Pages

தேவை இன்னொரு பசுமைப் புரட்சி!





த்தனை பேர் இந்தச் செய்தியைக் கவனித்தீர்களோ தெரியவில்லை. கவனித்தும், சிலருக்கு மனதில் பதியாமல் போயிருக்கலாம். காரணம், விலைவாசி உயர்வு என்பது நமக்கு ஒன்றும் புதிய செய்தி அல்லவே? தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டும் கதையாக, ஏதேனும் ஒர் காரணத்தைச் சொல்லி, நித்தம் ஒரு விலை உயர்வு நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இம்முறை ‘புலி வருது’ கதை இல்லை!! நிஜமாகவே புலி வந்தே விட்டது. அரிசி, கோதுமை போன்ற தானியப் பொருட்களின் தட்டுப்பாடும், தொடர்ந்து விலையேற்றமும் வருகிறது, பராக், பராக்!

சர்வதேச உணவு மற்றும் விவசாயக் கழகம், கடந்த ஜூலை மாதம் “உணவுக் குறியீடு” 213-ஆக உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ளது. இந்த உணவுக் குறியீடு என்பது, குறிப்பிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் நிறைந்த ஒரு உணவுக் கூடையின் விலை. தற்போது ஒரே மாதத்தில் 6% அதிகரித்துள்ளதுதான் கவலைக்குரியது.

கடந்த 2008-ம் ஆண்டு இதேபோல உணவுத் தட்டுப்பாடும், தொடர்ச்சியாக விலைவாசி உயர்வும் இருந்தது நினைவிருக்கிறதா? அது மறந்திருக்கலாம், ஆனால் அந்தச் சமயத்தில் திருவாளர் ஜார்ஜ் புஷ், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட இந்தியர்களின் அதீத உண்ணும் பழக்கம்தான் காரணம் என்று திருவாய் மலர்ந்தாரே, அது மறந்திருக்காது! ஆனால், இந்த மற்றும் அடுத்த வருடம் அதைவிட மோசமான நிலை ஏற்படலாம் என்று ஐ.நா. எச்சரிக்கிறது.


டந்த 56 வருடங்களாக இல்லாத அளவிலான அமெரிக்காவின் வறட்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கும்கூட. இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பெய்யாமல் பொய்த்துக் கெடுத்திருக்கும் பருவ மழை, ஐரோப்பாவில், சீனாவில், ஃபிலிப்பைன்ஸில் பெய்து கெடுக்கிறது. அங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

உணவுப் பயிர்களான சோளம் மற்றும் சோயாவை, இயற்கை எரிபொருளான ethanol தயாரிப்புக்காகத் திருப்பிவிட்டதும் பஞ்சத்துக்குக் கட்டியம் கூறிய இன்னொரு காரணம். சரி, இனி அந்தப் பயிர்களை உணவாக்கிக் கொள்ளலாமே என்றால், தற்போது விளைவிக்கப்படும் பெரும்பான்மையான பயிர் ரகங்கள் உண்ணத் தகுதியில்லாத, எரிபொருள் எடுக்க மட்டுமே லாயக்கான வகையிலானது. இவ்வகைப் பயிர்களை விளைவிப்பதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் விவசாயிகளுக்கு அதிக மானியம் மற்றும் வரிவிலக்கு கொடுத்து ஊக்குவித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே உணவுக்கான சோளத்தின் உற்பத்தி 50% குறைந்துவிட்டது.

போகட்டும், இனியேனும் உணவுப் பயிர்களை விளைவிப்போமே என்றால், விளைநிலத்துக்கு எங்கே போவது? இருந்த விளைநிலங்கள் எல்லாமே ரியல் எஸ்டேட்டுகளால் பட்டா போடப்பட்டு, வீடுகளாக, பங்களாக்களாக, அடுக்கு மாடிகளாக, வணிக வளாகங்களாக உருமாறி விட்டதே!

அப்படியொன்றுமில்லை, கொஞ்சமாவது விவசாய நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றன, அதிலெல்லாம் விவசாயம் நடக்கத்தான் செய்கிறது என்று சொன்னால், உலகம் உருண்டை – மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வருகிறோம். மழை இல்லாமல் வறட்சியால் தவிக்கும்போது எங்கே விவசாயம் செய்ய? அப்படியே செய்தாலும், யானைப்பசிக்குச் சோளப்பொறிதான் அது! மட்டுமல்ல, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பயிர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுமென்பதால், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பணப்பயிர்களைத்தான் விவசாயிகள் தேர்வு செய்வார்கள்.

செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்கிறோம்; நிலவில் நீரைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால், இல்லாத மண்ணில் பொல்லாத உணவை விளையவைக்கத்தான் வழி தெரியவில்லை. சமீபகால ‘அரேபிய வசந்தம்’ புரட்சிகளின் தொடக்கப் புள்ளியான துனிஷியா புரட்சிக்கு வித்திட்டது அடிப்படையில் வயிற்றுப் பசியே. எனில், இன்னும் வருங்காலங்களில் எத்தனைப் புரட்சிகளைச் சந்திக்க இருக்கிறோமோ?

க்ளோபல் வார்மிங்கின் விளைவுகளைப் பற்றி இத்தனை நாட்கள் பேசிக்கொண்டு மட்டுமே இருந்தோம். காலம் தப்பிய மழை, பொய்த்த மழை, அதீத வெயில் என்று காலநிலை மாற்றங்களை பார்த்தும் நாம் திருந்தவில்லை. நாம் அன்றாடம் வீடுகளிலும், விருந்துகளிலும், உணவகங்களிலும் வீணாக்கிய உணவுகள் மனக்கண்ணில் வந்துபோகுதா?

ரி இறக்குமதி செய்துகொள்ளலாமே என்றால் அதுவும் முடியாது. காரணம், உலகமெங்கும் தட்டுப்பாடு பரவுகிறது. 2008-ல் நடந்ததுபோலவே, எல்லா நாடுகளும் உணவு ஏற்றுமதியைத் தடை செய்யும் சாத்தியங்கள் அதிகம். ரஷ்யா இவ்வருட இறுதிவரை மட்டுமே கோதுமை ஏற்றுமதி என்று இப்போதே அறிவித்துவிட்டது.
இதே போன்ற பிரச்னைகளைச் சந்தித்துவரும் சீனா  போன்ற பல நாடுகள், செழிப்பான விளைநிலங்கள் அபரிமிதமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் விவசாயத்தில் பெரும் முதலீடு செய்துள்ளன. இதில் கிடைக்கும் மிகுதியான விளைச்சலைத் தம்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்வதுதான் நோக்கம்.

டந்த ஜூன் மாதம் நடந்த ரியோ +20 ‘வளங்குன்றா வளர்ச்சி’ (Sustainable Development) உச்சி மாநாட்டில், ஐ.நா. செயலர் பான் கீ மூன், வறுமைப்பசியை ஒழிப்பதற்காக ‘Zero Hunger Challenge’ என்ற உலகளாவிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐந்து அம்ச திட்டமான இதில், சிறு-குறு விவசாயிகளை ஊக்குவிப்பது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் இவர்களைச் சரியான முறையில் ஆதரித்து, அவர்களின் வருமானம் மற்றும் உற்பத்தியை இருமடங்காகப் பெருகச் செய்வது மிக அத்தியாவசியமானது என்று வலியுறுத்துகிறார்.

அதன் இன்னொரு அம்சம், உணவுப் பண்டங்களை வீணாக்குதலைத் தடுத்தல் மற்றும் முறையான உணவு நுகர்வு. விளைநிலங்கள் தொடங்கி, வீட்டு டைனிங் டேபிள் வரை நடக்கும் பெரும் விரயத்தைத் தவிர்த்தாலே பஞ்சம், பசியைப் போக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு, சஹாராவை மையப்படுத்திய ஆப்பிரிக்காவின் மொத்த உணவு உற்பத்திக்குச் சமம் என்றால் எந்தளவு விரயம் நடக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

ந்தியாவில் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தள்ள ஆரம்பித்திருக்கும். சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களும் அந்த வெள்ளத்தில் வருடாவருடம் மிதக்கும். ஆனால், இந்த வருடம்? வெள்ளத்திலிருந்து தப்பிவிட்டோமே என்று சந்தோஷப்பட முடியாதபடி, வறட்சி நம்மை விரட்டிக் கொண்டுவருகிறது.

தமிழ்நாட்டிலும், வருட ஆரம்ப குறுவை சாகுபடி அப்போது நிலவிவந்த கடும் மின்சாரத் தடை காரணமாகக் கைவிடப்பட்டது. இப்போது செய்திருக்க வேண்டிய சம்பா சாகுபடிகள், மழை இல்லாததால் செய்யவில்லை. மழை பொய்த்ததன் விளைவுகளில் ஒன்றாகத்தான், கடந்த ஆடிப்பெருக்கின்போது காவிரியில் தண்ணீர் இல்லாமல் போனது. சென்னையின் நீராதாரமான வீராணம் ஏரி, இவ்வருடம் ஜூலை மாதத்திலேயே காய்ந்து விட்டது.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராமல் போக்கு காட்டிய காவிரி கொண்ட கர்நாடகாவின் பி.ஜே.பி. அரசு மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்தியுள்ளது. கேரளாவும் தன் தலைநகரில் குழாய்த் தண்ணீர் விநியோகத்துக்கு ரேஷன் முறை கொண்டுவரலாமா என்று ஆலோசிக்கும் அளவுக்கு, அங்கும் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லை. ஆனால், மழை இல்லாததால், விதைக்கும் பருவமும் தாண்டிப் போய்விட்ட பின்னர் முதல்வர் ஜெயலலிதா குறுவை சாகுபடி முறையாக நடக்கும் என்று கூறுகிறார். மந்திரக்கோல் எதுவும் வைத்திருக்கிறாரோ என்னவோ!

உணவுப் பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்தும் மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல, மெத்தனமாக இருக்கின்றன. அவர்களுக்கென்ன, திட்டக் கமிஷனே, மக்களின் அன்றாடச் செலவுக்கு இருபத்தைந்து ரூபாய் போதும் என்று சொல்லிவிட்டதே.

பஞ்சம் அடித்தட்டு மக்களுக்குத்தானே தவிர, பணம் படைத்தவர்களுக்கல்ல என்கிற அலட்சியம். அவர்களுக்குப் புரியவில்லை, பணம் இருக்கும், ஆனால் வாங்க அரிசி இருக்காது – இதுதான் பஞ்சம் என்று. அப்போது பணத்தையா தின்னமுடியும்?

ரண்டாவது பசுமைப் புரட்சிக்கான அவசியம் இந்தியாவில் இப்போது வந்திருக்கிறது. அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இப்போதே தொடங்கினால்தான், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு காரணமாக வருங்காலங்களில் அடிக்கடி வர சாத்தியமுள்ள இதுபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ள முடியும்.

தற்போதைக்கு, அரசு உணவுக் கிடங்குகளில் தேவைக்கு மேலேயே இருக்கும் கோதுமையையும் நெல்லையும் பத்திரமாக வைத்திருந்தாலே, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, எதிர்வரும் தட்டுப்பாட்டையும் ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம்.

பண்டைய காலத்தில் எகிப்தில் கடும்பஞ்சம் வரப்போகிறதென்றுஅந்நாட்டு அரசருக்குக் கனவில் அறிவிப்பு வந்ததும், முறையாகப் பயிரிடுதல், சேமிப்பு, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், தன் நாட்டுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும்கூட, ஏழு ஆண்டு கடும் பஞ்சத்தின்போது உணவளிக்க முடிந்தது.

தனது சுதந்தர தின உரையில், விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அரசு உணவுக் கிடங்குகளில் சேமிக்கப்படும் பயிர்களின் பாதுகாப்புக்கான நவீன வசதிகள், எலிகளிடமிருந்து பாதுகாத்தல், கிடங்குகளின் கொள்முதல் மற்றும் கொள்ளளவைப் பெருக்குதல், நாட்டின் சேமிப்புக் கிடங்குகளை ஒருங்கிணைத்தல், மழைக்காலங்களில் மழையில் நனைந்து அழுகிவிடாதபடிக்கு முறையாகச் சேமித்து வைத்தல் போன்ற ஏற்பாடுகளுக்கு ராக்கெட் டெக்னாலஜி தேவையில்லை என்பதையும் யாராவது ‘லேட்டஸ்ட் டெக்னாலஜி’ மூலம் அரசாள்பவர்களின் கனவில் வர வையுங்களேன்!

(படங்கள் அத்தளத்தினால் இணைக்கப்பட்டவை)

Post Comment

25 comments:

அப்பாதுரை said...

சீரியசஸான, சிறப்பான கட்டுரை. இன்று நேற்றல்ல, பசிப்பிணி எத்தனையோ நூற்றாண்டுகளாக நம்மை வாட்டிக்கொண்டிருக்கிறது. இயற்கையை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தால் பசிப்பிணியைத் தீர்க்க முடியாது என்று நினைக்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உணவுத்தட்டுப்பாட்டைக் குறைத்து ஒழிக்க இப்போது சாத்தியம் கூடியிருக்கிறது. தொழில் நுட்பங்களால் மனித/சிறுமிருக வாழ்வுக்கு அபாயங்கள் எதுவுமில்லை என்பதை நிரூபிக்க வருடக்கணக்கில் பிடிப்பதால், சென்ற அறுபது ஆண்டுகளின் தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் கண்டுபிடிப்புகளையும் உடனுக்குடன் அமல்படுத்த முடியாத நிலையில் இருந்தோம். நிறைய கண்டுபிடிப்புகள் சென்ற ஐந்து ஆண்டுகளில் உலக ஆராய்ச்சி நிறுவனங்களால் ஏற்கப்பட்டுள்ளன. இனி அரசாங்கக் கோமாளிகள் ஏற்கவேண்டும். அதற்குப் பிறகு லாப நோக்கு கொண்ட நிறுவனங்கள் உற்பத்தி செய்யவேண்டும். பிறகு விவசாயிகள் கையில்.. இது இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும்.

ஒரு வரியில் கூட நகைச்சுவையோ நையாண்டியோ இல்லாமல் உங்களால் எழுதமுடியுதா? ஆச்சரியம் போங்க. (உங்கள் வாக்கு பலிக்கட்டும். சீக்கிரம் செவ்வாயில் கால் பதிப்போம். அப்புறம் என்ன செய்வோமுன்னு கேக்காதீங்க).

அமுதா கிருஷ்ணா said...

அருமையான கட்டுரை.சென்னை அக்டோபர்,நவம்பரில் தான் மிதக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு கட்டுரை... "மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்..." என்று வாசகங்களில் தான் உள்ளது... நடைமுறையில் இல்லை...

ஸ்ரீராம். said...

சிறந்ததொரு பகிர்வு. அரசாங்கங்கள் தொலைநோக்கில் செயல்படாமல் வாக்கு வங்கியை மனதில் கொண்டும் புறங்கைகளை நக்கியும் தொல்லை நோக்கில் மட்டும்தானே செயல்படுகின்றன!

MARI The Great said...

நல்ல கட்டுரை, பகிர்வுக்கு நன்றி!

பருவநிலை மாற்றம், வான் மழை பொய்ப்பு, மக்கள் தொகை பெருக்கம், விலை நிலங்களை அழித்தல் என்று இதே ரேசியோவில் இன்னம் 20 ஆண்டு பயணித்தோமானால் நிச்சயம் உலகெங்கும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் (இப்போதே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தனி) அது நமக்கு நாமே செய்துகொள்ளும் தற்கொலை முயற்சி என்பது சொல்லத்தேவையில்லை!

அருமையான கட்டுரையை வழங்கியமைக்காக மீண்டும் ஒரு நன்றி!

Barari said...

இதைபோன்ற சமூக அக்கறையுள்ள கட்டுரைகளை செய்திகளை எழுத பதிவர்கள் முன் வர வேண்டும்.வாழ்த்துக்கள் சகோதரி ஹுச்சைனம்மா

suvanappiriyan said...

சிறந்த கட்டுரை. தற்போதய சூழலுக்கு மிக அவசியமான கட்டுரை. ஆனால் நம் அரசியல் தலைவர்களுக்கு தங்களுக்கு சொத்து சேர்ப்பதில் உள்ள அக்கறை மக்களின் நலத் திட்டங்களில் இல்லை. தொலைதூர நோக்கும் இல்லை. முதலில் இலவசங்களை நிறுத்தி டாஸ்மார்க்குக்கு பூட்டு போட வேண்டும். தற்போது இதை செய்தாலே போதும்.

சிராஜ் said...

ஹுஸைனம்மா.....

நான் சமீபத்தில் படித்ததிலே ஆகச் சிறந்த கட்டுரை இதுதான்.. எக்ஸலண்ட்.... வாழ்த்துக்கள்....

ப.கந்தசாமி said...

நல்ல சிந்தனைகள். நம் கல்யாணங்களில் வீணாகும் உணவுகளை நிறுத்தினாலே, அது ஒரு பசுமைப்புரட்சிக்கு ஈடாகும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நமக்கு முக்கிய தேவை தொழில் நுட்ப வளர்ச்சி அல்ல. விவசாயம்தான் என்பதை விரிவயாக சொல்லி இருக்கிறீர்கள்.விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஆத்த தலை முறையினர் உணர வைக்க வேண்டியது இந்த சமுதாயத்தின் கடமை.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கட்டுரை... வாழ்த்துகள்

முத்தரசு said...

தெரிந்து கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

அருமையானதொரு கட்டுரை ஹுஸைனம்மா.

//தற்போதைக்கு, அரசு உணவுக் கிடங்குகளில் தேவைக்கு மேலேயே இருக்கும் கோதுமையையும் நெல்லையும் பத்திரமாக வைத்திருந்தாலே, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, எதிர்வரும் தட்டுப்பாட்டையும் ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம்.//

ரொம்பச் சரி. சரியான முறையில் பாதுகாக்கப் படாம கிடங்குகளில் கெட்டுப்போய்க் கிடக்கும் காட்சியை செய்திகளில் பார்த்தப்ப இது மட்டும் கெட்டுப்போகாம இருந்திருந்தா எத்தனை பேரின் பசியை ஆத்தியிருக்கும்ங்கற ஆதங்கம் வரதைத் தவிர்க்க முடியலை.

Paleo God said...

ஜி, பசுமைப் புரட்சி என்பதே பம்மாத்து வேலை. நம் நாட்டு பாரம்பரிய விவசாயத்தை நாசம் செய்ய வைத்த அழகான பெய்ர்தான் அது.

படிக்க::

http://www.poovulagu.net/2010/06/blog-post.html

நமக்குத் தேவை விவசாயிகளையும், விவசாயத்தையும் அன்னியசக்திகளிடமிருந்து காப்பாற்றி, பாரம்பரிய முறைக்குத் திரும்பி நல்ல நஞ்சற்ற ஆரோக்கிய தலமுறையை உருவாக்குவதுதான்.

தனது சுதந்தர தின உரையில், விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அரசு உணவுக் கிடங்குகளில் சேமிக்கப்படும் பயிர்களின் பாதுகாப்புக்கான நவீன வசதிகள், எலிகளிடமிருந்து பாதுகாத்தல், கிடங்குகளின் கொள்முதல் மற்றும் கொள்ளளவைப் பெருக்குதல், நாட்டின் சேமிப்புக் கிடங்குகளை ஒருங்கிணைத்தல், மழைக்காலங்களில் மழையில் நனைந்து அழுகிவிடாதபடிக்கு முறையாகச் சேமித்து வைத்தல் போன்ற ஏற்பாடுகளுக்கு ராக்கெட் டெக்னாலஜி தேவையில்லை என்பதையும் யாராவது ‘லேட்டஸ்ட் டெக்னாலஜி’ மூலம் அரசாள்பவர்களின் கனவில் வர வையுங்களேன்!//

நெத்தியடி :))

வலையுகம் said...

பசுமை புரட்சி என்பதே சுத்த அபத்தம்

வலையுகம் said...

இங்கே விவசாயத்தின் அழிவுக்கு யார் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய விவசாயத்தின் அழிவுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது பசுமைப் புரட்சிக்கும் முன் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீண்ட வரலாறு கொண்டது. ‘பசுமைப் புரட்சியின்’ விளைவாய் மண்ணில் கொட்டப்பட்ட லட்சக்கணக்கான டன் ரசாயன உரங்களால் மண்ணே மலடாகிப் போன நிலையில் ஓரளவுக்காவது மகசூல் பார்க்க வேண்டுமானால் விலை கூடிய வீரிய ரசாயன உரங்களை வாங்கியாக வேண்டிய கட்டாயத்துக்குள் விவசாயிகள் தள்ளப்பட்ட பிண்ணனிக்கு முதல் காரணம் பசுமை புரட்சி என்று இந்திய அரசு எடுத்த நடவடிக்கை இரண்டாம் உலகப்போருக்கு முடிந்த நிலையில் அதற்காக தயாரிக்கப்பட்ட வெடிபொருள் ரசாயனங்கள் ஐரோப்பாவில் தேங்கி கிடந்ததை ரசாயன உரமாக மாற்றி கீழைநாடுகளுக்கு அனுப்பி பசுமைப் புரட்சி உதவி செய்தனர் இயற்கைக்கு முரணாக தினிந்த உரங்களால் பலதலைமுறை பாதிக்கப்பட்டு நிற்கிறது இதில் இன்னொரு பசுமை புரட்சியா

ஹுஸைனம்மா said...

@ஹைதர்,
இங்கே ‘பசுமைப் புரட்சி’ என்று சொல்லப்பட்டிருப்பதற்கு ‘ரசாயன உரத்துடனான விவசாயம் செய்வது’ என்று சொல்லப்பட்டிருப்பதாக நீங்களே அர்த்தம் செய்து கொண்டீர்கள்.

அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை அழியவிடாமல் தடுத்து, அதற்காக விவசாயிகளை ஊக்குவித்து, சரியான வழிவகைகளைக் காட்டித் தருவது என்ற அர்த்தத்தில்தான் இங்கே பசுமைப் புரட்சி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தின் அருமைகளை உணர ஆரம்பித்துவிட்டார்கள். பலரும் தற்போது இயற்கை விவசாயத்துக்கு மாறிவருகிறார்கள்.

‘பசுமைப் புரட்சி’ என்பதற்கு, தற்கால அவசியத்தைப் பொறுத்து, ‘விவசாயத்தைத் தீவிரமாக பரப்புவது’ என்ற பொருளே கொள்ளவேண்டும். கூடவே இயற்கை விவசாயத்தின் மாண்புகளையும் சொல்ல வேண்டும்.

ஹுஸைனம்மா said...

@ஷங்கர்ஜி:

நன்றி.

//பாரம்பரிய முறைக்குத் திரும்பி நல்ல நஞ்சற்ற ஆரோக்கிய தலமுறையை உருவாக்குவதுதான்.//
இதைத்தான் நானும் விரும்புகிறேன். மற்றபடி, ’பசுமைப் புரட்சி’ என்பது மக்களிடையே விவசாயத்தையும் (மீண்டும்) ஒரு தொழிலாக ஊக்குவிக்க வேண்டும் என்பதே நான் சொல்ல வருவது.

ஸாதிகா said...

தெரிந்து வைத்துக்கொள்ளக்கூடிய விஷயங்கள்.பகிர்தலுக்கு நன்றி ஹுசைனம்மா.

துபாய் ராஜா said...

மனித குலத்தின் மனசாட்சியற்ற சுரண்டலை இயற்கை அன்னையும் எத்தனை நாள்தான் பொறுப்பாள்.இது இப்படியே போனால் வரும்காலம் வருத்தமான காலமாகத்தான் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. :((

கோமதி அரசு said...

//அரசு உணவுக் கிடங்குகளில் சேமிக்கப்படும் பயிர்களின் பாதுகாப்புக்கான நவீன வசதிகள், எலிகளிடமிருந்து பாதுகாத்தல், கிடங்குகளின் கொள்முதல் மற்றும் கொள்ளளவைப் பெருக்குதல், நாட்டின் சேமிப்புக் கிடங்குகளை ஒருங்கிணைத்தல், மழைக்காலங்களில் மழையில் நனைந்து அழுகிவிடாதபடிக்கு முறையாகச் சேமித்து வைத்தல் //

நல்ல கருத்து ஹுஸைனம்மா. நீங்கள் சொன்னதை அமுல் படுத்தினாலே போதும் நாட்டில் பசிபிணி தீரும்.
அதோடு ஏரி, குளங்களையும் பாதுகாத்து, மரங்களை வளர்த்து மழையும் பெற்றால் நாடு சொர்க்கம் அல்லவா!

நல்ல கட்டுரை வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்.







எல் கே said...

மீண்டும் பசுமை புரட்சியா ? எங்க நிலம் இருக்கு ...

ezhil said...

மாத்திரையை முழுங்க வேண்டியதுதான்.மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. யார் பூனைக்கு மணி கட்டுவது? விழிப்புணர்வூட்டும் பதிவு. நன்றி

Riyas said...

இன்று IT யும் தொழிநுட்பமும் வளரும் அளவிற்கு விவசாயம் வளரவில்லை என்பது வருத்தம்தான்..

இதனோடு சம்பந்தட்டு முன்பு ஒரு பதிவு எழுயிருந்தேன்..இப்போதெல்லாம் எழுதித்தான் என்னத்த கிழிச்சோம்னு ஒன்னும் எழுதுறல்ல!!

http://riyasdreams.blogspot.com/2010/05/blog-post_24.html

Sangeetha said...

அருமையான தொலை நோக்கு பார்வை. இந்த கட்டுரை எந்த மாற்றமும் செய்யாமல் முதல் அமைச்சரை அடைய வழி சொல்லுங்களேன்.