நிகழ்வுகளுக்குச் செல்லும் “பாக்கியம்” கிட்டுவதில்லை. அமீரகத்திலோ அது ஒரு “நீல நிலவு” சம்பவம்.... எல்லாம் ஒன்றாகக்கூடி வந்ததில்,  கண்டிப்பாக இருவர் உரையையும் கேட்க வேண்டும் என்று  சில நண்பர்களோடு இணைந்து திட்டமிட்டுக் கொண்டோம்.

அரசியல்வாதியின் நிகழ்ச்சியில் எனக்கென்ன வேலை என்றால்... ஆர்வக்கோளாறுதான், வேறென்ன? மேலும், நம்ம ஊரில் நேரம் பேணாமல்  இழுத்தடிப்பதைப் போல,  இங்கே அமீரகத்தில் செய்ய வாய்ப்பில்லை என்று நம்ம்ம்ம்பிப் போனேன்!! :-( 

மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க வேண்டும். ஆனால்.... ம்ஹூம்.....  நம்ம ஊரைப் போலவே “வருகிறார், வந்துகொண்டிருக்கிறார், வந்தே விட்டார்....” என்று அறிவிப்புகள்தான் வந்துகொண்டிருந்ததே தவிர.... 
 
 
மிழ்நாட்டைப் போல இல்லை இங்கு - எத்தனை மணியென்றாலும் காத்து இருக்க.  திமுக - கலைஞர் - தமிழகம் மீது கொண்ட நேசத்தினால் தானாக வந்தவர்கள்.  முக்கியமாக, ஒவ்வொருவரும் அமீரகத்தின் ஒவ்வொரு முக்கு மூலையிலிருந்து வந்திருப்பவர்கள். அனைவரும்  வாகன வசதி கொண்டவர்கள் அல்ல.  குறித்த நேரத்திற்குள் செல்லவில்லை என்றால், தம் கையிலிருந்து அதிகப்பணம் கொடுத்து தம் இருப்பிடம் சென்று சேர வேண்டிய நிலையில் உள்ளவரக்ள். இது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு நன்றாகவேத் தெரியும். இருப்பினும் இவ்வளவு தாமதம் செய்தது மிக்க ஏமாற்றமளிக்கிறது.

ஒருவழியாக அவர் மேடையேறிய பின்பாவது அவர் உரை உடனே தொடங்கியதா என்றால்.... அதுவுமில்லை.... வரவேற்புரை, அறிமுக உரை ( அதுவும் ஸ்டாலினுக்கு?? தமிழர்கள் மத்தியில்??) என்று ஆரம்பித்து, பின்னர் புத்தகம் பரிசளிப்பு என்று சொல்லி பெருந்திரளானோரையும் மேடையேற்றி.....  கிட்டத்தட்ட திமுக நிகழ்ச்சி போலவே நடந்தது நிகழ்வுகள்!! :-( 

இனி அமீரகமேயானாலும், தமிழக பெருந்தலைகளின் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்ற பாடம் கிடைத்தது. 


ஸ்டாலின் அவர்களின் உரையைப் பற்றிப் பலரும் பேசும்போது, தந்தை கலைஞரைப் போல ஈர்க்கும் திறமை இல்லை என்று கூறுவார்கள். அவர் தந்தையோடு அவரை ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான  திறமை. 

மேலும், மேடைப்பேச்சைக் கொண்டுதான் ஒருவரின் செயல்திறனைத் தீர்மானிக்க  வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. பேச்சுத்திறமைக்கு முக்கியவத்துவம் கொடுப்பதால்தான், இன்று விவாத மேடைகளில் சத்தமாகப் பேசுபவர்களே வல்லவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 

இந்த எண்ணத்தினால்தான் மன்மோகன்சிங் என்ற திறமையாளரை இழந்து, இப்போது பேச்சில் மட்டும் மன்னர்களைக் கொண்டுள்ளது  இந்நாடு.  வாய்ச்சொல்லில் வீரர்கள் அல்ல நமக்குத்  தேவை.  அதிகம் பேசாமல், செயலில் சாதிப்பவர்களே நம் நாட்டுக்கு  இன்றைய அதிவசரத் தேவை. 

(எனக்குலாம் பேசவே தெரியாது என்பதையும் இத்தருணத்தில் இந்நாட்டுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ) 

எனினும்,  ஒரு திறமையான தலைவரை தந்தையாகக் கொண்டு இருப்பவர், அவரிடமிருந்து எத்தனையோ நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் வாழ்நாள் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பது உண்மை. 

ந்த விழாவில் கலந்து கொண்டதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி என்பது நம் நாட்டு தேசிய கீதத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாட, வெகு காலங்களுக்குப் பிறகு ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்பதுதான்!! தமிழ்த்தாய் வாழ்த்து மறந்து போயிருக்குமோ என்று அச்சத்தோடுதான் வாயைத் திறந்தேன்....  ஒரு வார்த்தைகூட மறவாமல், பிறழாமல் பாட முடிந்ததில் எனக்கும்,  உடன் வந்திருந்த  யாஸ்மினுக்கும் பேரதிர்ச்சி!! 
 


டுத்து, சிறிது நேரத்தில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உரையைக் கேட்கச் சென்றோம். முந்தைய நிகழ்ச்சியைப் போலல்லாது இவரது உரை சற்று ஆறுதலாக இருந்தது. 

எழுத்தாளர்களுக்குப் பெரிதாகச் சம்பாத்தியம் கிடையாது, மனத்திருப்திக்காகத்தான் எழுதுகிறோம் என்றார். ஒரு கதைக்கு நூறு ரூபாய்தான் தருகிறார்கள், சரவணபவனில் தோசைகூட நூறு ரூபாய்க்கும் அதிக விலையாம். அவர் இதுவரையிலும் வேறு வேலைக்கும் போனதில்லையாம். அப்படின்னா... அப்படின்னா... சில கேள்விகள்.... யாரிடம் கேட்க? கேள்வி நேரத்தில்,   அவரது எழுத்தைப்  பற்றித்தான் அவரிடம் கேள்விகள் கேட்கச் சொன்னார்கள் என்பதால்  இக்கேள்வியை மனதினுள்ளே பூட்டிக் கொண்டேன். 
 

ரு பெரிய  ஆதங்கம் என்னன்னா,  எழுத்து - புத்தகங்கள் - வாசிப்பு சம்பந்தப்பட்ட தமிழகத்தின் இரு பெரும் பிரபலங்கள் ஒரு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு வந்திருக்காங்க...  எனினும், புத்தகக்கண்காட்சியில் தமிழ்ப்புத்தகங்களுக்கு என்று கடை இல்லை.  கடைகளில்தான் தமிழ்ப்புத்தகங்கள் இல்லை;  இருவரின் நிகழ்ச்சி அரங்குகளிலாவது தமிழ்ப் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருக்க ஆவண செய்திருக்கலாம்!!
 
மாலைநேரம் மட்டுமே திறந்திருந்த புத்தகக் கண்காட்சியில் , இரு நிகழ்ச்சிகளுக்குப் போனதில், புத்தகக் கடைகளைப் பார்வையிட நேரம் கிட்டவில்லை என்பதில் எனக்குக் கவலை; வீட்டுக்காரருக்கோ பர்ஸ் தப்பியதில் கன மகிழ்ச்சி!!
 

Post Comment

மூன்று ஆட்சிகளும் ஒன்றுதான்




மூன்று வெவ்வேறு பிரதேசங்களில் - கண்டங்களில்  நடந்த இஸ்லாமிய ஆட்சி பற்றிய புத்தகங்கள் இவை:

1. ஆப்பிரிக்காவில் முஸ்லிம் ஆட்சி - சையித் இப்ராஹீம்
2. ஸ்பெயின்: முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - எஸ்.ஏ.காஜா நிஜாமுத்தீன் யூஸூஃபி
3. இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்தவை, சாதித்தவை - P.சிராஜுதீன்

 

ஆப்பிரிக்காவில், இஸ்லாமிய கிலாஃபத்தின் தொடர்ச்சியாக, கலீஃபா உமர்(ரலி) அவர்களின் காலத்தில், முதன் முதலாக எகிப்தில் கி.பி.639ல்  இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்தப்படுகிறது. அன்று முதல், 1800களின் இறுதியில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படும் வரை அங்கு இஸ்லாமிய ஆட்சியே நடந்தது. எகிப்தைத் தொடர்ந்து, லிபியா, துனிஷியா, அல்ஜீரியா, மொரக்கோ, ஸொமாலியா, சூடான், எதியோப்பியா உள்ளிட்ட பல மத்திய ஆப்பிரிக்க நாடுகள் வரை இஸ்லாம் பரவியது.

ஸ்பெயினில், கி.பி. 712 முதல் கி.பி.1492 வரையிலான 780ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி இருந்தது. இங்கு அரசாண்ட ஒரு கொடுங்கோல் மன்னனிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, இஸ்லாமிய கிலாஃபாவின் உதவியை ஸ்பெயின் மக்கள் நாடுகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக,  தாரிக் பின் ஸியாத் என்ற சிறுவயது இளைஞனின் தலைமையில் படை சென்று மன்னரை வீழ்த்தி, மக்களைக் காக்கின்றனர். அவ்வாறே அங்கு இஸ்லாமிய ஆட்சி ஏற்படுகின்றது.

இந்தியாவிலும் இது போன்ற ஒரு சூழலில்தான் முஸ்லிம்கள் ஆட்சி ஏற்படுகின்றது. பாகிஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய பகுதிகள் அடங்கிய சிந்து நாட்டின் மன்னனான தாஹிர்  என்ற உதய வீரன். இந்நாட்டின் கடற்கரையில் புயலால் ஒதுங்கிய இலங்கையிலிருந்து  வந்த கப்பலில் இருந்த முஸ்லிம் பெண்கள், குழந்தைகளைச் சிறையில் அடைத்தான். அவர்களை மீட்க முஹம்மது பின் காஸிம் என்ற 17-வயது தளபதி, கலீஃபாவின் ஆணையின் பேரில் படையெடுத்து வந்து, வெற்றி கொண்டு கி.பி. 711-ல் ஆட்சியமைத்தார். அது முதல், 1857-ல் முகலாய மன்னர் பகதூர்ஷா ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்படும் வரை இந்தியா (சிற்சிறு இடைவெளிகளுடன்) முஸ்லிம் ஆட்சியில் இருந்தது.

பிரதேசங்கள் வெவ்வேறு என்றாலும், அவர்கள் ஆட்சி நடத்திய முறைகளில் பெரிதும் வித்தியாசமில்லை. இடம், காலம்தான் வேறே தவிர அம்மன்னர்கள் ஒரே மாதிரியான பிரச்னைகளைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது; அல்லது ஏற்படுத்தினார்கள்!!!

ஆப்பிரிக்க மற்றும் ஸ்பெயினில் ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மன்னர்களையும்,

இந்தியாவில் ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், முஸ்லிம் மற்றும் இந்து மன்னர்களையும்

போர்களில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

முஸ்லிம் மன்னர்கள் ஏன் முஸ்லிம் மன்னர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதற்கு, அவர்கள் ஏன் கிறிஸ்தவ-இந்து மன்னர்களை எதிர்கொண்டார்கள் என்பதற்கான அதே காரணம்தான் - மண்ணாசை!!

இம்மன்னர்கள், மக்களை முஸ்லிம் - முஸ்லிமல்லாதவர் என்ற பாகுபாடுகள் இன்றி ஒரே மாதிரியே நடத்தினார்கள். நல்லாட்சி என்றால் எல்லாருக்கும் நல்லாட்சி; கொடுங்கொலன் என்றால் எல்லாருக்கும் கொடுங்கோலன்!! இஸ்லாமிய மதம் போலன்றி, இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களில் மதத் தலைவர்கள் - குருமார்கள் - மடாதிபதிகள், அந்தணர்களுக்கும், மற்ற மன்னர்கள் கொடுத்தது போலவே, பெரும் மானியங்கள் தடையின்றி கொடுக்கப்பட்டு வந்தன. கோயில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் தாராளமாக நிதி அளிக்கப்பட்டது.

மூன்று பிரதேசங்களிலும் முஸ்லிம் மன்னர்கள் வெகுகாலங்களுக்கு ஆண்டார்கள் என்ற போதிலும், அவர்கள் ஒன்றும் முழுமையான  இஸ்லாமிய ஆட்சியை நிறுவி விடவில்லை!! ஆட்சி நிறுவப்பட்ட சொற்பமான ஆரம்ப காலங்கள் மட்டுமே சில மன்னர்கள், இஸ்லாமிய முறையில் நீதியோடு அரசாண்டார்கள். அதன்பின்னர், வாரிசுச் சண்டைகள், பதவி ஆசைகள், பொருளாசை, மண்ணாசை போன்றவற்றால் அவர்களுக்கிடையிலேயே போரிட்டுக் கொண்டதில் இஸ்லாம் பெயரளவில் மட்டுமே அவர்களிடம் இருந்தது!! 

இடையிடையில், இஸ்லாமைச் சரிவரக் கடைபிடிக்கும் ஒரு மன்னர் அரிதாகத் தோன்றி நீதமான ஆட்சி தருவார். அவருக்குப் பின்னர், அல்லது அவரையும் கொன்றுவிட்டு, அடுத்த ஆட்சியிலிருந்து மீண்டும் குழப்பங்கள் தலையெடுக்கும். ஆகவே, இவர்களை எதிர்கொள்வது எதிரிகளுக்கு எளிதாக இருந்தது.

ஒன்று,  எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், மன்னரின் எதிரியிடம் ஆட்சியைப் பிடிக்க உதவுவதாகச்  சொல்லிக் கையில் போட்டுக் கொண்டு உள்ளடி வேலைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வது எளிதாகவே இருந்தது.

அல்லது, முஸ்லிம் மன்னர்கள் தம் மதத்தை அழிக்க முயல்வதாகச் சொல்லி, ஆப்பிரிக்கா மற்றும் ஸ்பெயினில் சக கிறிஸ்தவ மன்னர்களிடமும், இந்தியாவில் சக இந்து மன்னர்களிடமும் மத உணர்வைத் தூண்டி ஒன்றிணைந்து போரிட்டு வெல்வது!!

இந்தியாவின் திப்பு சுல்தான் குறித்த வெறுப்புரைகளும் இவ்வகையைச் சேர்ந்ததே...  அதற்கு ஒரு இந்து மடாதிபதியே கொடுத்திருக்கும் மறுப்பைப் பாருங்கள். (நன்றி சகோ. ரபீக்)

ட்சியிலிருக்கும் முஸ்லிம் மன்னர்களே இஸ்லாமைச் சரியாகப் பின்பற்றுவதில்லை; இஸ்லாமைப் பரப்ப (மிஷனரிகள் போன்ற) எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை) அவர்கள் கோயில்கள் - சர்ச்சுகளின் நிதியையும் தடுக்கவில்லை; மடாதிபதிகள் - அந்தணர்களுக்கான மானியத்தைத் தடுக்கவில்லை என்றபோது, இந்தத் தந்திரோபாயத்தின் அவசியம் என்ன என்பதில்தான் இஸ்லாமிய மன்னர்கள் மீதான கட்டுக்கதைகளின் சூட்சுமம் உள்ளது!!

கிறிஸ்தவ ஆட்சிகளிலும் சரி, இந்து மன்னர்கள் ஆட்சியிலும் சரி, மன்னரைவிட பெரும் சக்தி கொண்டவர்கள் மத குருமார்கள்!! அவரது ஆலோசனை பெற்றுத்தான் மன்னர் இயங்குவார். பெரும் இராஜ்ஜியத்திற்கே மன்னன் - பேரரசன் என்றாலும், ராஜகுருவை மீறி, எதுவும் செய்துவிடமுடியாது!! அவர்களது கண்ணசைவில்தான் ஆட்சி நடந்து வந்தது. மடாதிபதிகளும் மதகுருமார்களும் பெரும் செல்வாக்கு பெற்றவர்களாக,  மன்னரைவிட அதிகாரம் படைத்தவர்களாகத் திகழ்ந்தனர்.

இன்றைய ஆட்சியில், சாமியார்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும், அதிகாரங்களும், சலுகைகளும் இதற்கு உதாரணம்.

னால், இஸ்லாமிய ஆட்சி வந்தபின்பு நிலைமை தலைகீழாக மாறியது!! மக்கள் அவரவருக்குப் பிடித்தமான மதத்தைப் பின்பற்றுவதில் எந்தத் தடையும் இல்லை. கோவில்கள், மதகுருமார்களின் மானியத்திலும், வசதி வாய்ப்புகளிலும் எந்தக் குறைவுமில்லை என்ற போதிலும், அரசவையில் அவர்களின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம், இஸ்லாத்தில் மதகுருமார்கள் என்று சிறப்பு படைத்தவர்கள் யாரும் இல்லை. மன்னனோ, பொதுஜனமோ எல்லாரும் இறைவனின் முன்பு சமமே. இறைவேதத்தைப் படிப்பதும், தொழுகை உள்ளிட்ட மார்க்கக் கடமைகளைச் சரிவரச் செய்வதும் பாரபட்சமின்றி அனைவருக்கும்  கட்டாயம் என்பதால், குருமார்கள் என்ற ஒரு பிரிவின் அவசியமோ தேவையோ இல்லாதிருந்தது. ஆட்சி நடத்த அமைச்சரவையின் ஆலோசனைகளே போதுமாயிருந்தது.

இன்னொரு பிரதானக் காரணம், இஸ்லாம் போதிக்கும் #சமத்துவம்!! தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைத்து, அவர்களைத் தமது அடிமைகளாக வைத்திருந்தவர்களுக்கு, இனி அவர்கள் தமக்கு ஏவல்கள் செய்ய மாட்டார்கள் என்பதோடு, தமக்குச் சமமாக அமர்வார்கள் என்பதையும் ஜீரணிக்க முடியவில்லை.

ஆகவே, அதிகாரம் மற்றும் புகழை இழந்த குருமார்களே இவ்வாறான தந்திரோபாயத்தின் பிண்னணியில் இருந்தனர். கிறிஸ்தவ மதத்தைப் பிரதானப்படுத்தியே சிலுவைப்போர்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் குஸ்ரூகான் மற்றும் விஜயநகரப் பேரரசின் மன்னன் ராமராஜ் ஆகியோர் இவ்வாறு மத உணர்வைத் தூண்டி போர் தொடுத்ததற்கு இரு உதாரணங்கள். 

தே போல, போர்களின்போது, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களும், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும் அதிகமாகத் தாக்கப்படாவிட்டாலும், இந்தியக் கோயில்கள் அதிகமாகத் தாக்குதலுக்குள்ளாகியதன் காரணம், அங்கு குவிந்திருந்த செல்வங்கள்தாம்!! கோவில்களைக் கொள்ளையடித்தவர்கள் முஸ்லிம் மன்னர்கள் மட்டுமல்ல. ஒரு உதாரணம்: ஈழம், சேர, பாண்டிய, சாளுக்கிய அரசுகளுடன் போரிட்டு,  அங்குள்ள கோவில்களிலிருந்து கொண்டு வந்த செல்வங்களையும், போர் அடிமைகளையும் கொண்டுதான் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது!!

ஏன், இன்று திருவனந்தபுரம் அனந்த பத்மனாபபுர கோயிலில் உள்ள  கருவூலங்களே இதற்குச் சாட்சி!! இவற்றில் உள்ள செல்வத்தின் மதிப்பு டிரில்லியன் டாலர்கள் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு, பிரச்சாரங்களாலும், வாளாலும் அல்லாமல், இஸ்லாம் உரைத்த வாழ்வியல் முறைகளால்தான் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவியது. ஆனால், தமது வாழ்வியலில் இஸ்லாமை ஒதுக்கி விட்டதால் முஸ்லிம் அரசர்கள் ராஜ்யங்களையும் இழந்தார்கள்.


ஸ்லாமிய ஆட்சிகள் வீழ்த்தப்பட்டாலும், இஸ்லாத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள்  இந்தியாவில் கடும் எதிர்ப்புடன் முறியடிக்கப்பட்டன - பட்டு வருகின்றன. ஆப்பிரிக்காவிலும் மிஷனரிகளின் முயற்சிகளால் மதமாற்றம் நிகழ்ந்தாலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக  உள்ளனர். ஸ்பெயினில்தான் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டனர். அடங்க மறுத்தவர்கள் ஆப்பிரிக்காவுக்குத் தப்பியோடினார்கள்.   மக்களிடையே இஸ்லாம் அடியோடு அழிக்கப்பட்டது.

அதற்கான முயற்சிகளின் முதற்படியாக, கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. வரலாறு மாற்றி எழுதப்பட்டது. குழந்தைகள், சிறந்த கல்வி கொடுக்கப் போவதாகச் சொல்லி கடத்தப்பட்டனர். ஒரு தலைமுறை மாற்றப்பட்டதும், அடுத்த தலைமுறைகள் தாமாக மாறிவிட்டன. பள்ளிவாசல்களில் வணக்க வழிபாடுகள் தடுக்கபப்ட்டன. வீடுகளில் ஒடுக்கப்பட்டன. மத அடையாளங்களுக்குத் தடைவிதிக்கபப்ட்டன. எங்கோ கேட்டது, பார்த்தது போல உள்ளதா இவை?

எனினும், தற்போது உலகமயமாக்கலாலும், புலம் பெயரும் அகதிகளாலும் ஸ்பெயினில் மீண்டும் இஸ்லாம் மலர்ந்துள்ளது!!

புராக் பதிப்பகத்தின் வெளியீடான, P.சிராஜுதீன் எழுதிய  "இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்தவை, சாதித்தவை"  புத்தகத்தின் விமர்சனம் தனியொரு விரிவானப் பதிவாக எழுதப்பட வேண்டியளவுக்கு ஒரு தகவல் களஞ்சியம். இந்தியா என்றொரு நாடு உருவாவதற்கு முன்னிருந்த ஆதி காலத்திலிருந்தே இப்புத்தகம் தொடங்குகிறது. அந்தத் தகவல்கள் வியக்கச் செய்வது மட்டுமல்ல, பின்வரும் வரலாற்றினோடு பொருத்திப் பார்க்கவும், பின்னணியைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. .

தமிழ்நாட்டிலும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் சுல்தான்கள் ஆட்சி இருந்தது என்பது ஆச்சரியமூட்டும் செய்தி. பன்னிரெண்டு வருடங்கள் பள்ளியில் படித்த வரலாற்றுப் பாடங்கள் நமக்குக் கற்றுத் தந்தது ஊசிமுனையளவுகூட இல்லை. அதிலும், பல திரிபுகள்.

இப்புத்தகத்தின் அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Further Ref:
http://lostislamichistory.com/did-islam-spread-by-the-sword/
http://www.vinavu.com/2011/01/05/raja-raja-cholan/
http://lostislamichistory.com/spains-forgotten-muslims-the-expulsion-of-the-moriscos/
https://en.wikipedia.org/wiki/Expulsion_of_the_Moriscos

Post Comment