Pages

பகிர்ந்துப் பதித்தல்




சவூதிக்கு ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்தபோது கிடைத்த சில சுவாரசியமான அனுபவங்கள். இங்கே பதிவாகத் தந்து பகிர்ந்து கொள்வதோடு, நினைவுப் பதிப்பாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று டூ-இன்-ஒன்னாக.....

(படங்கள்: கூகிளுக்கு நன்றி!!)

*^*  மக்கா, மதீனா இரண்டு பள்ளிவாயில்களிலும் அனுதினமும் ஐந்து வேளைகளிலும் தொழுகை முடிந்தவுடன், ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட்டது. (இறந்தவர்களுக்கான பாவமன்னிப்பு வேண்டி நடத்தப்படும் சிறப்புத் தொழுகை ‘ஜனாஸாத் தொழுகை’ எனப்படும்.) அங்கிருந்த நாட்களில் ஒரு வேளைகூட மரணமடைந்தோருக்கான இத்தொழுகை நடத்தப்படாமல் இல்லை. வாழும் வாழ்க்கைக்கான தொழுகையும், மரணத்திற்கானத் தொழுகையும் அடுத்தடுத்து நடக்கும்போது வரும் உணர்ச்சிக் கலவைகளினூடே, ’ஒரு நாள் நமக்காகவும் இப்படி தொழுகை நடக்கும்’ என்ற நினைப்பும் தவறாமல் வரும்.

 
  *^* ஹஜ்ஜிற்குரிய ஐந்து நாட்களில், முதல் நாள் மக்கள் தங்கவைக்கப்படுவது ஏஸி, மெத்தை  வசதியோடு கூடிய தீப்பிடிக்காத டெண்டுகளில்.  அடுத்த நாள், அரஃபா என்ற இடத்திலோ, மின்சார வசதி இல்லாத - ஷாமியானா வகை டெண்டுகள். அடுத்து, முஜ்தலிஃபா என்ற இடத்திலோ, அதுவும் கிடையாது. வானமே கூரை, பூமியே மெத்தை!! வசதிகள் படிப்படியாகக் குறைந்து வரும்போது, அதன்மூலம் கிட்டும் பாடங்கள் படிப்பினையாகும்.

மினா - டெண்ட் நகரம்..
*^* மினாவில் ஒரு வயதான தம்பதியினர் என்னை மிகவும் கவர்ந்தனர். மனைவியால் நடக்கவோ, தரையில் கிடக்கவோ இயலாதென்பதால், ஹஜ்ஜின் ஐந்து நாளும் வீல்சேரிலேயேதான் இருந்தார். அவரது கணவர் அவரைவிட்டு நகராமல் அருகிலிருந்து கவனித்த விதம்... சொல்லிமுடியாது.

யாரோ..
*^* என் மாமியாரை வீல்சேரில் வைத்துக் கூட்டிப் போனதில் கிடைத்த அனுபங்கள் தனி. வீல் சேர் தள்ளி, முன்அனுபவமில்லாததால்(!!!) முதல் நாள் பலரின் காலில் இடித்துவிட்டு, அசடு வழிந்த அனுபவங்களும் உண்டு. அப்புறம் சுதாரிச்சுட்டோம்ல!!  (வீல் சேர் காலில் இடித்தால், அடிபடுவது கரண்டைக் காலுக்குப் பின் உள்ள எலும்பில் என்பதால் பயங்கரமாய் வலிக்கும்#அனுபவம்) என் மாமியாரோ மிஞ்சிப் போனால் 45 கிலோதான் எடை இருப்பார். அவரை வைத்துத் தள்ளுவதே ஏற்றமான சில இடங்களில் சிரமமாக இருந்தது. ஆனால், மிக அதிக எடை கொண்டவர்களைச் சிலர் வீல் சேரில் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.


*^*  பள்ளிவாசல்களில் மாடி ஏற வேண்டிய இடங்களிலெல்லாம் எஸ்கலேட்டர் எனப்படும் ‘தானியங்கிப் படிகள்’தான். வளரும் நாடுகளிலிருந்து வரும் பலருக்கும் அதை முறையாக உபயோகிக்கத் தெரிவதில்லை. வயதானவர்கள் பலர் தடுமாறி விழுவது வாடிக்கையாக இருக்கிறது.

*^* எங்கே பார்த்தாலும் ஜனத்திரள் என்பதால், கூட்டத்தில் யாரேனும் தொலைந்து போவதும், பின் அலைந்து திரிந்து தங்குமிடம் வந்து சேர்வதும் அவ்வப்போது நடக்கும். அதைத் தவிர்க்க, குழுவாகச் செல்பவர்கள் யூனிஃபார்ம் போல ஒரே நிற ஆடை அணிந்துகொள்வார்கள்.  வெள்ளைவெளெரென்ற கூட்டத்தின் நடுவே கண்ணைப் பறிக்கும் பளீர் நிறங்களில் அவ்வப்போது ஒரு கூட்டம் போவதை,  மாடியிலிருந்து பார்க்க வெள்ளைத்தாளில் வர்ணத் தீற்றல்கள் போல, அழகாய் இருக்கும்.

*^* அதிலும், எப்பேர்ப்பட்டக் கூட்டமானாலும் இந்தோனேசியா, சீனா, புருனே போன்ற கிழக்காசிய நாட்டைச் சேர்ந்த குழுவினர் மட்டும் ஒருவர்கூட பிரிந்துவிடவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் போட்டிருக்கும் ஒரே மாதிரியான கண்ணைப்பறிக்கும் பளீர்வண்ண உடை ஒரு காரணம் என்றாலும், இன்னொன்று, கூட்டத்தின் நடுவே ஒருவர் கையை ஒருவர் விடாமல், நெளிந்து நுழைந்து செல்வது. “நூடுல்ஸ் சாப்பிடுபவர்கள், அதைப் போலவே கூட்டத்தினுள் வளைந்து நுழைந்து நெளிந்து சென்றுவிடுகிறார்கள்” என்று நாங்கள் பேசிக் கொள்வோம்.

*^* எங்கள் குழுவில் அம்மா-மகள்-மருமகன் கொண்ட இன்னொரு தமிழ் குடும்பமும், நாங்களும் மிகவும் நெருக்கமாகிவிட்டதால், எங்களிருவரையும்  அக்கா-தங்கை என்றே நிறைய பேர் நம்பிவிட்டனர்!! என் மாமியாரை அவரது குடும்பமும் கவனித்துக் கொண்டது மிகவும் உதவியாக இருந்தது.

*^*  நமக்குத்தான் பாகிஸ்தானியர்கள் எதிரி!! (& vice-versa) ஆனால், சவூதியினர், இந்தியர்களையும், பாகிஸ்தானியர்களையும் ஒரே நாட்டு மக்கள் போலத்தான் பாவிக்கின்றனர்!! பள்ளிவாயில்களில் விளக்கப் பிரசங்கங்கள் நடத்தும்போதெல்லாம் இரு நாட்டினரையும் அழைத்து ஒன்றாகத்தான் வைத்து பிரசிங்கிக்கின்றனர். அதேபோல, மினா, அரஃபா என்ற இடங்களில் இரு நாட்டினரையும் (பெரும்பாலும்) ஒன்றாக ஒரே கேம்பில்தான் தங்க வைக்கின்றனர். 

(’குழந்தையும் தெய்வமும்’ படத்தில் எதிர் துருவங்களான இரு குட்டி பத்மினிகளும் சண்டை போடும்போது, ஆசிரியர் ஒரே அறையில் போட்டு பூட்டி வைப்பாரே, அதுதான் ஞாபகம் வருது)

*^* அப்படி தங்கவைத்திருந்தபோது, பாகிஸ்தானியர்கள் நம்மைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், (தென்) இந்தியர்களால்தான் அவர்களைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை - காரணம்,  அவர்களின் (சீக்கியர்களைப் போன்ற) ஓங்குதாங்கான உடலமைப்பும், உறுதியும்!!

*^* சவூதி அரேபியர்களில்கூட சிலர் தற்போது ஓரளவு ஆங்கிலமும், சில ஹிந்தி வார்த்தைகளும் பேசுகின்றனர்.  பள்ளிவாசல்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நிற்பவர்கள் இந்திய பெண்களையும் “பாஜி” என்று அழகாக அழைத்து, “அந்தர் மகான் நஹி” என்று சொல்ல,  நம் பெண்களோ முழிக்கின்றனர்!!

*^*  எங்களை அழைத்துச் சென்ற தனியார் ஹஜ் நிறுவனம் சவூதி சென்றதும் எங்களைக் கிட்டத்தட்ட கைவிட்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.  எங்கள் குழுவில் இருவருக்கு அரபி மொழி சரளமாகத் தெரிந்திருந்ததால், விமான நிலையம், அரசு அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் எங்களின் வசதிகளுக்கு நாங்களே ஏற்பாடு செய்துகொள்ள முடிந்தது.

*^* ஹஜ்ஜின் முக்கிய விதிகளில் ஒன்று, பெண்கள் தகுந்த ஆண்துணை இல்லாமல் வரக்கூடாது என்பது. ஆனால், தனியார் ஹஜ் நிறுவங்கள் இந்த விதியை மதிப்பதேயில்லை. பணத்திற்கு ஆசைப்பட்டு, வயதான பெண்களையும் தனியாக அழைத்து வந்துவிடுகின்றனர்.

*^* எங்கள் குழுவிலும் அப்படியொருவர் முதிய பெண்மணி இருந்தார் -  கீழக்கரை சாராம்மா.  இன்னும் மறக்க முடிவில்லை. மிக ஏழையான அவரது ஹஜ் செலவுக்கே அவரது உறவில் ஒரு செல்வந்தர் உதவியதால், உடன் குடும்பத்தினர் யாரும் வர முடியாத நிலை.  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கடும் மறதி உள்ள அவரை உடன் வந்த பயணிகளும் தம் பொறுப்பில் எடுக்கத் தயங்கினர். அடிப்படை ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதே பெரும்பாடாகி விட்டது. அதற்கு உதவியதும் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த சமையல்காரரும், மனிதாபிமானமுள்ள சக பயணிகளும்தான்!!

*^* எங்களை அழைத்துச் சென்ற நிறுவனம் செய்த பல குளறுபடிகள் காரணமாக,  இலங்கையைச் சேர்ந்த சமையல்கார இளைஞர் சித்தீக், அவரது குழுவின் துணையோடு,  எங்களுக்காக, தனிப்பட்ட முறையில் எடுத்த ரிஸ்க்குகள் பல.  மறக்கமுடியாதவர். 

*^* சவூதியில் ஹஜ் காலத்தில் டாக்ஸி சார்ஜ் கன்னாபின்னாவென்று ஏறிவிடுகிறது. 5 - 10 ரியால் வாங்கற இடத்துல, 100 - 200 ரியால் கேக்கறாங்க!!  ஏன்னு கேட்டா, இந்த நாலு மாசம்தான் எங்களுக்கு சீஸன், இப்ப சம்பாதிச்சாத்தான் உண்டுங்கிறாங்க. சவூதி அரசாங்கம் பஸ் சேவையை அதிகப்படுத்தினா நல்லாருக்கும். (அதுக்கும் அங்கே ஒரு வாசகர் கடிதம் எழுதி அனுப்பிட்டோமில்ல!!) கடைகள், ஹோட்டல்களிலும் இதேபோல ரேட்டு எகிறிக்கிடக்கிறது.

*^* சென்னையிலிருந்து கிளம்பும்போது, விமானத்தில் எங்களோடு வரவேண்டிய ஒரு தனியார் ஹஜ் குழுவினர், விமானத்திற்கு "final boarding call" அறிவிப்பு பலமுறை வந்தபின்னும், ஏர்போர்ட்டில் நின்று கூட்டாகக் காலைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். விமான நேரமும், தொழுகை நேரமும் முன்பே தெரியும். எனில், அதற்கேற்றாற்போல் சீக்கிரம் வந்திருக்க வேண்டும்; அல்லது, தாமதமாகிவிட்டால் விமானத்தில் இருந்தே தொழலாம் என்பதையாவது அறிந்திருக்க வேண்டும்.  பொதுச் சேவை நிறுவனங்களிடத்தில் ஒழுங்கை எதிர்பார்க்கும் நாமும் நம் கடமைகளில் உரிய முறையோடு இருத்தல் வேண்டாமா?


தூணும் நானே...
குடையும் நானே...
*^* மதீனாவில் பள்ளிவாசலைச் சுற்றிப் பரந்துகிடக்கும் திறந்தவெளி மைதான இடத்தில் நின்று தொழுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அவ்விடங்களில் பகல் நேர வெயிலின் தாக்கத்தைக் குறைக்க, அரசு தற்போது மெகா சைஸ் குடைகளை அமைத்துள்ளது. இரவு நேரத்தில் ஒரு சாதாரணத் தூண் போல நிற்கும் இந்தக் குடைகள், காலை 6 மணியளவில் விரியும். ஒரு குடை 625 m² பரப்பளவிற்கு நிழல் தரும்.  இவை விரியும், சுருங்கும் விதத்தைப் பார்க்க அழகாக இருக்கும். ஆனால், ஸ்லோமோஷனில் நடக்கும் என்பதால் பார்க்கப் பொறுமையும் தேவை. 

*^* குடை வெயிலிலிருந்து காக்கும். ஆனால், வெக்கையினால் வரும் புழுக்கத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? இதற்கும் தண்ணீரைப் பன்னிராகத் தெளிக்கும் ராட்சஸ ஃபேன்கள் அமைத்திருக்கிறார்கள்!!





*^* மில்லியன் கணக்கில் ஆட்கள் புழங்கினாலும், இரவில் சின்னக்கடைகள் அடைக்கப்படுவது இப்படித்தான்!! ஜஸ்ட் ஒரு பெட்ஷீட்!!





*^* கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்பே சின்னவன் ஒரே புலம்பல், “நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்"னு. சென்னையில் அம்மாவிடம் என் சின்னவனை விட்டுட்டுப் கிளம்பினப்போவும் ஒரே அழுகை. திரும்பி வந்தபோது அவனைப் பார்த்த என் உறவினர் அடித்த கமெண்ட், “அவ்ளோ புலம்பி அழுதானே, நானும் அம்மாவக் காணாம ஒரு மாசத்துல புள்ளை ஏங்கிடுவானோன்னு நினைச்சேன். இப்ப என்னடான்னா, பய அஞ்சு கிலோ வெயிட்டும் கூடி, பளபளன்னுல்ல இருக்கான்!!”
என் பதில்: “நான்தான் அவன் அப்படியே அவங்கப்பா மாதிரின்னு சொன்னேனே!!”

*^* ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சோகமாக இருந்த என்னிடம் ஏனென்று கேட்டார் என்னவர். ”ப்ச்... ஒரு மாசமா மணியடிச்சா சோறுன்னு இருந்தாச்சு. இனி நானே சமைக்கணுமேன்னு கவலையா இருக்கு”ன்னேன்.  “அத நான் சாப்பிடணுமே. என் நிலைமையை யோசிச்சிப் பாரு!!”

Post Comment

59 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பல உணர்வுகளின் கலவையாய், சுவாரஸ்யமாய் ஹஜ் பயண அனுபவங்கள். அருமை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஹஜ் பற்றிய பதிவில் ஏன் திரைப்படம் பற்றிய வரிகள்?

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்...

மாஷா அல்லாஹ்...நல்லதொரு பகிர்தல்.

//சவூதியில் ஹஜ் காலத்தில் டாக்ஸி சார்ஜ் கன்னாபின்னாவென்று ஏறிவிடுகிறது. 5 - 10 ரியால் வாங்கற இடத்துல, 100 - 200 ரியால் கேக்கறாங்க!! ஏன்னு கேட்டா, இந்த நாலு மாசம்தான் எங்களுக்கு சீஸன், இப்ப சம்பாதிச்சாத்தான் உண்டுங்கிறாங்க. சவூதி அரசாங்கம் பஸ் சேவையை அதிகப்படுத்தினா நல்லாருக்கும். (அதுக்கும் அங்கே ஒரு வாசகர் கடிதம் எழுதி அனுப்பிட்டோமில்ல!!) கடைகள், ஹோட்டல்களிலும் இதேபோல ரேட்டு எகிறிக்கிடக்கிறது.//

இது தவறில்லையா? இறைவன் இவர்களுக்கு நல்வழியை காட்டட்டும்.

// பொதுச் சேவை நிறுவனங்களிடத்தில் ஒழுங்கை எதிர்பார்க்கும் நாமும் நம் கடமைகளில் உரிய முறையோடு இருத்தல் வேண்டாமா?//

நிச்சயமாக...இப்படியான விசயங்களை பார்க்கும்போது நாசுக்காகவாவது நம் சகோதரர்களிடம் தெளிவுபடுத்திவிட வேண்டும்.

//எங்களை அழைத்துச் சென்ற தனியார் ஹஜ் நிறுவனம் சவூதி சென்றதும் எங்களைக் கிட்டத்தட்ட கைவிட்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.///

இப்படியான நிறுவத்தினர் குறித்து நமக்கு தெரிந்தவர்களிடமாவது சொல்லி விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.

ஜசாக்கல்லாஹ்...

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ப.கந்தசாமி said...

அனுபவம் நன்றாக இருக்கிறது.

ராஜி said...

ஹஜ் யாத்திரை பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அதில் நானும் பயணிப்பதுபோல் இருக்கு உங்கள் பயண கட்டுரை. பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம். said...

கூட்டத்தில் தொலைந்து விடாமல் இருக்க ஒரே நிற ஆடை அணியும் ஐடியா நல்ல ஐடியா. ஆனால் அதே நிறத்தில் வேறு க்ரூப்பும் அணிந்திருந்தால் குழப்பம் வந்து விடுமோ...

இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் ஒரே கேம்பில் குழந்தையும் தெய்வமும் குட்டி பத்மினி(கள்) போல இருக்க வைப்பது நல்ல ஐடியா. அனால் வெளியில் வந்ததும் மக்கள் அதை மறந்து விடுகிறார்கள் போலும்!

சுருங்கி விரியும் குடைகள் - அற்புதமான ஐடியா. காணொளி அற்புதம்.

கணவர் கடைசி வரியில் பன்ச் டயலாக் - சூப்பர்!!

Avargal Unmaigal said...

உங்கள் பதிவை படித்த பின் நானும் ஹஜுக்கு சென்ற வந்த மாதிரி ஒரு உணர்வு. புகைபடங்கள் மிக அருமை. செலவில்லாமல் என்னையும் ஹஜூக்கு அழைத்து சென்ற உங்களுக்கு நன்றிகள்

கோமதி அரசு said...

*^* சென்னையிலிருந்து கிளம்பும்போது, விமானத்தில் எங்களோடு வரவேண்டிய ஒரு தனியார் ஹஜ் குழுவினர், விமானத்திற்கு "final boarding call" அறிவிப்பு பலமுறை வந்தபின்னும், ஏர்போர்ட்டில் நின்று கூட்டாகக் காலைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். விமான நேரமும், தொழுகை நேரமும் முன்பே தெரியும். எனில், அதற்கேற்றாற்போல் சீக்கிரம் வந்திருக்க வேண்டும்; அல்லது, தாமதமாகிவிட்டால் விமானத்தில் இருந்தே தொழலாம் என்பதையாவது அறிந்திருக்க வேண்டும். பொதுச் சேவை நிறுவனங்களிடத்தில் ஒழுங்கை எதிர்பார்க்கும் நாமும் நம் கடமைகளில் உரிய முறையோடு இருத்தல் வேண்டாமா?//

நிச்சியமாய் நம் கடமையை நாம் சரிவர செய்ய வேண்டும்.

விட்டுக் கொடுத்தல், சகிப்புதன்மை,, நேர மேலாண்மை இருந்தால் தான் நாம் சக பயணிகளுடன் சந்தோஷமாய் இருக்க முடியும்.

உங்கள் அனுபவங்கள் பகிர்ந்து பதித்து விட்டீர்கள் அருமையாய்.

இரவில் தூணாய், பகலில் குடையாய்
விரிவது அற்புதம். படங்கள் எல்லாம் அருமை.

போக போக வசதிகள் குறைந்தாலும் அதை பொருட் படுத்தாமல் நம் குறிக்கோள் இறைவனை தொழுவது தான் என்று தன் கடைசி கடமையை முடிக்க மனபலமும், உடல் பலமும் வேண்டும்.(பணபலமும் வேண்டும்)

எனக்கும் 21 நாள் கயிலை யாத்திரையில் நேரநேரத்திற்கு உணவு
கிடைத்தது, இனி வீட்டுக்கு திரும்பி நாமே சமைக்கனுமே என்று நினைப்பு வந்தது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு... நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

கடைசியில் சொன்ன விஷயம் - அதாங்க - சமையல் - சாப்பாடு - :)

நல்லதோர் பகிர்வுக்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.

ashfa mowlana said...

wow! nice experience. really excellent post with comedy.my enthusiasm for doing haj has been increased by ur post. jazakallahu khair for sharing

sundar said...

நல்ல பகிர்வு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். முக்கியமாக குடை விஷயம் கேள்விப்படாத ஒன்று.quite innovative அப்புறம், கடைசில...அப்பப்ப கொஞ்சம் சமைச்சி போடுங்க, மறந்துடப் போகுது ஹி,,ஹி,,,

CS. Mohan Kumar said...

நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது. நன்றி

உங்கள் கணவர் எப்படி தான் தைரியமா உங்களை கிண்டல் பண்றாரோ? எனக்கு என் மனைவியை கிண்டல் செய்யும் தைரியம் இல்லை :))

Unknown said...

உங்கள் மீது இறைவனி சாந்தியும் சமாதானமும், அருள்மழையும், கருணையும், உண்டவதாக....

அறிவுரை மற்றும் அனுபவத்துடன் கூடிய அருமையான பகிர்ந்தளிப்பு உங்களின் இந்த ஹஜ் யாத்திரைக் கட்டுரை.

// ’ஒரு நாள் நமக்காகவும் இப்படி தொழுகை நடக்கும்’ என்ற நினைப்பும் தவறாமல் வரும்.//

நினைத்தாலே நெஞ்சு பட படக்கிறது, அதோடு மட்டுமின்றி நாம் செய்த செயல்களுக்கு படைத்தவனிடம் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனும் பொழுது மனதில் எழுகின்ற அச்சத்திற்கு அளவே இல்லை. (ஒரு வேளை இதெல்லாம் பூச்சாண்டி காட்டும் வேலை, என்று நினைப்போர்க்கு) நிச்சயம் ஒரு நாள் நாம் நம் உயிர் இழந்து சவமாக வீதி உலா வந்தே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்று நினைக்கிறேன். நம்மைப் பார்த்து உயிருடன் இருப்பவர்கள் பாடியை எப்பொழுது எடுக்கப் போகிறார்கள் என்று கேட்கும் தருணம் வரத்தான் போகிறது இதில் யார் சந்தேகம் கொள்ள முடியும்.

நினைவூட்டலுக்கு நன்றி சகோதரி.

அன்புடன் அருணா said...

அடடா....எனக்கும் போகவேண்டும் போலிருக்கிறதே!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா தூணும் நானே குடையும் நானே சூப்பர்ங்க..

மற்ற அனைத்துமே கூட அழகாகப்பகிருந்திருக்கீங்க..அங்கயும் கம்ப்ளெய்ண்ட் எழுதிக்கொடுத்த கடமை உணர்ச்சிய என்னங்கரது..

ஜெய் பேபி மாதாஜி!!

enrenrum16 said...

//(அதுக்கும் அங்கே ஒரு வாசகர் கடிதம் எழுதி அனுப்பிட்டோமில்ல!!)
// ஷ்....அப்பா...முடியல...

ஹஜ் மாதம் வந்தாலே நானும் ஹஜ் பயணிகள் நல்ல படியாக அவர்கள் கடமையை நிறைவேற்றிவிட்டு நல்லபடியாக அவர்கள் வீட்டிற்குச் சென்றடைய வேண்டும் என்ற கவலையுடன் துஆ அதிகம் செய்வேன்.

போட்டோக்கள் அருமை. பகிர்ந்தவிதமும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

//NIZAMUDEEN said...

ஹஜ் பற்றிய பதிவில் ஏன் திரைப்படம் பற்றிய வரிகள்?//

ஏன் பாஸ்? என்ன தப்பு? நான் சொல்லிருக்கது நல்ல கருத்துள்ள படத்தின் நல்ல காட்சிதானே!! :-)))))

அரபுத்தமிழன் said...

படங்களும்,பகிர்தலும்,கடைசி பன்ச் சும் ஆக மொத்தப்
பதிவும் அருமையோ அருமை.

நட்புடன் ஜமால் said...

அழகான காட்சி படுத்தல்,

மொத்த பதிவின் தாக்கத்தையும், கடைசி பாரா மாற்றிவிட்டது :)

கீதமஞ்சரி said...

பயண அனுபவங்கள் அருமை. சின்னச் சின்ன விஷயங்களையும் நேர்த்தியாகத் தொகுத்தளித்துள்ள விதம் ரசிக்கும்படி உள்ளது. பாராட்டுகள் ஹூஸைனம்மா.

மாதேவி said...

ஹஜ் யாத்திரை அனுபவங்கள் அருமை.
பலவற்றைத் தெரிந்து கொண்டோம்.

குறையொன்றுமில்லை. said...

வாழும் வாழ்க்கைக்கான தொழுகையும், மரணத்திற்கானத் தொழுகையும் அடுத்தடுத்து நடக்கும்போது வரும் உணர்ச்சிக் கலவைகளினூடே, ’ஒரு நாள் நமக்காகவும் இப்படி தொழுகை நடக்கும்’ என்ற நினைப்பும் தவறாமல் வரும்.


என்ன ஒரு நிலை இல்லத வாழ்க்கை இல்லியா. ஹஜ் யாத்திரை பற்றி நல்லா சொல்லி புரிய வச்சிருக்கீங்க.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நெகிழ்வூட்டும் ஹஜ் அனுபவங்கள்

பகிர்ந்தமைக்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

ஹேமா said...

மிக மிக அருமை தோழி.அத்தனை உணர்வுகளையும் சிறப்பாக எழுத்தில் தந்திருப்பது அற்புதம் !

Jaleela Kamal said...

இந்த பதிவை தான் எதி்ர் பார்த்து கொண்டு இருந்தேன்.
முழுவத்ம் படிக்க வில்லை
அருமையான பகிர்வு,மீதியை பிறகு படிக்கிறேன்.

R. Gopi said...

வழக்கம் போலக் கலக்கீட்டிங்க

Vijiskitchencreations said...

ஹஜ் யாத்திரை அனுபவங்கள் அருமை.
பலவற்றைத் தெரிந்து கொண்டோம்.

Kousalya Raj said...

மிக விரும்பி படித்தேன்...பல உணர்வுகளின் கலவை...சுவாரசியமான நினைவுகள்...!

ஹஜ் பயணம் பற்றி ஓரளவு தெரியும் என்றாலும் பல தகவல்களை நீங்கள் அனுபவபூர்வமாக சொன்னது மனதை கவர்ந்தது...

படங்கள் அழகு...
வாசகர் கடிதம் - அசத்தல் :)

துரைடேனியல் said...

Niraiya visayangal arinthu konden. Nanri.

TM 25.

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு ஹுஸைனம்மா.

Shafi MI said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற வருடம் ஹஜ்ஜுக்காக முயற்சி செய்து இயலாமல் போனதற்கு ஆறுதலாக இருந்தது, இந்தப் பதிவைப் படித்த பிறகு!

இந்த அனுபவத்தை பகிர்ந்தவர், என் மகள்களில் ஒருவர் அல்லது என் மருமக்களில் ஒருவர் அல்லது என் சகோதரிகளில் ஒருவர் எனக் கற்பனையில் லயித்துப் படித்தேன்.
Thanks!!

Shafi MI said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற வருடம் ஹஜ்ஜுக்காக முயற்சி செய்து இயலாமல் போனதற்கு ஆறுதலாக இருந்தது, இந்தப் பதிவைப் படித்த பிறகு!

இந்த அனுபவத்தை பகிர்ந்தவர், என் மகள்களில் ஒருவர் அல்லது என் மருமக்களில் ஒருவர் அல்லது என் சகோதரிகளில் ஒருவர் எனக் கற்பனையில் லயித்துப் படித்தேன்.
Thanks!!

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல் அத்தனை செய்திகளையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள் ஹுஸைனம்மா! இதுவரை தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இனிய நன்றி!!

சாந்தி மாரியப்பன் said...

அனுபவப் பகிர்தல் அருமை..

ஜெய் ஜெய் பேபி மாத்தாஜி :-))

ஜோதிஜி said...

சரியாத்தானே எழுதி இருக்கீங்க. இதுக்கு எதுக்கு மைனஸ் ஓட்டு?

ஹுஸைனம்மா said...

@ஜோதிஜீ!!

வருக, வருக!!

//இதுக்கு எதுக்கு மைனஸ் ஓட்டு?//

மைனஸ் ஓட்டு போட்டதுனாலத்தானே நீங்க வந்தீங்க?? :-))))

தொடர்ந்து வாங்க; கருத்து தெரிவியுங்க. நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

மைனஸ் ஓட்டாலயும் நல்லது நடந்திருக்கு பாத்தீங்களா!! இதுபோல எத்தனைப் பேர் புதுசா வந்திருப்பாங்க!! அந்த ‘மைனஸ்’களுக்கு நன்றி!! நன்றி!!

Butter_cutter said...

*^* சவூதி அரேபியர்களில்கூட சிலர் தற்போது ஓரளவு ஆங்கிலமும், சில ஹிந்தி வார்த்தைகளும் பேசுகின்றனர். பள்ளிவாசல்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நிற்பவர்கள் இந்திய பெண்களையும் “பாஜி” என்று அழகாக அழைத்து, “அந்தர் மகான் நஹி” என்று சொல்ல, நம் பெண்களோ முழிக்கின்றனர்!!
இது மட்டும் தான் புரீல !

அப்பாதுரை said...

நகைச்சுவை இழையூட நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பயணம் முடித்த பெருமை தெரிகிறது. வாழ்த்துக்கள்.

'நமக்கும் தொழுகை நடக்கும்' கொஞ்சம் அசத்தியது.

விவரங்களைப் படித்ததும் பயணம் போகும் ஆர்வம் உண்டானது. மத நம்பிக்கையற்றோருக்கு பயண அனுமதியுண்டா தெரியுமா

அப்பாதுரை said...

beautiful photos

அமுதா கிருஷ்ணா said...

ஹஜ் பயணம் பற்றியும் அங்கு செய்ய பட்டிருக்கும் ஏற்பாடுகள் பற்றியும் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.

vanathy said...

அத நான் சாப்பிடணுமே. என் நிலைமையை யோசிச்சிப் பாரு!!”
///ம்ம்.. அவர் கவலை அவருக்கு. நல்ல பதிவு.

அமைதி அப்பா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

pudugaithendral said...

கலவனையான பதிவில் கடைசி பாராக்கள் வழக்கம்போல உங்கள் டச்சுடன். :))

ஹுஸைனம்மா said...

நிஜாம் பாய் - நன்றி.

ஆஷிக் - வ அலைக்கும் ஸலாம். கருத்துகளுக்கு நன்றி.
//இப்படியான நிறுவத்தினர் குறித்து நமக்கு தெரிந்தவர்களிடமாவது சொல்லி விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்//
ஒரு சிறிய முயற்சி எடுத்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அது சரிவர நிறைவேறினால், தெரிவிக்கிறேன்.

கந்தசாமி சார் - மிக்க நன்றி.

ஹுஸைனம்மா said...

ராஜி - ரொம்ப நன்றிப்பா.

ஸ்ரீராம் சார் - நான் பார்த்தவரை, ஒரே நிறத்தில் இரு குரூப்புகள் உடை அணிந்திருந்தாலும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருக்கிறது. மேலும், அவ்விரு குழுக்களும் ஒரே நேரத்தில் அருகருகே செல்லும் வாய்ப்பும் அரிதுதானே?

//இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் ... வெளியில் வந்ததும் மக்கள் அதை மறந்து விடுகிறார்கள் போலும்!// எனக்கென்னவோ நம்மிடையே இந்திய திரைப்படங்களின் தாக்கம் அதிகம் என்று தோணுகிறது. ஏனெனில் பாக்-காரர்கள் நம்மை ஏதோ ஒரு நாட்டினர் என்பதாகத்தான் நடத்துகீறார்கள். ஆனால், இந்தியர்கள்தான், அவர்களை “பகை நாட்டினராகவே” பார்க்கின்றனர்.

ஹுஸைனம்மா said...

அவர்கள் உண்மைகள் - //பதிவை படித்த பின் நானும் ஹஜுக்கு சென்ற வந்த மாதிரி// நிஜமாகவே செல்லும் பாக்கியமும் கிட்டட்டும்!!

கோமதிக்கா - //இனி வீட்டுக்கு திரும்பி நாமே சமைக்கனுமே// ஸேம் பிளட், ஹா.. ஹா.. சமைக்கிறதைவிட பிளானிங்தான் கஷ்டம்!!

வெங்கட் - நன்றிங்க.

ராமலக்ஷ்மிக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

ஸாரீகா - இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் வாய்ப்பு கிட்டட்டும்.

சுந்தர் - //அப்பப்ப கொஞ்சம் சமைச்சி போடுங்க// இந்த அட்வைஸ் என் வீட்டுக்காரருக்குத்தானே? ஹி.. ஹி.. நன்றி!!

மோகன் - //உங்கள் கணவர் எப்படி தான் தைரியமா உங்களை கிண்டல் பண்றாரோ?//
சில சமயம் பாவம், போனா போகட்டும்னு அனுமதி கொடுத்துடுவேன். அப்ப பண்ற கிண்டல்கள் இதெல்லாம்!! :-)))))

ஹுஸைனம்மா said...

செய்யது இப்ராம்ஷா - மிக்க நன்றி.

அருணா டீச்சர் - ஆசை நிறைவேற வாழ்த்துகள்!! நன்றி.

முத்து அக்கா - //கம்ப்ளெய்ண்ட் எழுதிக்கொடுத்த கடமை உணர்ச்சி// கூடவே பொறந்தது.. விடமுடியலை.. :-))))

என்றென்றும் 16 - துஆக்களுக்கு மிகவும் நன்றி.

ஹுஸைனம்மா said...

அரபுத்தமிழன் - நன்றி.

ஜமால் - //மொத்த பதிவின் தாக்கத்தையும், கடைசி பாரா மாற்றிவிட்டது// ரொம்ப சீரியஸா இருக்குதேன்னு சேத்தது...

கீதா - மிக்க நன்றி.

மாதேவி - நன்றிப்பா.

ஹுஸைனம்மா said...

லக்ஷ்மி மேடம் - //நிலை இல்லத வாழ்க்கை // ஆமாங்க. தினமும் அங்கங்கு கேட்கும் செய்திகளும் மேலும் இதை உறுதிப்படுத்துகின்றன இல்லையா?

குலாம் - வ அலைக்கும் ஸலாம். நன்றி.

ஹேமா - ரொம்ப சந்தோஷமும், நன்றிகளும் ஹேமா.

ஜலீலாக்கா - முழுசும் படிச்சிட்டீங்களா?

ஹுஸைனம்மா said...

கோபி - நன்றி.

விஜி - நன்றிப்பா.

கௌசல்யா - முதல் வருகைக்கும், விரிவான பாராட்டிற்கு மிக்க நன்றி!!

துரை டேனியல் - நன்றிங்க!!

சரவணக்குமார் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஷாஃபி - வ அலைக்கும் ஸலாம். இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் (2012) செல்லும்போது இக்குறிப்புகள் உதவட்டும்.

மனோ அக்கா - நலமா? நன்றிக்கா.

அமைதிக்கா - //ஜெய் ஜெய் பேபி மாத்தாஜி// - உங்களை பிரதம சிஷ்யையாப் போட்டு ஒரு ஆஷ்ரம் தொடங்கலாமான்னு சீரியஸா திங்கிங்!! :-))))

ஹுஸைனம்மா said...

பட்டர் - கட்டர் - //பெண்களையும் “பாஜி” என்று அழகாக அழைத்து, “அந்தர் மகான் நஹி” என்று சொல்ல// இதுக்கு “அண்ணி, (பள்ளிவாசல்) உள்ளே இடம் இல்லை” என்று அர்த்தம். அதாவது நெருக்கியடித்து உள்ளே செல்ல வேண்டாம், வெளியே மைதானத்தில் தொழுங்கள் என்று சொல்கிறார்கள்.

ஆமா, //பட்டர்-கட்டர்// - இதுக்கு என்ன அர்த்தம்? மொன்னைக் கத்தியா? (ஜோக்கு, சீரியஸாகக்கூடாது!!) ;-)))))

ஹுஸைனம்மா said...

அப்பாதுரை - நன்றிங்க. இரண்டு புகைப்படங்களைத் தவிர, மீதி கூகுள் தந்து உதவியது!!

//மத நம்பிக்கையற்றோருக்கு பயண அனுமதியுண்டா தெரியுமா// - மக்கா, மதீனா இரு நகரங்களுக்குள்ளும் முஸ்லிம்கள் மட்டுமே செல்ல முடியும். எனினும், யூ-ட்யூபில் வீடியோக்கள் நிறைய இருக்கும். பாருங்களேன்.

அமுதாக்கா - நலமா? நன்றிங்க.

திருவாளப்புதூர் முஸ்லிம் - வ அலைக்கும் ஸலாம். நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

வானதி - அதானே... அவரவர் கவலை... நன்றிப்பா.

அமைதி அப்பா - உங்களுக்கும் என் வாழ்த்துகள்!!

தென்றல் - பயங்கர டூர் பிஸி போல!! உங்க அயித்தான் வேலைக்காக டூர்ல் இருப்பார்; அவர் ஃபிரீயானதும், நீங்க இப்படி டூர், தரிசனம்னு மறுபடியும் அவரை டூர் கூட்டிப் போயிடுறீங்கபோல!! :-))))))

pudugaithendral said...

என்ன செய்ய ஹுசைனம்மா,

போனிலே பேசினாத்தான் சிலருக்கு பேசும்மூடு வரும்னு சொல்வாங்க பாருங்க. அதுமாதிரி அயித்தானுக்கு டூர். நாங்களும் அவர் பாணியிலேயே பின்பற்ற ஆரம்பிச்சிட்டம் :))

suvanappiriyan said...

சிறந்த கட்டுரை! இன்றுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள்!