Pages

கவலைப்பட ஒரு கவலை




motivart.wordpress.com


 செய்தித்தாள் பக்கங்கள்
சொல்லும் சோகங்கள்

தோழிகளின் அழைப்புகள்
தெரிவிக்கும் தேம்பல்கள்

உறவுகளின் உரையாடல்களில்
உறைக்கும் நிதர்சனங்கள்

நினைத்துப் பார்க்கையில்
நெஞ்சு கனக்கும்

சீரான வாழ்வு
சுகமான துணை

அழகான மக்கள்
ஆரோக்கியமாய் நான்

துன்பமில்லா வாழ்வு
தானென்றாலும் மனதின்

ஓரத்தில் ஏனோ
ஒரு கலக்கம்

புலம்பும் எனைப்பார்த்து
புன்னகைக்கிறார் என்னவர்

பிரச்னையில்லா வாழ்வை
புவியனைத்தும் வேண்ட

பிரச்னையே இல்லையென
பிரகலாபிக்கும் பைத்தியமென்றார்!!

பொடிக்கல் தடுக்கினால்
பாதகமில்லை பாறைபோல்

பெருந்துயர் வந்தால்
பொறுப்பேனோ பேதை

சிறிதெனில் சிணுங்கினாலும்
சிரமேற் கொள்வேனென்றேன்

துயரே ஆனாலும் இறைவா
துணை நீ இருந்தால் போதும்

பிரார்த்தனையால் தாங்கிப் பிடிக்க
பெற்றோரும் பெற்ற மக்களும்

உடன்பிறப்புகளும் கொண்டவனும்
உற்றவர்கள் சூழ மற்ற நட்பும்

எனக்காக உனைவேண்ட
எம் வேண்டுதல் ஏற்பாய்

எல்லாம் வல்ல நாயனே
போற்றுகிறேன் உனை!!



Post Comment

30 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா, கலக்கங்கள் வர நாம் கலங்குவதும் இயற்கைதான். நீங்கள் நன்றாக இருப்பீர்கள். சுற்றமும் ந்ன்றாக இருக்கும்சில நாள் பத்திரிகைகள் படிக்காமல் இருங்கள்.உங்களுக்காக நானும் என் ப்ரார்த்தனையில் உங்களைச் சேர்த்துக் கொள்ளுகிறேன்.

Thava said...

நல்ல கவிதை..நன்றி

Mysterious Island - திரைப்பார்வை

அன்புடன் அருணா said...

நானும்!!

Unknown said...

ஸலாம்

கவலையில் நல்லா புலம்பிருகீங்க .....

வாழ்த்துக்கள் ....

தமிழ்மணம் +1 ...

Unknown said...



ஸலாம்

இந்த வார குழந்தை[அப்ரசெண்டி] நட்சத்திரம் ..... தமிழ்மணம்

வாழ்த்த வயதில்லை .... ஆகவே போகிறோம் ..

குறிப்பு :

ம்ம்ம் ... என்னை யாரும் திட்டக் கூடாது ... நான் தெளிவாத் தான் கருத்து சொல்லிருக்கேன் ...
இது முன் எச்சரிக்கை நடவடிக்கை ...

ராமலக்ஷ்மி said...

அருமை ஹுஸைனம்மா.

/நட்பும்

எனக்காக உனைவேண்ட/

நிச்சயமா.

ரிஷபன் said...

துயரே ஆனாலும் இறைவா
துணை நீ இருந்தால் போதும்

வாசிக்கும்போதே நெகிழ்கிறது. மனசொடிந்து போகும்போது இறைவா நீ மட்டும் கைவிட்டு விடாதே என்றுதான் ஏங்கத் தோன்றுகிறது.

நெகிழ்கிறேன்.

ஸ்ரீராம். said...

அவனிடம் நம்மை ஒப்படைத்து விட்டால் ஏது கவலை? மேலும் பிரச்னை இல்லாத வாழ்க்கை ரொம்ப போரடிக்கும்! :)))

தமிழ் மீரான் said...

//பெருந்துயர் வந்தால்
பொறுப்பேனோ பேதை//

இல்லை ஹுஸைனம்மா,
நிச்சயமாக எந்த ஓர் ஆத்மாவையும் இறைவன் அதன் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை!
இன்பத்திலும் நாம் அவனை நினைக்கும் போது, துன்பத்தில் இறைவன் நம்மோடிருப்பான்!
உங்கள் கவிதை அருமை!

சாந்தி மாரியப்பன் said...

அருமை ஹுஸைனம்மா,.. எல்லாம் கை விட்டுட்டாலும் கை விடாதவன் அவன் மட்டுமே.

Seeni said...

kavalai vendaam!

allah pothumaanavan!

ஹேமா said...

மனப்பாரம் குறைந்திருக்கும் எழுத்தில் !

துளசி கோபால் said...

ஆஹா..... நீங்களா இந்தவார ஜொலிப்பு!!!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

கீதமஞ்சரி said...

மற்றவர் துன்பங்களையும் தன்னுடையதாய் எண்ணி மனம் உளையும் உங்களுக்கு எந்தத் துன்பமும் நேராது. என்றும் மன நிம்மதியும் மகிழ்வும் உண்டாகும். கவலை வேண்டாம்.

இந்த வார நட்சத்திரமாய் தமிழ்மண வானில் ஜொலிப்பதற்குப் பாராட்டுகள் ஹூஸைனம்மா.

அமைதி அப்பா said...

"கவலைப்பட ஒரு கவலை" இன்று பலரின் நிலை இதுதான்.

ஸாதிகா said...

துயரே ஆனாலும் இறைவா
துணை நீ இருந்தால் போதும்//

மனம் நெகிழ்த்திய வரிகள்....!

RAMA RAVI (RAMVI) said...

//அழகான மக்கள்
ஆரோக்கியமாய் நான்

துன்பமில்லா வாழ்வு
தானென்றாலும் மனதின்//

எந்த கலக்கமும் வேண்டாம் இறைவனின் அருளால் நன்றாக இருப்பீங்க..

Vijayan Durai said...

கவி வழியாக கடவுளிடம் கவலை கேட்கிறீரோ??...
யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கிறான் அக்கா..,எனக்கு தங்களின் வரிகளை படிக்கும் போது ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது.மகாபாரத கதையில் குந்திதேவி கடவுளிடம் "கடவுளே எனக்கு துன்பங்களை கொடு,அப்போது தான் நான் உன்னை மட்டும் நினைத்திருக்க முடியும்,எனக்கு துன்பத்தினை கொடு".என்று வேண்டுவது போல ஒரு காட்சி உண்டு தங்கள் கவி என்னை அதை நினைவு கொள்ள செய்கிறது..
யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கிறான் அக்கா.

சசிகலா said...

இந்த வார நட்சத்திரமாய் தமிழ்மண வானில் ஜொலிப்பதற்குப் பாராட்டுகள் .
நல்ல கவிதை..நன்றி

முகுந்த்; Amma said...

Congrats hussainamma for the Tamil Manam star status. Nice poem

ஹுஸைனம்மா said...

வலைஞன் - நன்றிங்க.

வல்லிமா - வாழ்த்துகளுக்கு நன்றி வல்லிமா. உலகத்தில் நடப்பவற்றைப் பார்க்கும்போது கலக்கத்தான் செய்கிறது.

குமரன் - நன்றிஙக்.

ஹுஸைனம்மா said...

அருணா - வாங்கப்பா. நலமா? நன்றி பிரார்த்தனையில் இணைந்துகொண்டதற்கு.

சிந்தனை - ஸலாம். நல்லா “சிந்திச்சு” வாழ்த்திருக்கீங்க. நன்றிங்க.

ராமல்க்ஷ்மிக்கா - ரொம்ப நன்றிக்கா.

ரிஷபன் சார் - மிகவும் நன்றி சார். அவனன்றி வேறு யார் நமக்கு?

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - //பிரச்னை இல்லாத வாழ்க்கை ரொம்ப போரடிக்கும்!// என் அப்பா அடிக்கடி சொல்வதும் இதுதான்.

தமிழ்மீரான் - //நிச்சயமாக எந்த ஓர் ஆத்மாவையும் இறைவன் அதன் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை//
இறைவன் தந்திருக்கும் வாக்குறுதி இது. இருந்தாலும் அதையும் குறைவாகத் தருவதற்கு வேண்டுகோள் வைக்கலாமே என்றுதான். :-))))

//இன்பத்திலும் நாம் அவனை நினைக்கும் போது, துன்பத்தில் இறைவன் நம்மோடிருப்பான்//
நிச்சயமாய்!! இதைத்தான் செய்ய மறந்துவிடுகிறோம்.

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - நன்றிக்கா.

சீனி - நிச்சயமாய்!!

ஹேமா - நலமா? ஆமாம், எழுதிப் பகிர்வதே பாரங்கள் குறைக்கத்தானே!!

துளசி டீச்சர் - நன்றி டீச்சர்!!

ஹுஸைனம்மா said...

கீதமஞ்சரி - ஆறுதலுக்கும், வாழ்த்துக்கும் நன்றி கீதா.

அமைதி அப்பா - //இன்று பலரின் நிலை இதுதான்// நல்ல நிலையில் இருக்கும்போதும் அவனை நினைத்துக் கொள்வோமே என்றுதான்... நன்றிங்க!

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

ராம்விக்கா - வாழ்த்துக்கு நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

விஜயன் - //கவி வழியாக கடவுளிடம் கவலை கேட்கிறீரோ??...// ஹா.. ஹா..
//யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கிறான்//
உண்மைதான் தம்பி. ஆனாலும், முன்கூட்டியே கொஞ்சம் சொல்லி வைக்கலாமேன்னுதான்... டீச்சரின் நன்மதிப்பைப் பெறமுயலும் மாணவியைப் போல!! :-)))))))

சசிகலா - நன்றிங்க.

முகுந்த் அம்மா - நன்றிங்க.

மாதேவி said...

இனிய வாழ்த்துகள்.

இறைவன் துணை இருந்தால் போதும்.

சுசி said...

நல்ல கருத்து ! அப்பாடி நம்மள மாதிரியே இன்னோத்தரும் இருக்கிறார் என்று நினைக்கும் பொது மன நிம்மதி ஏற்படுகிறது.

ஹுஸைனம்மா said...

மாதேவி - நன்றி. ஆம், அவனே துணை.

தானைத் தலைவி - ஆமாப்பா, சுத்தி நடக்கிறதப் பார்த்து கலங்கும்போது, நாமதான் தேவையில்லாமப் பயப்படுறோமோன்னு தோணும். எனக்கும் உங்களைப் பாத்து ஒரு ஆறுதல். :-)))))) நன்றி.

கோமதி அரசு said...

பிரார்த்தனையால் தாங்கிப் பிடிக்க
பெற்றோரும் பெற்ற மக்களும்

உடன்பிறப்புகளும் கொண்டவனும்
உற்றவர்கள் சூழ மற்ற நட்பும்

எனக்காக உனைவேண்ட
எம் வேண்டுதல் ஏற்பாய்

எல்லாம் வல்ல நாயனே
போற்றுகிறேன் உனை!!//

இறைவன் அருள் இருந்தால் கவலையை போக்கும் மன துணிவு வந்து விடும். நீங்கள் எழுதி இருக்கும் ஒவ்வொரு வரியும் அருமை.

கவலைக்கு கவலை கொடுங்கள்.