Pages

சிஸ்டம் டவுன்






 லைப்பூவில் மீண்டும் பதிவு எழுதலாம்னு முடிவு பண்ணேனே தவிர, எங்கே தொடங்க என்ன எழுதன்னு இன்னும் கன்ஃப்யூஷன்தான். “ஸ்டார்டிங் ட்ரபிள்”!!

ஊருக்குப் போயிட்டு வந்த கதையையே எழுதிடுவோம்னு ஆரம்பிக்கிறேன். போய்ட்டு வந்து ஆறு மாசம் ஆச்சு!! 


துரை விமானநிலையத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என்று அறிந்ததும், “இனி இந்த திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் மல்லுக் கட்டத் தேவையில்லை” என்று அகமகிழ்ந்துபோனோம். நெல்லையிலிருந்து இரண்டரை மணிநேரமே; சாலையும் தரமாக இருக்கும். உடன் டிக்கட் புக் செய்தோம். முதல் முறையா மதுரை விமானநிலையம் போய் இறங்கினோம்; நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது இனி இந்தப் பக்கம் வரவே கூடாது என்று உறுதி பூண்டோம்!!

விமான நிலையம் புதிதாக அழகாக உள்ளது; ஆப்பீசர்கள் புதிதாக சர்வதேச விமானங்களைக் கையாள்வதாலோ என்னவோ ரொம்பவே ஓவர் விறைப்பாக உள்ளனர்; பயங்கர கெடுபிடி, மிரட்டல்கள்!! குறிப்பாகப் பேச்சிலர்களை உண்டு-இல்லை என ஒருவழி செய்துவிட்டனர்.


திரைப்படக் காமெடி காட்சிகளை மிஞ்சும் ஒரு பயங்கர ஜோக்
காட்சி காணக்கிடைத்தது: முதல்முறையாக ஊருக்கு வர்ற ஒரு ஆர்வக்கோளாறு “கிராமத்து ஃபாரின் பார்ட்டி”, காதுவரையிலான "விருமாண்டி” கடாமுறுக்கு மீசையோடு அரபிகளின் உடையான வெள்ளை நிற “கந்தூரா”வை அணிந்து வர... வகைதொகையில்லாமல் ஆப்பீசர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி அவரை வறுத்து எடுத்துவிட்டனர்!! வடிவேலுவின் “இவன் ரொம்ப நல்லவன்னு சொன்னாங்கடா...” காமெடிக் காட்சிதான் ஞாபகம் வந்தது.

ந்தியா செல்லும் முன்பே, போக வேண்டுமென்று எண்ணியிருந்த இடங்களில் ஒன்று “கோ-ஆப்டெக்ஸ்”!! சென்ற வருடம் அக்டோபர் மாதவாக்கில், முன்னாள் கலெக்டர் திரு. சகாயம் அவர்களின் தலைமையில் கோ-ஆப்டெக்ஸ் மிகவும் சீரடைந்துள்ளது; கோ-ஆப்டெக்ஸை ஆதரியுங்கள்னு ஃபேஸ்-புக்கில் பலரும் (நானுந்தான்) போஸ்ட் போட்டிருந்தார்கள். சரி, டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக அரசுக்கு நம்மாலான சிறு உதவி செய்வோமேன்னு போகலாம்னு நெனச்சேன்.


திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் கோ-ஆப்டெக்ஸ் கடைகளுக்குப் போனோம். நல்லா ஏஸி குளுகுளுன்னு போட்டு வச்சிருக்காங்க; பணியாளர்களும் நன்றாகக் கவனிக்கிறார்கள். ஆனாலும்.... ஒரு திருப்தி இல்லை - நிறைய ரகங்கள் இல்லை என்பதும் ஒரு காரணம்.  இரு கடைகளிலும் பட்டுச் சேலைகள் பகுதிதான் டாப் க்ளாஸாக இருக்கிறது - விலையும். 

எனினும், நைட்டிகள் நன்றாக இருக்கின்றன; சுடிதார் துணிகள், வழக்கமாக வெளியே கடைகளில் டாப்ஸுக்கு 2 மீட்டர்தான் இருக்கும்.  Side-cut இல்லாமல், umbrella மாடலில் தைக்கவும், முழுநீளக்கை வைக்கவும் எப்பவும் கூடுதல் துணி தனியாக வாங்க வேண்டியிருக்கும். ஆனால், கோ-ஆப்டெக்ஸில் டாப்ஸுக்கு 2.50 மீட்டர் துணி வைத்திருக்கிறார்கள்!! அது மிகவும் வசதியாக இருக்கிறது. 

 ரில் மகன்களைப் பார்த்த அநேக உறவுக்காரர்களும் என்னிடம் ”நல்லாயிருக்கியா” என்று கேட்டு முடிக்குமுன்பே, “ஏன் பிள்ளைங்க இப்படிக் கருத்துப் போயிட்டாங்க?” என்று தொடர் கேள்வி கேட்டு, அதையும் முடிக்கும்முன்பே ”ஃபேர்னெஸ் டிப்ஸு”ம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். நல்லவேளை, பெண் குழந்தையாக இல்லை என்று நிம்மதியடைந்த தருணங்களில் இதுவும் ஒன்று.:-)

முன்ணனி தனியார் நிறுவனங்கள் போலவே, வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எல்லாமே கணினி மயமாக்கப்பட்டு விட்டதால், அலுவலர்களின் வேலைகள் மிகவும் எளிதாகிவிட்டன! எப்படின்னு கேளுங்க... கரண்ட் கட் கூட இன்வெர்ட்டர் அல்லது ஜெனரேட்டரைக் கொண்டு சமாளிக்கப்பட்டு விடுகிறது. மேலும், கரண்ட் கட் நேரங்கள் முன்பே தெரியும் என்பதால், அதற்கேற்றவாறு திட்டமிட முடிகிறது.   ஆனால், சமாளிக்க முடியாத ஒரு விஷயம்... “சிஸ்டம் டவுன்”!! துணிக்கடை, ஆஸ்பத்திரி, மொபைல் நிறுவனம் என்று எங்கு போனாலும், இந்த வார்த்தைதான் காதில் விழுகிறது.




பவர் கட் நேரம்கூட முன்னரே தெரிந்துவிடுகிறது. ஆனால், “சிஸ்டம் எப்போ சரியாகும்?” என்பதுதான் மில்லியன் டாலர்
கேள்வி!! தினமும் ஒருமுறையாவது இதைச் சந்திக்க நேர்கிறது. தண்ணீர்ப் பிரச்னை, மின்சாரப் பிரச்னை, ட்ராஃபிக் ஜாம் போன்றவைகளுக்குக் கூட - நடைமுறைப் படுத்தவில்லை என்றாலும் - தீர்வு என்னவென்றாவது தெரியும். ஆனால், தீர்வே இல்லாத பிரச்னை, இந்த “சிஸ்டம் டவுன்”!! ஆனாலும், அவற்றைப்  போலவே, இதையும் சகித்துக் கொள்ளப் பழகிவிட்டோம்.

ப்படியாக இந்தியப் பயணம் சிறப்பாக முடிவுற்று, அமீரகம் வந்து சேர்ந்தோம். வீட்டுத் தொலைபேசி, இணையத் தொடர்புகளை இயங்க வைக்க வேண்டி, தொலை தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம்.  ”இப்போ கொஞ்ச நேரத்துல வந்துடும்”னு சொன்னாங்க. சொன்னபடி இணையம் சரியானது, ஆனால் தொலைபேசி இயங்கவில்லை. என்னாச்சுன்னு கேட்டா, “ஸாரி சார், சிஸ்டம் டவுன்”!!! ஙே...



Post Comment