போன பதிவில் சர்தார்ஜி பற்றி எழுதும்போதுதான் யோசித்துப் பார்த்தேன், சர்தார்ஜிகள் ஏன் டர்பன் அணிகிறார்கள்? தெரியவில்லை! அவர்களின் சில பழக்கவழக்கங்கள் அறிந்திருந்த போதிலும், அவர்களின் டர்பன் பற்றி எனக்கு எந்த விபரங்களும், தெரியவில்லை.
முந்தைய ஆஃபிஸில் என்னோடு வேலைபார்த்த சர்தாரிடம் கூட அதுகுறித்து எனக்குக் கேட்கத் தோன்றவில்லை. சிங் என்றால் டர்பன் அணிவார்கள்; அல்லது டர்பன் அணிபவர்கள் எல்லாம் சிங் என்றே மனதில் பதிந்திருந்ததால் இதுவரை காரணம் குறித்து யோசிக்கவில்லை. அறியாததை அறிந்துகொள்வதுதானே அறிவுள்ளவர்களுக்கு அழகு!! அறிந்து கொண்டதை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
முந்தைய ஆஃபிஸில் என்னோடு வேலைபார்த்த சர்தாரிடம் கூட அதுகுறித்து எனக்குக் கேட்கத் தோன்றவில்லை. சிங் என்றால் டர்பன் அணிவார்கள்; அல்லது டர்பன் அணிபவர்கள் எல்லாம் சிங் என்றே மனதில் பதிந்திருந்ததால் இதுவரை காரணம் குறித்து யோசிக்கவில்லை. அறியாததை அறிந்துகொள்வதுதானே அறிவுள்ளவர்களுக்கு அழகு!! அறிந்து கொண்டதை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
சீக்கிய மதம் தோற்றுவிக்கப்பட்ட 15ம் நூற்றாண்டு சமயத்தில் தலைப்பாகை என்பது அரசக்குடும்பத்தினரும், பணக்காரர்களும், உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களும் மட்டுமே அணியக்கூடிய ஒன்றாக இருந்தது. (பழைய படங்கள் சிலவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்). அவ்வகைப் பேதங்களைத் தவிர்த்து, எல்லோரும் சமமே என்ற உணர்வினைத் தோற்றுவிக்கும் முகமாக, சீக்கிய குருவால் தலைப்பாகை சீக்கியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது.
ஒரு சீக்கியரின் அடையாளம் எனப்படுவன: தலைப்பாகை, இயற்கையான உருவம், ”கன்கா” என்ற மரச்சீப்பு, மணிக்கட்டில் அணியப்படும் ”கரா” என்ற இரும்பு வளையம், மற்றும் “கிர்பான்” எனப்படும் குறுவாள். இவை அனைத்தும் அணிந்திருப்பவரே ஒரு முழுமையான சீக்கியராவார்.
கிர்பான் (Kirpan) தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், தான் இறைவனுக்கு அடிமை என்றுணர்த்த கராவும் (Kara), தலைப்பாகை மற்றும் கன்கா (Kanka) இவ்விரண்டும் தலைமுடியை ஒழுங்குபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சீக்கியர் தமக்கு இறைவன் தந்த இயற்கையான உருவத்தோடு ஒன்றி வாழவேண்டும் என்று வலியுறுத்தவே, தலைமுடி, தாடியை வெட்டுவதும், சீர்படுத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது. இது ஒழுக்கத்தைப் பேணவும் உதவும் என்பதாக வலியுறுத்தப்படுகிறது.
தலைமுடியை உச்சியில் சேர்த்து கொண்டையாகப் போட்டு, அதன்மீது தலைப்பாகை அணிவர். இது “ரிஷி முடி” என்று அழைக்கப்படும். முனிவர்களின் கொண்டை மனக்கண்ணில் வருகிறதா? இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கமும் உண்டு. உச்சியில் போடும் கொண்டையும், அதன் மேல் இறுக்கமாகக் கட்டப்படும் தலைப்பாகையும் தலையில் உள்ள சக்திப் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்தி, தெளிவான மனநிலையையும் கொடுத்து, மற்றவர்களின் கெட்ட எண்ணங்களிலிருந்தும் (negative thoughts) அணிபவரைக் காத்து, மனதை ஒருமுகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
கிர்பான் (Kirpan) தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், தான் இறைவனுக்கு அடிமை என்றுணர்த்த கராவும் (Kara), தலைப்பாகை மற்றும் கன்கா (Kanka) இவ்விரண்டும் தலைமுடியை ஒழுங்குபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சீக்கியர் தமக்கு இறைவன் தந்த இயற்கையான உருவத்தோடு ஒன்றி வாழவேண்டும் என்று வலியுறுத்தவே, தலைமுடி, தாடியை வெட்டுவதும், சீர்படுத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது. இது ஒழுக்கத்தைப் பேணவும் உதவும் என்பதாக வலியுறுத்தப்படுகிறது.
தலைமுடியை உச்சியில் சேர்த்து கொண்டையாகப் போட்டு, அதன்மீது தலைப்பாகை அணிவர். இது “ரிஷி முடி” என்று அழைக்கப்படும். முனிவர்களின் கொண்டை மனக்கண்ணில் வருகிறதா? இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கமும் உண்டு. உச்சியில் போடும் கொண்டையும், அதன் மேல் இறுக்கமாகக் கட்டப்படும் தலைப்பாகையும் தலையில் உள்ள சக்திப் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்தி, தெளிவான மனநிலையையும் கொடுத்து, மற்றவர்களின் கெட்ட எண்ணங்களிலிருந்தும் (negative thoughts) அணிபவரைக் காத்து, மனதை ஒருமுகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இத்தலைப்பாகையானது ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் அணிவது கட்டாயம். பெண்கள் முடியை, தலையின் பின்பக்கம் கொண்டையிட்டு தலைப்பாகை அணிந்து அதன்மேல் தமது துப்பட்டாவை முக்காடாக இடுவர்.
தலைப்பாகைத் துணிக்கு வெண்மை, கருநீலம், குங்கும நிறம் ஆகியவை அதிகம் விரும்பப்படும் நிறங்கள். தலைப்பாகை அணியும் இவர்களால் ஹெல்மெட் அணிய முடியாது என்பதால், அதிலிருந்தும் சிறப்பு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இராணுவம் உட்பட மற்றுள்ள எல்லாப் பணியிடங்களிலும், உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் டர்பன் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலவிதங்களில் அணியப்பட்டாலும், டர்பன் அணிவதைத் தம் இனத்தின் அடையாளமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர் இவர்கள். இறைவன் ஒருவனே என்ற கொள்கை கொண்ட இவர்கள், மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர்கள். ஆணும், பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் இவர்கள், பெரும்பாலும் இருபாலருக்கும் பெயர்களில்கூட வித்தியாசம் காட்டுவதில்லை. துணைப் பெயர்களான “சிங்” (சிங்கம்), “கௌர்” (இளவரசி) கொண்டே அறியமுடியும்.
Source: www.sikhnet.com; www.sikhiwiki.org; www.sikhchic.com; www.sikhwomen.com
பலவிதங்களில் அணியப்பட்டாலும், டர்பன் அணிவதைத் தம் இனத்தின் அடையாளமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர் இவர்கள். இறைவன் ஒருவனே என்ற கொள்கை கொண்ட இவர்கள், மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர்கள். ஆணும், பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் இவர்கள், பெரும்பாலும் இருபாலருக்கும் பெயர்களில்கூட வித்தியாசம் காட்டுவதில்லை. துணைப் பெயர்களான “சிங்” (சிங்கம்), “கௌர்” (இளவரசி) கொண்டே அறியமுடியும்.
Source: www.sikhnet.com; www.sikhiwiki.org; www.sikhchic.com; www.sikhwomen.com
|
Tweet | |||