Pages

அது ஒரு அழகிய நிலாக்காலமாம்!!





குழந்தைப் பருவம், ஓடியாடும் பருவம், குமரி(ரன்) பருவம்... இவற்றைத்தான் அநேகமாக எல்லாருமே தத்தம் வாழ்நாளில் அழகிய நிலாக்காலமெனக் கொள்வோம்!!

கவலை ஏதுமிலா பாலகப் பருவமே மிக இனிது. நாம் நம் கையால் சாப்பாடை எடுத்து உண்ணக்கூடத் தேவையிலா காலம். நேரங்காலத்தில் கணவனுக்கு மனைவி உணவு பரிமாறி பணிவிடை ( :-D ) செய்கிறாரோ இல்லையோ, குழந்தைக்குத் தாய் மணியடித்தால் சோறு படைக்கும் காலம் அது.

காண்பதெல்லாம் இனிதாகத் தெரியும் குமரப் பருவமோ அதனைவிட இனிது. எதிர்காலம், அது கொண்டுவரக்கூடிய கவலைகள், சுமைகள் என்று எதுகுறித்தும் கவனம் கொள்ளாமல், நண்பர்களே உலகம் என வாழ்ந்த சுகமான பருவம்.

திருமணமான புதிதில் இதைவிட இனிமை வாழ்வில் உண்டோ என்று நினைத்த (காலமாகிவிட்ட) காலம். இந்த இனிமையும், ரசனையும், சுதந்திரமும் இனி நம் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் என்று நம்ம்ம்ம்பிய அப்பாவிக் காலம்!!

சுகமான சுமையைக் கருவில் ஏந்தி, பின்னர் அப்பூங்கொத்தைக் கையில் ஏந்தி, ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேன் எனப் பெருமை கொண்ட காலம்.

ப்படி ஒவ்வொரு பருவமாகத் தாண்டி வரும்போதெல்லாம், அப்போதைய பருவமே அழகானதாக, மனதுக்குப் பிடித்ததாகத் தோன்றும். ஆனால், அது பாரமான சுமைகளைச் சுமக்கத் தொடங்கும் இந்தப் பருவம் வரைதான்.

அதுவும் பிள்ளைகள் வளர வளர, நம் வயது தேயத்தேய, காலம் கரையக் கரைய, கவலைகள் பிரச்னைகள் வளருங்காலமாகிவிட்டது இப்போது. ஒவ்வொன்றாக சிக்கவிழ்த்து முடித்து வைத்து நிமிரும்போது, அடுத்த சிக்கல் காலைக்கட்டத் தயாராக இருக்கும் காலமிது.

இந்தப் பருவத்தில்தான், நாம் கவலைகளின்றிப் பட்டாம் பூச்சிகளாகத் திரிந்த அந்தக் காலங்களெல்லாம் நம் நினைவுக்கு வந்து, “ஹூம்... அது ஒரு அழகிய நிலாக்காலம்...!!” என்று பெருமூச்சு விட வைக்கும்!!

ம்மிடம் டைம் மெஷினோடு ஒருவர் வந்து, “சரி, நீ அழகிய நிலாக்காலமாக நினைக்கும் அந்தக் காலத்திற்கே உன்னை மீண்டும் அனுப்பி வைக்கிறேன், வா!!” என்று அழைத்தால் இப்போதைய பிரச்னைகளிலிருந்து விடிவு கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்து அவரின் டைம் மெஷினுக்குள் ஓடிவிடுவோமா? இல்லையே, அவரிடமிருந்து தப்பித்து, வேறு பக்கமாகத்தான் ஓடுவோம்!!

எவ்வளவோ மூச்சுமுட்டுமளவு பிரச்னைகள் இருந்தாலும், இந்த நொடியை - நிகழ்காலத்தை விட்டுப் பிரிய மனம் வருவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

சிலர், “அந்தக்காலத்துல காற்று சுத்தமாருந்துது; தண்ணி சுத்தமாருந்துது; சாப்பாடும் விஷங்கள் கலக்காம இருந்துது... இண்டர்நெட் கிடையாது... ஸ்மார்ட் ஃபோன்கள் கிடையாது.. அதுதான் ஆரோக்கியமான காலம்...” என்று நீட்டி முழக்கி, “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை....” என்ற வியக்கியானத்தோடு முடிப்பார்கள்.

அவர்களை மின்சாரம் இல்லாத... அட, குறைந்தபட்சம் ஏசி மட்டும் இல்லாத, ஓவர்ஹெட் டாங்க் இல்லாத, இண்டர்நெட் இல்லாத ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்து வீட்டில் இருக்கச்சொன்னால் அலறி விடுவார்கள்!!

தேபோலத்தான், (என்னைப் போல) இருக்கும் காலத்தைவிட்டு பழையதைப் போற்றுபவர்களும்!! இவர்களேதான், நாளை தத்தம் பேரப்பிள்ளைகளிடம் “நாங்கலாம் அந்தக் காலத்துல...” என்று ஆரம்பித்து.... இந்த - இதே பாரமான காலத்தையும், அதை தான் வெற்றிகரகமாகக் கடந்து வந்ததையும் பெருமையோடு பிரஸ்தாபிப்பார்கள்!!

நிலா வரும் காலமெல்லாம் - நிலா வரும்வரையான காலமும் - அதை நாம் பார்க்க முடிகிற ஒவ்வொரு காலமும் அழகான நிலாக்காலம்தான்!!

தென்ன “#நிலாக்காலம்”? ஏன் சூரியக்காலம் இல்லை? அல்லது நட்சத்திரக்காலம்?

நிலா, அதன் எல்லா அமைப்பிலும் அழகுதான். சிறு பிறையாக இருக்கும்போது, வளர்ந்து அரை வட்டமாக இருக்கும்போது, முழு நிலவாக இருக்கும்போது என, அதன் எல்லாப் பருவங்களிலுமே நிலவு அழகுதான். நிலாவே வராத அமாவாசை இரவுகூட ஒரு விதத்தில் அழகு!! இது நிலாவுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. அதனாலதான் நிலாக்காலம்!!

வாழ்க்கையும் அதன் எல்லாப்பருவங்களிலும் சிறப்புத்தான்!!





படத்தில்: #காலை நிலா!! இதிலும் நிலாதான் வித்தியாசமானது. இரவுதான் அதற்கானது என்றாலும், பகலில்கூட சில சமயங்களில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்!!   

இரவில் சூரியன் வந்தா அது இரவே இல்லியே!! எட்டிப் பாத்தாக் கூட அது பகல் ஆகிடும். நட்சத்திரத்துக்கு அத்தனை பவர் கிடையாது.


(எப்படி இப்படிலாம்? எனக்கே தாங்கலை.... )

“டீக்கடை”  ஃபேஸ் குழுமத்தில் ” உங்கள் வாழ்வின் நிலக்காலம் எது?” என்ற போட்டிக்காக எழுதியது.

Post Comment

கண்ணுறங்கும் காலம்!!








ஸ்லாமிய வரலாறுகள், ஹதீஸ்கள் வாசிக்கும்போதெல்லாம் அடிக்கடி நம் கண்ணில் படும் ஒரு விஷயம்,   நபி(ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் இரவில் அதிக நேரம் தஹஜ்ஜத் தொழுதார்கள் என்பதுதான். உதாரணமாக, கலீஃபா உமர்(ரலி) அவர்கள், இரவில் மூன்றிலொரு பகுதி முழுதும் தஹஜ்ஜத் தொழுதார்கள் என்று வாசித்த போது ஆச்சரியம் தாளவில்லை எனக்கு!!
ஓர் இரவின் மூன்றிலொரு பகுதி என்பது குறைந்தது இரண்டு மணி நேரம் என்று வைத்துக் கொண்டாலும்எப்படி அவர்களால் அவ்வளவு நேரம் தொழ முடிகிறது என்று யோசிக்கத் தோன்றுகிறதல்லவா?
நமக்கெல்லாம் சுபுஹூ தொழ எழும்பவே மிகக் கஷ்டமாக இருக்கும்.  கட்டாயத்துக்காகத்தான் சுபுஹுவே எழுந்து தொழுகிறோம். இதில் எங்கே தஹஜ்ஜத் தொழ? அப்படியே தொழுதாலும், சுபுஹுவுக்குப் பத்து நிமிஷம் முன் எழுந்து அவசர அவசரமாகத் தொழுமளவுதான் இருக்கிறது நம் நிலை.
அதிலும் உமர்(ரலி) அவர்கள் தஹஜ்த் தொழுவது மட்டுமல்லஇரவின் இன்னொரு  மூன்றிலொரு பகுதியில் நகர்வலமும் சென்று வருவார்களாம்.
அப்படின்னா அவர்கள் இரவில் தூங்குவதே இல்லையோ என்று சந்தேகம் வருமல்லவா? எப்படி அவர்களால்  போதிய தூக்கமில்லாமல் தாக்குப் பிடிக்க முடிகிறது?
ருத்துவ உலகம், ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் குறைந்த பட்சம் ஆறு - ஏழு மணி நேர தூக்கம் கண்டிப்பாக வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அப்படி இல்லையென்றால், அது பலவித உடல் உபாதைகள் மற்றும் மன நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கடுமையாகக் கண்டிக்கிறது. அது உண்மையே என்று பலரின் அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரே ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையென்றால் கூட, அடுத்த நாள் பகலில் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டே இருக்கும். மனம் நிலையாக இருக்காது. எதைப் பார்த்தாலும், யாரிடம் பேசினாலும் எரிச்சல் எரிச்சலாக, கோபமாக வரும். 
எனில், எப்படி நபிகளும், சஹாபாக்களும் தொடர்ந்து போதிய அளவு தூக்கம் இல்லாமல் தாக்குப் பிடிக்க முடிந்ததுஅவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடிவதில்லை என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டே இருந்த சம்யத்தில்தான், கீழ்க்கண்ட ஹதீஸ் கண்ணில் பட்டது!!
இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதும்இஷாத் தொழுகைக்குப் பின்னர் பேசுவதும் வெறுக்கத்தக்க செயலாகும்.  568. அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.

'
நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.'  Book : 9  ஸஹீஹ்  புஹாரி

இதற்குப் பின்புதான், இப்புதிருக்கு விடை கிடைத்தது.  இஷாவுக்குப் பிறகு பேசக்கூடாதென்றால், உடனே உறங்கிவிட வேண்டும் என்று பொருள்.  இஷா என்பது நமக்கான நாள் முடிந்துவிட்டது என்பதற்கான வரையறை. நமது அனைத்து வேலைகளையும் அத்தோடு முடித்துவிட்டுஉறங்கிவிட வேண்டும்.
அவ்வாறு உறங்கினால், தஹஜ்ஜத் நேரம் வரை தாராளமாக ஆறு முதல் ஏழு மணிநேர தூக்கம் கிடைக்கும்.  தஹஜ்ஜத்திற்கு எழுவது இலகுவாக இருக்கும்.
மருத்துவ ரீதியாகச் சொல்லப்படும் ஏழு மணி நேரத் தூக்கம்என்பதும் இதன் மூலம் சாத்தியப்பட்டு, அறிவியலும், இஸ்லாமும் எப்போது ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்றும் நிரூபணமாகிறது.

சில அறிவியல் ஆய்வுகளும், இரவுத் தூக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்று வலியுறுத்துகின்றன. உதாரணமாக, இரவு நேரத்தில்தான், நம் உடலின் மிக முக்கியமான மெலடோனின்என்ற ஹார்மோன் சுரக்கின்றது. 

இதைச் சுரக்கும் பீனியல்சுரப்பி, கண்ணோடு இயைந்து செயலாற்றுகிறது. அதாவது கண்ணில் ஒளிபடாவிட்டால் மட்டுமே, இச்சுரப்பி மெலடோனினைச் சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன், நம் உடலின் தூக்கம்-விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைச் சீராக்கவும் செய்வதோடுபெரும் நோய்களான ஹெச்ஐவி, கேன்ஸர் போன்ற நோய்களும் நம் உடலைத் தாக்காவண்ணம் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படுகிறது. 

இன்ஸுலின்என்ற இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனும் இரவு தூக்கத்தைப் பொறுத்தே சிறப்பாகச் செயல்படும். போதிய தூக்கமின்மை, தாம்பத்திய வாழ்வையும், குழந்தை பிறப்பையும் கூட பாதிக்கும்.  மறதி அதிகரிப்பதும், விரைவில் உடலில் வயதாகிப் போன தன்மைகள் வருவதும்இதய நோய்சர்க்கரை நோய், எதிலும் மனம் ஒன்றி கவனம் செலுத்த முடியாமை,  ஆகியவையும் தூக்கமின்மையின் பின்விளைவுகளே. 

ஏன், தூக்கமின்மை  அகோரப்பசியை உண்டாக்குவதால், உடற்பருமனுக்கும் காரணமாகிறது.  சுருக்கமாக, தூக்கமின்மை பாதிக்காத செயற்பாடுகளே நம் உடலில் இல்லை எனலாம். அதன் தொடர்ச்சியாக நம் குணத்தில் - எண்ணங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தும். ஆம், போதிய தூக்கமின்மை உடல் பாதிப்புகளை மட்டுமல்லாது, மன நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லது. 

சமீபகாலமாக, தமிழகத்தில் மிக இளவயதினர் - எந்த நோயுமில்லாதவர்கள்கூட - திடீர் திடீரென மரணிப்பதைக் காண்கிறோம். இவ்வாறான திடீர் மரணத்திற்கும், தூக்கமின்மைக்கும் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கக் கூடும் என்பதை முழுமையாக மறுக்க முடியாது. 

தனால்தான் அல்லாஹ் தனது திருமறையில்பல இடங்களில்  இரவு தூக்கத்திற்கானது  என்று  மீண்டும் மீண்டும்வலியுறுத்தியுள்ளான்.  இதைக்கூடச் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்று அன்று அதை வாசிக்கும்போது தோன்றினாலும், இன்று இதன் அத்தியாவசியம் புரிகிறது. இன்றைய சமூகம் புரிய வைத்துள்ளது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!! 

30:23இன்னும், இரவில்  உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்;  பகலில்அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 

 [78:9]   மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.   

25:47] அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.

தையெல்லாம் அறியாமல், இன்றைய சமூகம் இரவுத் தூக்கத்தையே விட்டொழிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.  செல்ஃபோன், டிவி, லேப்டாப், பார்ட்டி, சினிமா என்று ஏதாவது ஒன்றில் நம் தூக்கத்தைத் தொலைக்கிறோம்.  

வணக்க வழிபாடுகளில் இரவைச் செலவழித்த நபிமார்கள், கலீஃபாக்கள், ஸஹாபாக்கள், இறைநேசர்கள் வழி வந்த நாம் இன்று, வெற்றுக் கேளிக்கைகளில் நம் இரவுகளை - தூக்கத்தைத் தொலைக்கின்றோம்!! இரவுகளில் அதிகமதிகம் வணக்க வழிபாடுகள் செய்தபின்பும்கூட அவசியமான அளவு தூங்கி, உடலையும் மனதையும் பாதுகாத்துப் போஷித்த நம் முன்னோர்கள் எங்கே?

இரவுத் தொழுகை என்ற ஒன்றே இல்லாமல், இரவுகளில்  விழித்து  வீண் காரியங்களில் ஈடுபட்டு உடலையும் மனதையும் சீர்கெடுத்துப் பாழாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறை எங்கே?

சமரசம் 16-30 ஏப்ரல் 2018 இதழில் வெளியான கட்டுரை.

Post Comment

நூத்திரெண்டு









"102 Not Out" என்று வித்தியாசமான பெயரில் அந்தப் படத்தின் விளம்பரத்தைப் பார்த்ததும் கிரிக்கெட் பற்றியதாக இருக்குமோ என்று நினைத்துத் தவிர்த்துத்  தாண்டிப் போக நினைத்த ”முன்னாள் கிரிக்கெட் பைத்தியமான” என்னை, அதில் இருந்த நடிகர்கள் அமிதாப் மற்றும் ரிஷி கபூரின் புகைப்படங்கள், கதை  என்னவா இருக்கும் என்று ஆவல் கொள்ள வைத்தது.

இவுங்க ரெண்டு பேரும் ப்ராட்மேன் காலத்துல கிரிக்கெட்  விளையாடியதைக்  கதையாகச் சொல்லிருப்பாங்களோ என்றும் பயம் வந்தது. இருந்தாலும் ஏனோ  இந்தப் படத்தின்மீது ஒரு தனி கவனம், ஆவல் இருந்துகொண்டே இருந்தது. (எனக்கும் வயசாகிக் கொண்டு வருவதும் ஒரு காரணமா இருக்குமோ? 😱 😆) பார்க்க வேண்டிய படங்கள் என்ற லிஸ்ட் எழுதி வைத்திருந்த ஒரு குயர் நோட்டின் கடைசி பக்கத்தில் இந்தப் படத்தின் பெயரையும் எழுதிக் கொண்டேன்!! பிறகு வழக்கம்போல மறந்தும் விட்டேன்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக, திடீரென்று ஒரு நாள் இப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. வழக்கத்திற்கு மாறான படமாகவும் இருந்தது!!!  😜



ஆரம்பமே அட்டகாசமான காட்சிகள்!! அமிதாப் பச்சன்,  முதியோர் இல்லம் ஒன்றுக்கு ஃபோன் செய்து, 75 வயது பெரியவரான ரிஷி கபூரைச்  சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார். அவர் உங்கள் தந்தையா என்று அவர்கள் அமிதாப்பிடம் கேட்க, அவரோ, “இல்லை, ரிஷி என் மகன்!” என்று பதிலளிக்க, ஃபோன் துண்டிக்கப்படுகிறது!! 😄

ஆம், 102 வயதான அமிதாப்பின் 75-வயது மகன் தான் ரிஷி கபூர். அப்பாவும் மகனுமாக பல வருடங்களாக ஒரே வீட்டில் தனியாக வசித்து வருகிறார்கள். ரிஷியின் மகன் அமெரிக்காவுக்குப் படிக்கப் போனதோடு அங்கேயே செட்டிலாகி விட்டார்.

அமிதாப் “கலகல” பார்ட்டி; ரிஷியோ “கம்கம்” பார்ட்டி. அவர் ஆடிப்பாடி மகிழ்ந்து இருக்க, இவர் டைம் டேபிள் போட்டு வேலைகள் செய்வார். தேவையின்றி ஒரு வார்த்தை பேசுவதும் இல்லை. ஆகவேதான் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கத் துணிகிறார் அமிதாப். 

வழக்கமாகப் பயன்படுத்தும் பெட்ஷீட் மாறினால் கூட தூக்கம் வராமல் தவிக்கும் தன்மையுடைய ரிஷியோ, தன்னை முதியோர் இல்லம் அனுப்ப வேண்டாம் என்று அப்பாவிடம் கெஞ்சுகிறார்!! அப்படி அனுப்பாமல் இருக்க வேண்டுமென்றால் தான் சொல்லும் 6 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்கிறார். 

சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சிகரமான அந்த நிபந்தனைகளை அவர் ஏற்றாரா? நிறைவேற்றினாரா? என்னவென்றாலும் ஒரு தந்தை, ஆதரவற்ற தன் வயோதிக மகனை வீட்டைவிட்டு அனுப்பத் துணிவாரா? அதற்கான பின்ணணி என்ன? என்பதுதான் கதை. 

க்ளைமாக்ஸ் கொஞ்சம் எதிர்பார்த்தது போலத்தான் இருந்தது என்றாலும், படம் சுவாரஸ்யம். உடனே பார்க்கக்  கிளம்பிவிடாதீங்க. ஏன்னா, வழக்கமான தமிழ்ப்படங்கள் பார்க்கிறவங்களுக்கு இந்தப் படம் போர் அடிக்கும். வித்தியாசமான படங்கள் பார்க்கும் வழக்கம் உள்ளவங்க பாருங்க. 

முக்கியமாக இதில் கதாநாயகி என்று யாரும் கிடையாது!! ஏன், பெண் கதாபாத்திரங்களே கிடையாது. அப்பா, மகன், அவர்களின் உதவியாளர் என்று மூவர்தான் படம் முழுதும். எனவே டூயட் கிடையாது; வில்லன் இல்லை என்பதால் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் கிடையாது.

அப்ப இதில் என்னதான் இருக்குது என்றால்..... வாழ்வது எப்படி என்று இருக்கிறது.  முதுமையும் தனிமையும் இருந்தாலும் வாழ்க்கையை எப்படி இரசித்து வாழ்வது என்று சொல்லியிருக்கிறது. கொஞ்சம் வயசாகிட்டாலே, இனி என்ன இருக்கு என்று சலித்துக் கொள்ளும் ரிஷி கபூர் போன்றவர்களுக்கு, நூறு வயதைக் கடந்தாலும், “நான் இன்னும் 16 வருடங்கள் வாழ்வேன்” என்று சொல்லும் அமிதாப் தன்னம்பிக்கை  ஊட்டுகிறார்.  

இன்னொன்று,  (நிஜ) வயது 70-ஐத் தொட்டாலும், இன்னும் எந்திரங்களாகவே நடித்துக் கொண்டிருக்கும் நம் ஊர் கதாநாயகர்களுக்கு மத்தியில்,  தரமான வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்தால், வயதுக்கேற்ற பாத்திரங்களில் மட்டுமே நடித்தும் மனதைக் கவர முடியும் என்பதை இப்படங்கள் நிரூபிக்கின்றன. 



Post Comment