Pages

இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்






1857 - சிப்பாய்க் கலக வருடம். பரபரப்பான போர்க்களத்தில், போர் உடை தரித்து, தன் நாட்டு போர் வீரர்களுக்குத் தலைமையேற்று, கையில் வாளுடன் குதிரை மீதமர்ந்து தீரத்துடன் போரிட்டு, கிழக்கிந்திய கம்பெனியின் படையினர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தாள் அப்பெண்.  நீங்கள் நினைப்பது போல, ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய் அல்ல அப்பெண்.

ரந்து விரிந்த முகலாய அரசுக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டி ஆட்சி நடத்தி வந்த சிற்றரசுகள் இந்தியாவில் ஏராளம் உண்டு. இம்மாதிரியான சிற்றரசுகளை, முகலாய அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றுத் தருகிறோம் என்று நயவஞ்சகம் பேசி,  தம் பக்கம் இணைத்துக் கொண்டது கிழக்கிந்திய கம்பெனி அரசு. இணைந்த பின்னர் அவர்கள் விதித்த கெடுபிடிகளைக் கண்டு, தாம் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து நொந்து போயிருந்தன அச்சிற்றரசுகள். விலகி வரமுடியாதபடிக்கு பிரிட்டிஷாரிடமிருந்து நவீன ஆயுதங்கள் வாங்கிய வகையில் கடன்சுமை அந்த அரசுகளின்மீது ஏற்றப்பட்டிருந்தது.உலக வங்கிடெக்னிக் அப்போதே ஆரம்பித்துவிட்டது!! கடனைத் திருப்பிக் கட்டமுடியாத சிற்றரசுகளை அதன் மன்னர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைத்துக் கொண்டார்கள்.

த்தரப் பிரதேசத்தில் லக்னோவின் அருகில் இருந்தஔத்என்ற குறுநில அரசு, ”வஜீர் அலி ஷாஎன்ற குறுநில மன்னரால் ஆண்டுவரப்பட்டது.  ஆங்கில அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து,  பட்ட கடனைத் திருப்பிக் கட்ட முடியாததால், 1856-ல் கிழக்கிந்திய கம்பெனியின் நெருக்குதலைத் தாங்கமுடியாமல் அரசர் நாட்டை விட்டு வெளியேறினார்.
  
அரசர் வஜீர் அலி ஷாவின் மனைவிகளுள் ஒருவர்இஃப்திகருன் னிஸாஎன்ற இளம்பெண். வெளியேறத் துணிந்த கணவரை, கோழைபோல நாட்டைவிட்டுச் செல்வதை விட, வீரமாகப் போரிட்டு போர்க்களத்தில் மடிவதே மேல் என்று இவர் தடுத்துப் பார்த்தார். ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அந்த பெண்ணுக்கிருந்த வீரதீரம், அரச குடும்பத்தில் பிறந்து போர்ப்பயிற்சிகள் பல பெற்று வளர்ந்த அரச குலத்தைச் சேர்ந்த அந்த ஆணிடம் இல்லை!!

அரசவையைச் சேர்ந்தவர்கள், அரச பொறுப்பை ஏற்று, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட தமது மகன்களில் ஒருவருக்குப் பட்டம் சூட்டுமாறு அரண்மனையின் அனைத்து பட்டத்து அரசிகளிடமும் வேண்டுகோள் விடுக்க, அவர்களோ ஆங்கிலேயருக்கு அஞ்சி மறுத்தார்கள். இஃப்திகருன் னிஸாஒருவரே தைரியமாக முன்வந்தார்!!

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் பொறுப்பு தற்போது, பேகம் ஹஸ்ரத் மஹல் என்று பட்டம் சூட்டப்பெற்றஇஃப்திகருன் னிஸாவசம் வந்தது. இவர்  பிர்கிஸ் கத்ர்என்ற தனது 12 வயது மகனுக்கு ஔத் நாட்டு அரசனாகப் பட்டம் சூட்டினார். மகன் அறியாச் சிறுவன் என்பதால், மன்னரின் பிரதிநிதியாக (regent)  நாட்டை அவரே ஆட்சி செய்தார். அதே சமயம், கிழக்கிந்திய கம்பெனி ஔத்-தை பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க சர் ஜேம்ஸ் ஔட்ராம் என்ற ஜெனரலை நியமித்தது. 

சர் ஔட்ராம், ஔத்-ன் படைகளை கிழக்கிந்திய படைகளோடு இணைத்து மற்ற சிற்றரசுகளை எதிர்த்துப் போரிட அனுப்பினால், ஔத் அரசுக்கு தன்னாட்சி அளிப்பதாக ஆசை காட்டினார். பேகம் ஹஸ்ரத் மஹல் அதற்குப் பணிய மறுத்துவிட்டார். தன் சக நாட்டினரைக் காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இப்படிப் பலவிதங்களில் ஆசைகாட்டிப் பார்த்தும், மிரட்டிப் பார்த்தும் , ஔட்ராம் மற்றும் அவருக்குப் பின் அப்பணிக்கு நியமிக்கப்பட்ட ஜாக்ஸன் மற்றும் அதன்பின் வந்த சர் ஹென்றி லாரன்ஸ் ஆகியோரால், பேகம் ஹஸ்ரத் மஹலின் தீவிர எதிர்ப்பு காரணமாக, இணைப்புப் பணியை நிறைவேற்ற முடியவில்லை.

கிடைத்த இடைவெளியில், பேகம் ஹஸ்ரத் மஹல், கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவிடம் தன் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, தன் மகனை ஔத்-ன் அதிகாரபூர்வ ஆட்சியாளராக அறிவிக்கச் செய்தார். தன் ஆட்சியில் இருந்த ஊழல் அதிகாரிகளைக் களையெடுத்தார். தன் படைகளைப் பலப்படுத்தினார். ‘ராஜா ஜெய் லால் சிங்என்பவரை படைத்தளபதி ஆக்கினார்.

ச்சமயம், 1857-ல் சிப்பாய்க் கலகம் தொடங்கியது.  படை வீரர்கள் வாயில் வைத்து கடித்து பயன்படுத்த வேண்டிய துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றிகளின் கொழுப்பைத் தடவி வைத்தது இதன் முக்கியக் காரணமாக இருந்தது. டெல்லியில் தொடங்கிய பொறி, நாடெங்கும் பற்றிக் கொண்டது. போராட்டத்திலிருந்து உயிர்தப்பி, ஆங்கிலேய அதிகாரிகள் அங்கங்கு பதுங்கி இருந்தனர். லக்னோவில், 37-ஏக்கர் பரப்பில் ரெஸிடென்ஸிஎன்ற பிரிட்டிஷ் தூதரகம் ஒன்று இருந்தது. அதனுள் சுமார் 600 ஆங்கிலேயர்கள் அபயம் பெற்று இருந்தனர்.
 
பேகம் ஹஸ்ரத் மஹல், துணிச்சலாக, ”ரெஸிடென்ஸிதூதரகம் மீது தாக்குதல் நடத்தினார். ஜூலை 1857 முதல் செப்டம்பர் வரை 90 நாட்கள் தூதரகத்தின் மீதான முற்றுகை தொடர்ந்தது.  பல முக்கிய ஆங்கிலேயர்களின் உயிரைப் பறித்த இந்த முற்றுகை ஆங்கிலேயர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாய்ப் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஆங்கிலேயே அரசு ஒரு தனி படை அனுப்பி அந்த 90-நாட்கள் முற்றுகையை முறியடித்து, பேகம் ஹஸ்ரத் மஹலின் படையினரை லக்னோவைவிட்டு வெளியெற்றியது. ஒரு பெண் தலைமையிலான ஒரு சிற்றரசு, தனியே  நீண்ட நாட்கள் ஆங்கிலேயரை முற்றுகையிட்டது ஒரு பெரும் சாதனை ஆகும்.

ல வழிகளில் முயன்றும், இணைப்புக்கு வழிகிட்டாததால், மார்ச் 1858-ல் கிழக்கிந்திய கம்பெனி  படைகள், பேகம் ஹஸ்ரத் மஹலின் அரண்மனையைத் தாக்க பெரும்படை ஒன்றை அனுப்பியது. அப்போரில்,  9000 வீரர்களுக்குத் தலைமையேற்று தானே களத்திலிறங்கிப் போரிட்டார் பேகம் ஹஸ்ரத் மஹல். அந்தக் காட்சிதான் நாம் இக்கட்டுரையின் ஆரம்ப வரிகளில் கண்டது. “முஸாபக் யுத்தம்என்றழைக்கப்பட்ட இந்தப் போரில், அவருடைய படைவீரர்கள் சுமார் 5000 பேர் துரோகம் செய்துவிட்டனர். எனினும் கலங்காமல் நெஞ்சுரத்தோடு போரிட்ட அவர்,  தோல்வியடைந்த போதும் சரணடைய மறுத்தார்.

சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து  இந்திய நாடு,  ராணி விக்டோரியாவின் நேரடி ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. அதையொட்டி விக்டோரியா மகாராணி, நவம்பர் 1858-ல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, எதிர்-பிரகடனம் (Counter- Proclamation)ஒன்றை பேகம் ஹஸ்ரத் மகல் வெளியிட்டார்.  மகாராணியாரின் பிரகடனத்தையே எதிர்க்கத் துணித்த அவரின் இத்தைரியம் கண்டு பிரிட்டிஷாரே வியந்தனர்.  அந்தப் பிரகடனம் விளக்கமாக இந்த வலைப்பக்கத்தில் இருக்கிறது: http://oudh.tripod.com/bhm/bhmproc.htm. அதன் சாராம்சத்தைக் கண்டால் அவரது அறிவுக் கூர்மையும் தீரமும் விளங்கும்.

அதைத் தொடர்ந்து, நாய்க்கு எலும்புத் துண்டுகள் வீசுவதைப் போல, மானியங்கள் அளிப்போம் என்று ஆசை காட்டியோ அல்லது மிரட்டியோ அனைத்து சிற்றரசுகளும் வலுக்கட்டாயமாக பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைக்கப்பட்டன.  பிரிட்டிஷாரின் பல வாக்குறுதிகளுக்கும் மானியங்களுக்கும் மசியாமல், அவற்றின் பின்னிருந்த நயவஞ்சகத்தைக் கண்டுணர்ந்து, தாய்நாட்டுக்குச் சுதந்திரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட பேகம், அவற்றை ஏற்க மறுத்தார்.

1859-ம் வருட இறுதி வரை அவர் ஔத்-ன் ராணியாகவே இருந்தார். அதன் பின் ஆங்கிலேயரின் எதிர்ப்புகள் கடுமையானதால், காடுகளில் மறைந்து தாக்குதல்கள் மேற்கொண்டார். மானியங்கள் பெற்று இராஜ அந்தஸ்தோடு அரண்மனையில் சேவகர்களோடு வசதியாக  வாழ வாய்ப்புகள் இருந்த போதும், அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு கம்பீரமாக அடங்க மறுத்த சுதந்திரப் பறவையாகவே நாட்டைவிட்டு வெளியேறினார்.

அண்டை நாடான நேபாளுக்குச் சென்று 20 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். தன்னோடு கொண்டு சென்ற செல்வங்களை, தன்னுடன் அகதிகளாக நாடு விட்டு வந்தோருக்காகவே செலவழித்தார். வறுமையில் உழன்ற அச்சமயத்திலும், பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல், பேகம் திரும்பி வந்தால் பதினைந்து இலட்ச ரூபாய் ஒவ்வொரு மாதமும் மானியமாகத் தருவதாக ஆசைகாட்டியும் மறுத்து விட்டார். கடும் ஏழ்மை வாட்டிய போதும், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல், மன்னிப்புக் கடிதங்கள் எழுதாமல், சுயமரியாதையோடு கடைசிவரை ஆங்கிலேயேரை எதிர்த்தவராகவே நாட்டுப் பற்றோடு வாழ்ந்து 1879-ல் மறைந்தார்.
  
க்னோவில் ஹஸ்ரத்கஞ்ச் என்ற இடத்தில், 1962-ஆம் ஆண்டு இவ்வீரப்பெண்மணியின் பெயரில்ஹஸ்ரத் பேகம் மஹல்என்ற பூங்கா அன்றைய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டுள்ளது1992-ல் உத்ர்பிரேசத்ின் பாஜ.. ஆட்சியில் இப்பூங்காவின் பெயர்ஊர்மிளா பூங்காஎன்று மாற்றப்பட்டதாகவும், அதைக் கண்டித்து போராட்டங்களும்,  பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பும் எழுப்பப்பட்டது என்றாலும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பே பின்னர் பெயர் மாற்றம் நீக்கப்பட்டதாகவும் செய்திகள் உண்டு.



இவரது நினைவாக 1984-ம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. இவ்வம்சத்தைச் சேர்ந்த இளவரச் அஞ்சும் குதர் என்பவர், “தம் அரச வம்சத்தின் முகங்களில் வழிந்த கோழைத்தனத்தைத் துடைத்து எறிந்தவர்” என்று பேகத்தைப் புகழ்கிறார்.

கௌகப் கத்ர் என்ற வரலாற்றாசிரியர், “ஃப்ரான்ஸின் ஜோன் ஆஃப் ஆர்க்கைப் போல பிரிட்டிஷ் ஏகதிபத்தியத்தை எதிர்த்து நின்றார். அதன்மூலம் அவநம்பிக்கையில் முழுகிப் போயிருந்த உள்ளங்களில் நம்பிக்கை ஜோதியை ஏற்றினார்; எங்கிருந்தோ திடீரென்று வரும் விண்கல்லைப் போல வந்து ஔத் நாட்டின் ஒவ்வொரு அடியிலும் சுதந்திர வேள்வியை மூட்டினார்” என்று புகழ்கிறார்.

கார்ல் மார்க்ஸ், ரஸ்ஸல் உள்ளிட்ட இன்னும் பல வரலாற்றாசிரியர்களும் பேகம் ஹஸ்ரத் மஹலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதே இவரது தீரத்திற்கு எடுத்துக்காட்டு. 

(”டீக்கடை”  முகநூல் குழுமத்தில் நடத்தப்பட்ட “சுதந்திரப் போரில் முஸ்லிம்கள்” என்ற போட்டீக்காக எழுதியது)

Post Comment

6 comments:

ஸ்ரீராம். said...

இவரைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன். நன்றி.
தம +1

syedabthayar721 said...

மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர்களுக்கு எல்லாம் நாட்டின் உயர் பதவிகள் மற்றும் விடுதலை தியாகி பட்டம் வேறு . ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்த அரசி ஹஸ்ரத் பேகம் மஹல் அவர்களுக்கு ஒரு சலுட் .

M. செய்யது
Dubai

”தளிர் சுரேஷ்” said...

அறிந்திராத ஓர் வீரப் பெண்மணியைப்பற்றி அறிந்து கொண்டேன்! நன்றி!

Ranjani Narayanan said...

இவரை வைத்து ஒரு தொடர் கதை வந்தது என்று லேசான ஒரு நினைவு. கதையின் பெயரை அம்மா/அக்காவிடம் கேட்டு எழுதுகிறேன், விரைவில்.
ஒரு பெண் வீராங்கனையைப் பற்றித் தெரிந்து கொண்டது உற்சாகம் கொடுக்கிறது. பாராட்டுக்கள்!
முதல் பரிசா உங்களுக்கு?

Ranjani Narayanan said...

அந்தக் கதையின் பெயர் ஜூலேகா. இவரது கதையா என்று தெரியவில்லை. தவறான தகவல் என்றால் மன்னிக்கவும்.

Nooruddin said...

அறியாத வரலாறு. இத்தகைய வீர வரலாறுகளை இன்றைய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.