Pages

முகமலர் இற்றைகள் - 1




வலைப்பதிவு எழுத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் முதற்படியாக, எனது முகமலர் பக்கங்களின் பதிவுகளை இங்கே பதிந்து இற்றைப் படுத்திக் கொள்ள  எண்ணியுள்ளேன்.

முழிக்காதீங்க, வேற எங்கயோ வழி மாறிப் போயிட்டோமோன்னு... என் பிளாக்கேதான்...

முகமலர் - முகப்புத்தகம் - அதாங்க, ஃபேஸ்புக்!!
இற்றைகள் - Updates!!

("
இற்றைகள்" - வார்த்தை அறிமுகத்திற்கு நன்றி, முத்துலெட்சுமி)


பழைய பதிவுகளிலிருந்து ஆரம்பிக்கிறேன் - முதலில் 2012!!  அதனால, பழைய செய்திகளாத் தெரியும். ஆனாலும், இன்றைக்கும் பொருந்தக் கூடியவையாகத்தான் இருக்கும். நானும் மாறவில்லை, நாடும் மாறவில்லை!!

வலைப்பதிவைப் போலவே, எல்லா சப்ஜெக்டும் கலந்துதான் எழுதி(கிட்டி)ருக்கேன். என்ன, அறிவியல்தான் மிஸ்ஸிங். எதுவுமே எழுதலை. அதுக்குப் பதிலா, கொஞ்சம் அரசியல் எழுதிருக்கேன். அதுவும், தேர்தல் சமயத்தில் நான் எழுதியதால் - தமிழில் எழுதியதால்- தமிழ்நாட்டில் நல்ல பலன் இருந்தது. 


அடுத்த தேர்தலில், இந்தியா முழுதும் விழிப்புணர்வு ஏற்பட, ஹிந்தியிலும் எழுதலாமான்னு யோசிக்கிறேன். ஹிந்தி தெரியாதேன்னு கவலைப்பட்டபோதுதான், அரசே ஹிந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சியில் இறங்கியது. வாவ்!!  அடுத்த வாட்டி பாருங்க... ஹிந்தி, தமிழ் இரண்டிலும் எழுதி தீவிர பிரச்சாரம்தான்... (நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்)

வலைப்பதிவைப் போலவே, ஃபேஸ்புக்கிலும் பின்னூட்டப் பதிவுகளில்தான் சுவாரசியம் நிறைய இருக்கும்.  ஒவ்வொரு பதிவின் அருகே இருக்கும், தேதியை (Date stamp) க்ளிக் செய்தால், அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்க்கலாம்.  நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்னு எகிறாதீங்க.

தேதியோடு பதிவுகளைக் கொடுத்துள்ளதால், தொடர்புபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும். 


கூடங்குளம் கட்டியாச்சு இருந்துட்டுப் போகட்டுமே என்பது கல்யாணம் கட்டியாச்சு இருந்துட்டுப் போவோம் என்பதான இந்திய மனப்பான்மையின் குறியீடோ!
அன்புள்ள கமல் சார்!
உங்க “விஸ்வரூபம்” குறித்தோ, அதன் அஜெண்டா என்ன என்பது குறித்தோ நான் பேசவில்லை. அது இங்கே தேவையுமில்லை. தற்போது, “தமிழகம் என்னை விரட்டுகிறது” என்று கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருக்கீங்களாம். இந்த ஒரு புள்ளியில் முஸ்லிம் சமுதாயம் கண்டிப்பாக உங்கள் வேதனைகளைப் புரிந்துகொள்ளும். ஏனெனில், அந்த சமுதாயமும் இதே வேதனையைத்தானே அனுபவித்து வருகிறது. பிறந்து வளர்ந்த தமிழகத்தில், வாடகைக்கு வீடு கிடைக்கவே அவர்கள் படும் பாடு இருக்கிறதே.... சென்னையில் என் கஸின் ஏழு வருடங்களாக ஒரே வீட்டில் இருக்கிறான். இடையில் இரண்டு வருடங்கள், on-siteல் வெளிநாட்டுக்குச் சென்ற போதும், வீட்டைக் காலி செய்யவில்லை. விட்டால், வேறு வீடு கிடைக்காது. இது ஒரு உதாரணம் மட்டுமே. பேச்சிலர்களுக்கு, பேச்சிலர் என்ற தகுதியோடு முஸ்லிம் என்ற கூடுதல் தகுதியும் இருப்பதால், சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு படைப்பாளியான, கலைஞனான உங்களை (ஒருவேளை நிஜமாகவே) தமிழகம் விரட்டினாலும், இந்தியா இருகை நீட்டி அணைத்துக் கொள்ளும். ஆனால், முஸ்லிமுக்கு எங்கேயுமே சந்தேகக்கண் கொண்ட வரவேற்புதான். ஆகையால் அவர்கள் உங்கள் வலியை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.
வழக்கமாக விடுமுறை நாளில் (வெள்ளிக்கிழமை) மதிய சமையலில் என்னவர் உதவுவார். 2 - 2.30 என்று நீண்டு, முடிவதற்கு சிலநேரம் 3 மணிகூட ஆகும். இந்த வாரம், கிச்சன் பக்கமே அவர் வரவில்லை. (சண்டை) நான் மட்டும் தனியே செய்தேன்.

ஆனால், ஆச்சரியம்+அதிர்ச்சி, 12.45க்கே சமைத்து முடித்துவிட்டேன்!! “சாதிச்சுட்டோம்ல” என்று பெருமையாய் நான் பார்க்க, அவரோ “அப்ப உன்னாலயும் செய்ய முடியுது, அப்படித்தானே” என்று கேட்டபோதுதான் “ஆஹா, அவசரப்பட்டுட்டோமோ”ன்னு தோன்றியது!!
கால்கிலோ வெண்டைக்காயையும், ஒரே ஒரு பீட்ரூட்டையும் நறுக்கித் தந்துட்டு, அஞ்சு நிமிசத்துக்கொருக்க, ‘சமையல் முடிஞ்சுதா?’ன்னு கேட்டுகிட்டிருக்கார். சமையல்னா, காய் நறுக்கறது மட்டும்தான்னு நினைக்கிற இவரை என்ன செய்யலாம்? — feeling curious.

இனி திவ்யாவின் பக்கம் எல்லா கைகளும் நீளும். பெண்களே இப்படித்தான் என்று. பெண்களை நம்பாதே என்று. — feeling sad.

ஜூலை 12 - ஐ.நா.வால் “மலாலா தினமாக” அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் எல்லா பெண் குழந்தைகளுக்கும் கல்வி உரிமையை வலியுறுத்தி, மலாலாவைக் கௌரவப் படுத்தும்விதமாக, இத்தினம் அனுசரிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் திரு. பான் கி மூன் தெரிவித்துள்ளார். வரவேற்கப்படவேண்டியது.

இதுபோலவே “அபீர் ஹம்ஸா தினம்” என்று மார்ச் 12-ம் தேதியை ஐ.நா. அறிவிக்குமா? 2006-ம் ஆண்டு அன்றைய தினம்தான், மலாலாவைவிட இளையவளான சிறுமி அபீர் ஹம்ஸா, இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க ராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, குடும்பத்தோடு கொல்லப்பட்டாள். உலகம் அறியாத அபீர் ஹம்ஸாக்கள் எத்தனை பேரோ! கல்வியைவிட மானமும், உயிரும் பெரிதல்லவா?


http://en.wikipedia.org/wiki/Mahmudiyah_killings

நோன்புக்குரிய ரமலான் மாதத்தில், திருக்குர் ஆனின் 30 அத்தியாயங்களையும் ஒருமுறை(யாவது) ஓதுவது என் வழக்கம். 20-வது நோன்பு நாளான இன்று 19-ம் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை எட்டிப்பார்த்த என் சின்னவன், ”இன்னும் 19-தான் ஓதுறியா? நான் அப்பவே 20 முடிச்சுட்டேன் தெரியுமா?” என்றான்!! விடியற்காலை உணவின்போது “எல்லாரும் சாப்பிட்டு முடிச்சாச்சு; இன்னும் நீ மட்டும்தான் முடிக்கலை” என்று திட்டியதற்குப் பழிவாங்கிய மகிழ்ச்சி அவன் முகத்தில்!!feeling blessed.
அது ஏனோ, மது எதிர்ப்பு போராட்டங்கள் மட்டும் முண்னணி செய்திகளில் காணப்படுவதுமில்லை; ஏன், வலைஞர்கள் கூட இந்தமாதிரியான நல்ல விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை!!

மாணவர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்!! 
தூக்கம் லேசாகக் கண்ணைச் சுழற்றும்போது, அருகே கேட்கும் ஒரு இலேசான விசும்பல், பதறி விழிக்கச் செய்கிறது.
#இரவுத்தொழுகை #நோன்பு_கடைசிப்பத்து_இரவுகள்
தொழுகை முடிந்த அடுத்த நொடி, அநேகமாக அத்தனை கைகளும் டிஷ்யூ பாக்ஸ் நோக்கி நீளும் - கண்ணீரைத் துடைப்பதற்காக...
#இரவுத்தொழுகை #நோன்பு_கடைசிப்பத்து_இரவுகள்




மட்டன் ரெண்டு கிலோ போதும்...

ம்ஹூம்.. பத்தாது ரெண்டரையாவது போடு..

ரெண்டு ஸ்வீட்.. முட்டையப்பம், கிண்ணத்தப்பம் ...

கூட உங்கூரு வட்லாப்பமும் செஞ்சிடு...

ஹலோ.. என்ன இந்த ஒரு மாசத்துல கரைச்ச கொழுப்பையெல்லாம் ஒரே நாள்ல ஏத்திடணும்னு முடிவோட இருக்கீங்களா?...

பெருநாள் ஆகோ(க்ரோ)ஷங்கள் ஆரம்பம்!!

பெருநாள் வாழ்த்துகள்!!


August 10, 2013
ப்ளாக் டீ, பிரவுன் பிரெட், கொள்ளு பொடி, எண்ணெயில்லாச் சப்பாத்தி.....

#பேக்_டூ_பெவிலியன்
 

Hussain Amma's photo.இந்திய கப்பற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.சிந்துரக்‌ஷக் மும்பையில் பழுதுநீக்கும் பணிகளுக்காக கப்பற் துறைமுக மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிர்நுத போது, வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கடற்படையைச் சேர்ந்த 18 பேர் இறந்துள்ளனர், பலர் படுகாயம்டைந்துள்ளனர்.

16 வருடங்களுக்குமுன் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இந்தக் கப்பல், சமீபத்தில் $80 மில்லியனுக்கான மிகப்பெரும் overhaulக்குப் பின்னர் ரஷ்யாவிலிருந்து கடந்த மே மாதம்தான் திரும்பியுள்ளது. எனினும், நவீனரகங்களில் உள்ளதைப் போன்ற ‘பாதுகாப்பு வழிகள்’ இல்லாததே அதிக உயிர்ப்பலிக்குக் காரணம் எனக்கூறப்படுகிறது.

காவல் துறையாகட்டும், இராணுவமாகட்டும் போரில் ஏற்படும் இழப்பைவிட இதுபோன்ற தவிர்த்திருக்கக்கூடிய விபத்து-சதிகளில்தான் உயிரழப்பு அதிகமாக இருக்கிறதோ என்று ஒரு ஐயம். நாட்டைப் பாதுகாக்க உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள்தானே என்பதால் "taken for granted"ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறார்களோ... ம்ம்... சுடுகாட்டு ஊழல், சவப்பெட்டி ஊழல் எல்லாம் கணட தேசம்தானே நாம்...


For more details: http://gulfnews.com/news/world/india/indian-submarine-with-18-crew-catches-fire-sinks-1.1219985

In the country that has "Athithi Devo Bavah' as its tourism tagline!!
India: the Story You Never Wanted to Hear


இன்றுவரைக்குமான ஃபேஸ்புக் பதிவுகளை வைத்தே ஒரு பத்து, பதினைந்து வலைப்பதிவுகள் தேத்திடலாம் போலருக்கு!! இது முதல்லயே தெரியாமப் போச்சே...  :-)

Post Comment