Pages

Showing posts with label பேலியோ. Show all posts
Showing posts with label பேலியோ. Show all posts

பெண்ணிய பேலியோ!!




ழக்கமா, மட்டன் வாங்கிட்டு வரும்போதெல்லாம் எங்கூட்ல எனக்கும் எங்கூட்டுக்காரருக்கும் ஒரே வாக்குவாதமாத்தான் இருக்கும்.(வாங்காட்டியும் இருக்கத்தான் செய்யுங்கிறதைச் சொல்லணுமா என்ன.... காரணத்துக்கா பஞ்சம்?)

”கொழுப்பைக் கழிக்கிறேன்னு இம்புட்டு  கழிக்கிறே... கொஞ்சமாச்சும் கொழுப்பு இருந்தாத்தான் ருசி இருக்கும்...”

“அப்படியொண்ணும் ருசியாத் திங்க வேணாம்... ஏற்கனவே பிறப்பிலேயே இருக்கிறது காணாதுன்னு சாப்பாடுலயும் கொலஸ்ட்ரால் சேர்க்கணுமா...”

ருசியைச் சொன்னால் வழிக்கு வரமாட்டேன் என்று, உடனே பொருளாதாரம்  பேசுவார். விலையைச் சொன்னா, நகையைக் கூட வேண்டாம்னு சொல்றவ நான் என்ற தந்திரம் அறிந்தவர்!!

“மட்டன் என்ன விலை தெரியுமா? இப்படி ஒரு கிலோவுல கால்கிலோவை கொழுப்புனு கழிச்சா எவ்வளவு பணம் வேஸ்டாகுது?” 

“ம்ம்.. டாக்டருக்குக் கொடுக்கிற பணம் மிச்சமாகுதே... அதுக்கு இது சரியா வரும்... போங்க பேசாம...”
 
ப்படித்தான், ”Red Meat” வகைகள் உடலுக்கு நல்லதில்லை என்ற “ஆரோக்கியக் குறிப்பை” நம்பி மட்டன் வங்குவதே அரிதாகி வந்த நிலையில்... பேலியோவுக்கு வந்தபின், மட்டன் நிறைய உண்ணலாம் என்ற உண்மை தெரிந்ததும், அதுவும் கொழுப்போடு சேர்த்து உண்ண வேண்டும் என்று தெரிந்து கொண்டதும், அதற்கும் குற்ற உணர்ச்சி வந்தது!!
 
பேலியோவுக்குப் பின், கடைக்குப் போயிருந்த போது, மட்டன் செக்‌ஷனில் ஆர்டர் கொடுத்து விட்டு கடைக்காரர் கறியை வெட்டுவதைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். நான் பேலியோவுக்கு வந்தபின் “திருந்திய” கதையெல்லாம் பக்கத்துல நின்ன என்  ட்டுக்காரருக்கு தெரியாது.

பரிதாபமா, “பாரு, இங்கயே எவ்ளோ கொழுப்பைக் கழிக்கிறாரு பாரு.. அதோடு சேந்து எவ்ளோ மட்டன் வேஸ்டாகுதுன்னு பாரு... அவர்கிட்ட சண்டை போட்டு கொழுப்பைக் கழிக்கச் சொல்லி வாங்கிட்டு வந்தா, சரியாவே வெட்டி வாங்கலைன்னு நீ என்கிட்ட சண்டை போடுற. அதுக்கு மேலே நீயும் கொழுப்பைக் கழிக்கிறேன்னு கழிச்சு, ஒரு கிலோ மட்டனை அரைகிலோவா ஆக்குறது மட்டுமில்லாம, டேஸ்டா இல்லாம ஆக்கிடுற...” என்றார்.
 
”மனம் திருந்திய மனைவி”யாக நான் என் மனதிற்குள், “இல்லங்க, இனிமே கொழுப்பை வெட்ட வேணாம்னு சொல்லுங்க.. கொழுப்பு நல்லதாம்..” என்று நினைத்துக் கொண்டாலும், சொல்ல நா எழவில்லை. தயங்கியே நின்றேன்... 
 
ந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக்... 18 வருடங்கள் முன்பு....
 
கல்யாணமான புதிதில் என் மாமியார் ஒருமுறை என்னிடமும், என் மச்சினர் மனைவியிடமும் , “சாயாக்கு இஞ்சி போடும்போது, தோலைச் சுரண்டிட்டு போடுங்கோ.. தோல் நல்லதில்லை” என்றார். நாங்க ரெண்டு பேரும் பெரிசா கண்டுக்கலை. பின்னர் ஒரு நாள் வீட்டுக்கு வந்த என் பெரிய மைனி, “இஞ்சியோட தோல் விஷமாம். தோல் சேர்க்காமதான் டீயில போடணுமாம். அந்தப் பத்திரிகையில் போட்டிருந்தாங்க. வெளிநாட்டுல இன்ன ரிசர்ச் செண்டர்ல ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க” என்று ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியைப் புள்ளி விபரத்தோடு சொன்னார். 

அதிலிருந்து நாங்கள் ஒழுங்காக தோலைச் சீவிவிட்டுப் போட ஆரம்பித்தோம். அதைப் பார்த்த என் மாமியார், “படிக்காத கிழவி சொன்னா ஏத்துக்க முடியலை. படிச்சவ வந்து இங்லீஷ்ல சொன்னவுடனே கேட்டுகிடுறீங்க என்ன?” என்று கிண்டல் செய்தார்.
 
தேபோல, இப்போ அவர் சொல்லி கேட்க இந்த விஷயத்தை பேலியோ க்ரூப்ல பாத்து தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னா, ”புருஷன் சொல்லி பொண்டாட்டி கேட்டதா சரித்திரம் உண்டா”ன்னு கிண்டல் பண்ணக்கூடாதே.... அதனால வெளியே சொல்லிக்காம, திருந்துன விஷயத்தை உள்ளுக்குள்ளயே வச்சுகிட்டேன்.  

முன்னல்லாம் ஒரு கிலோ மட்டனை அக்குவேறா ஆணிவேறா பிரிச்சு சுத்தம் பண்ண எனக்கு குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகும்!! இப்பலாம், கை துறுதுறுன்னு வந்தாலும் கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணி - 18 வருஷப் பழக்கத்தை திடீர்னு விட்டுட முடியுமா? - அரைமணி நேரத்துல க்ளீன் பண்ணி முடிச்சுடுறேன்.
 
டுத்து, அரிசி கோதுமை தவிர்ப்பதால், இட்லி, தோசை, சப்பாத்தி, நாண், இடியாப்பம், ரொட்டி, பாலாடைன்னு அதிக நேரம் எடுத்து செய்ய வேண்டியிருந்த வேலைகள் இப்போ இல்லை. ஏதாச்சும் ஒரு க்ரில், வறுவல், பொரியல்,குழம்புன்னு சமையல் இப்ப ரொம்ப ஈஸியா முடியுது!! (இது குடும்பத்தில் எல்லாருமே பேலியோவாக இருந்தால்தான் சாத்தியம்) இப்படியாக, பேலியோவுக்கு வந்ததன் முதற்பயனாக நேரமும், உழைப்பும்(!!!) மிச்சப்படுகிறது.
 
ன்னுமொரு முக்கியமான விஷயம், முந்தைய பதிவில் சொன்னதுபோல, பெண்களின் சரிவிகித உணவு. சாதாரணமா, பெண்கள் மட்டன் சிக்கன் போன்றவைகளை, வீட்டில் சமைச்சாலும் அதிகமா சாப்பிடமாட்டாங்க.  ஏன்னா, பிள்ளைங்களுக்கு, புருஷனுக்குன்னு எடத்வச்சுடுவாங்க. ஆனா இந்த டயட்ல இது மட்டுமே சாப்பிட்டாகணும் என்பதால், சத்துக்கள் முறையா கிடைக்கும். 

ப்படி எல்லா வகையிலும் சமைக்கும் பெண்களுக்கு முழு ஆதரவாக இருக்கும் பேலியோ டயட்டைக் கண்டுபிடித்தவர் கண்டிப்பாக ஒரு பெண்ணாக இருக்க முடியாது. ரசம் காய்ச்சி, பொறியல் வைக்கவே நேரம் சரியாக இருக்கும்போது, எங்கே ஆராய்ச்சி - அறிவியல் செய்ய... பெண்களுக்கு உதவும் மிக்ஸி, க்ரைண்டர், வாஷிங் மெஷின் போன்றவைகளைக் கண்டுபிடித்ததும் ஆண்கள்தான்.  தப்பித்தவறி, அந்த வேலையைச் செய்ய நேர்ந்ததுதான் காரணமாக இருக்கலாம்.

 என் தோழி, அவர் கணவரிடம் வெந்நீர் போட கெட்டில் வாங்கிக் கேட்டார், கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து, அவருக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாதபோது, அவரது கணவர் டீ போட அடுக்களைக்குப் போனார். முதலில் அடுப்பில் வெந்நீர் வைத்தார். அது சூடாகுது, சூடாகுது, சூடாகிகிட்டே இருக்குது. கொதி வரதுக்குள்ளே வெறுத்துப் போ அவர் செய் முல் வேலை, உடனே ஒரு கெட்டில் வாங்கிக் கொடுத்ததுதான்!!

 அதே போல, இந்த டயட்டைக் கண்டுபிடித்ததும், ஒரு நாள் - ஒரே ஒரு நாள் - கரண்டியைக் கையில் பிடிக்க வேண்டிய நிர்பந்தம் வந்த ஒரு ஆணாகத்தான் இருக்குமோ???!!

Post Comment

உண்டி சுருங்குதல்...




ட்டை எடுத்துக் கொண்டு அம்மாவுக்காகக் காத்திருந்தேன். நான் காத்திருப்பதாலேயே உடனே சாப்பிட வந்தார். இல்லையென்றால் அம்மா சாப்பிட இன்னும் எத்தனை மணிநேரம் ஆகும் என்று தெரியாது. 


எனது தட்டில் கரண்டியை நிறைச்சு, சிந்தச் சிந்த மட்டன் வைத்த அம்மா, தனது தட்டில் அரை கரண்டியளவு கூட வைக்கவில்லை. ”என்ன இத்துணூண்டு வச்சிருக்கே” என்றவாறே நான் ஒரு கரண்டி எடுத்து வைத்ததும், உடனே பதறிப்போய், “இவ்வளவெல்லாம் என்னால சாப்பிட முடியாது” என்று வைத்ததை எடுத்து பாத்திரத்திலேயே போட்டார். 

ந்தக் காட்சி, இடம், ஆட்கள் மாறினாலும், வீட்டுக்கு வீடு நடப்பதுதான். அசைவம் என்றில்லை, சைவ உணவு என்றாலும் இதுதான் நிலை. சாப்பிட முடியாதது என்பதல்ல காரணம்.  பெண்கள் என்றால் எல்லாரும் உண்டபிறகு இருப்பதைக் கொண்டு குறைவாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதல் ஊட்டப்பட்டதே காரணம்!! ”பெண்டிர்க்கழகு உண்டி சுருங்குதல்” என்று ஔவைப் பாட்டியே சொல்லியிருக்காங்களே.....

இந்தியக் கலாச்சாரத்தில், கணவர் உண்டபின், அதுவும் அவன் மீதம் வைத்தவற்றோடுதான் மனைவி உண்ண வேண்டும் என்பது பெண்களுக்கான வழிகாட்டல். அதிலும், மனைவி மீதான அன்பின்காரணமாக, மனைவிக்குப் பிடித்த உணவுகளைத் தன் இலையில் வேண்டுமென்றே மீதம் வைத்திருப்பராம். ஏனெனில் அனைவரும் உண்டு முடித்தபின், கடைசியில் மனைவி உண்ணுவதால் அவளுக்கு உணவு மிஞ்சாமல் போய்விடுமோ என்ற கரிசனமாம்!! 

அந்தக் கரிசனத்தை மனைவியை தன் உடன் வைத்து ஒன்றாக உண்ணவைத்து காட்ட  வேண்டியதுதானே... என்று கேட்கவும் முடியாது!! ஏனெனில், இன்றைய தனிக்குடித்தனக் காலத்தில்கூட உடன் இருந்து உண்ணுமாறு கணவன் அழைத்தால், “பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டு, மத்த வேலைகளை முடிச்சுட்டு நான் சாப்பிட்டுக்குவேன், நீங்க சாப்பிடுங்க” என்று மனைவியிடமிருந்து ஒரு அதட்டல் வரும்.  இதுவும்  வீட்டுக்கு வீடு நடப்பதுதான்!!!

தென்னவோ எல்லாரும் உண்டு முடித்தபின், மிச்சம் மீதி இருப்பவற்றை வழித்து பாத்திரங்களை ஒழித்துவிட்டு உண்டால்தான் பெண்களுக்கு ஒரு திருப்தி. பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களில் கடைசியாக உண்ணும் பெண்களுக்கு காய், கறி வகைகள் கண்டும் காணாமல்தான் இருக்கும். தனிக்குடித்தனங்களில் அப்படி இல்லை என்றாலும், தனக்கென இருப்பதை “சின்னவனுக்கு பொறிச்ச கறி பிடிக்கும், இருந்தா ராத்திரிக்கு கொடுக்கலாம்” என்றோ; “இது இருந்தா நாளை டிஃபன் பாக்ஸுக்கு ஆச்சு” என்றோ மிச்சம் பிடிப்பதே வழக்கமாக இருக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்காததால் உண்ண மறுத்ததை வீணாக்கக்கூடாது என்று அவற்றையும் உண்டு எடையைக் கூட்டிக் கொள்வதும் ஒருபக்கம் நடக்கிறது.

பெண்கள் தாம் உண்ணும் உணவில் சமரசம் செய்வது என்பது தொன்று தொட்டு தொடங்கி, ”பெண் சமத்துவம்” கண்ட இன்றைய காலத்திலும் தொடரத்தான் செய்கிறது. கணவன் டூர் போனாலோ, அல்லது ஆஃபீஸ் பார்ட்டி என்றாலோ வீட்டில் சமைப்பதே இல்லை பல பெண்கள். சோம்பேறித்தனம் என்று காரணம் சொல்வார்கள். ஆனால் உண்மையில் தன்னைக் குறித்த அலட்சியமே காரணம்.

ஆண் எவ்வளவு செலவு செய்தாலும், அது அவன் சம்பாத்தியம் என்பதால், கண்டுகொள்ளப்படுவதில்லை. (பெண் சம்பாதித்தாலும் அது அவளது ஆணுக்குரியதே இங்கு).  பெண்கள் சிக்கனமாக இருப்பது அவர்களின் திறமைக்குச் சான்று என்ற சமூக எண்ணமும் காரணம்.  அதன் வெளிப்பாடுதான் சேர்த்த பணத்தைச் சிக்கனமா, செலவு பண்ண பக்குவமா, அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு... அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு!’ என்பதும்!!

அந்த எண்ணம் பெண்களுக்கும் ஊறிப்போனதினாலோ என்னவோ, மற்றதைவிட தமது உணவில் அந்தச் சிக்கனத்தை அதிகமாகக் காட்டுகிறார்கள்போல.... சிலசமயங்களில் எனக்கும் அது அதீதமாகிப் போய், “மட்டனே இல்லாமல் மட்டன் குழம்பு” வைக்குமளவு ஆகிப் போயிருக்கிறது!! 

ப்படியான சூழலில், கடந்த சில வாரங்களாக “பேலியோ டயட்”டுக்கு மாறியிருக்கிறேன்.  இதில்,  அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகளை முற்றிலும் தவிர்த்து, அசைவ உணவு, காய்கறிகள் மற்றும் நெய்-வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் போன்றவைகளை அதிகமாக எடுக்க வேண்டும்.  பொதுவாக பெண்கள், குழம்பு-கறி-பொரியல் வகைகளைக் குறைவாக எடுத்துக் கொண்டு, அதை ஈடு செய்யுமளவு சோறு-இட்லி-சப்பாத்தி போன்றவைகளை உண்டுகொள்வார்கள்.  

ஆனால், இந்த டயட்டில் சோறு-இட்லி-சப்பாத்திக்கு இடமில்லை என்பதால், முன்பு தொடுகறியாகக் குறைவாக உண்டவற்றை இப்போது வயிறு நிறைய உண்ண வேண்டியுள்ளது. உண்மையில் இது மனதளவில் ஒரு  குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதுதான் அதிர்ச்சி!! அந்த மனத்தடையைத் தாண்டி வந்து, தேவையான அளவு உண்ணுவதற்கு மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டி இருக்கிறது. 

எனக்கு மட்டுமல்ல, இந்த டயட்டைப் பின்பற்றும் சில பெண்களிடம் பேசியபோதும் இதையே உணர்ந்தேன். அதற்கு இன்னுமொரு காரணம், அசைவ உணவுகளின் விலையும் ஒரு காரணம். காலங்காலமாக சிக்கனம் பெண்களின் பொறுப்பு என்ற எண்ணம் ஊறிவிட்டதால், ஆரோக்கியத்தைவிட செலவு பெரிதாகத் தெரிகிறது.  ஆகையால், இந்த டயட்டை ஆரம்பிக்கும் பெண்கள் பலரும், தேவையான அளவு எடை குறைந்தவுடன் விட்டுவிட்டு பழைய டயட்டுக்குத் திரும்பி விடுகிறார்கள்.  ஆண்கள் பொதுவாக ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், விலையைப் பொருட்படுத்துவதில்லை. மேலும், முறையான திட்டமிடல் இருந்தால் செலவு அதிகமாவதில்லை.

பெண்களுக்குப் பொதுவாக அதிகமாக இருக்கும் இரும்புச் சத்து குறைபாடு, கால்ஷியம் குறைபாடு ஆகியவற்றிற்குக் காரணம் அவர்கள் பால் பொருட்கள், அசைவம் மற்றும் காய்கறி வகைகளைக் குறைவாக உண்ணுவதே முக்கியமான காரணம்!! இக்குறைபாடுகளைத் தவிர்க்க மாத்திரைகளை நாடுமளவுக்குத்தான் இன்றும் பெரும்பாலான பெண்களின் நிலை உள்ளது. 

இந்த டயட்டைக் குறித்து நான் வாசித்தவரை, முறையாகப் பின்பற்றினால், மருந்து மாத்திரைகள் அல்லாமல், உண்ணும் உணவே இயற்கையாக உடலின் இரும்புச் சத்து, கால்ஷியம்தேவைகளைப் பூர்த்தி செய்யும்!! தேவையற்ற கொழுப்பிலிருந்து உடலைக் காக்கவும் செய்யும். இதற்காகவாவது பெண்கள் இவ்வுணவு முறையை பின்பற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், பெண்களால் - இந்தியப் பெண்களால்- முடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!!

Post Comment