Pages

Showing posts with label டீக்கடை. Show all posts
Showing posts with label டீக்கடை. Show all posts

இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்






1857 - சிப்பாய்க் கலக வருடம். பரபரப்பான போர்க்களத்தில், போர் உடை தரித்து, தன் நாட்டு போர் வீரர்களுக்குத் தலைமையேற்று, கையில் வாளுடன் குதிரை மீதமர்ந்து தீரத்துடன் போரிட்டு, கிழக்கிந்திய கம்பெனியின் படையினர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தாள் அப்பெண்.  நீங்கள் நினைப்பது போல, ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய் அல்ல அப்பெண்.

ரந்து விரிந்த முகலாய அரசுக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டி ஆட்சி நடத்தி வந்த சிற்றரசுகள் இந்தியாவில் ஏராளம் உண்டு. இம்மாதிரியான சிற்றரசுகளை, முகலாய அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றுத் தருகிறோம் என்று நயவஞ்சகம் பேசி,  தம் பக்கம் இணைத்துக் கொண்டது கிழக்கிந்திய கம்பெனி அரசு. இணைந்த பின்னர் அவர்கள் விதித்த கெடுபிடிகளைக் கண்டு, தாம் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து நொந்து போயிருந்தன அச்சிற்றரசுகள். விலகி வரமுடியாதபடிக்கு பிரிட்டிஷாரிடமிருந்து நவீன ஆயுதங்கள் வாங்கிய வகையில் கடன்சுமை அந்த அரசுகளின்மீது ஏற்றப்பட்டிருந்தது.உலக வங்கிடெக்னிக் அப்போதே ஆரம்பித்துவிட்டது!! கடனைத் திருப்பிக் கட்டமுடியாத சிற்றரசுகளை அதன் மன்னர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைத்துக் கொண்டார்கள்.

த்தரப் பிரதேசத்தில் லக்னோவின் அருகில் இருந்தஔத்என்ற குறுநில அரசு, ”வஜீர் அலி ஷாஎன்ற குறுநில மன்னரால் ஆண்டுவரப்பட்டது.  ஆங்கில அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து,  பட்ட கடனைத் திருப்பிக் கட்ட முடியாததால், 1856-ல் கிழக்கிந்திய கம்பெனியின் நெருக்குதலைத் தாங்கமுடியாமல் அரசர் நாட்டை விட்டு வெளியேறினார்.
  
அரசர் வஜீர் அலி ஷாவின் மனைவிகளுள் ஒருவர்இஃப்திகருன் னிஸாஎன்ற இளம்பெண். வெளியேறத் துணிந்த கணவரை, கோழைபோல நாட்டைவிட்டுச் செல்வதை விட, வீரமாகப் போரிட்டு போர்க்களத்தில் மடிவதே மேல் என்று இவர் தடுத்துப் பார்த்தார். ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அந்த பெண்ணுக்கிருந்த வீரதீரம், அரச குடும்பத்தில் பிறந்து போர்ப்பயிற்சிகள் பல பெற்று வளர்ந்த அரச குலத்தைச் சேர்ந்த அந்த ஆணிடம் இல்லை!!

அரசவையைச் சேர்ந்தவர்கள், அரச பொறுப்பை ஏற்று, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட தமது மகன்களில் ஒருவருக்குப் பட்டம் சூட்டுமாறு அரண்மனையின் அனைத்து பட்டத்து அரசிகளிடமும் வேண்டுகோள் விடுக்க, அவர்களோ ஆங்கிலேயருக்கு அஞ்சி மறுத்தார்கள். இஃப்திகருன் னிஸாஒருவரே தைரியமாக முன்வந்தார்!!

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் பொறுப்பு தற்போது, பேகம் ஹஸ்ரத் மஹல் என்று பட்டம் சூட்டப்பெற்றஇஃப்திகருன் னிஸாவசம் வந்தது. இவர்  பிர்கிஸ் கத்ர்என்ற தனது 12 வயது மகனுக்கு ஔத் நாட்டு அரசனாகப் பட்டம் சூட்டினார். மகன் அறியாச் சிறுவன் என்பதால், மன்னரின் பிரதிநிதியாக (regent)  நாட்டை அவரே ஆட்சி செய்தார். அதே சமயம், கிழக்கிந்திய கம்பெனி ஔத்-தை பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க சர் ஜேம்ஸ் ஔட்ராம் என்ற ஜெனரலை நியமித்தது. 

சர் ஔட்ராம், ஔத்-ன் படைகளை கிழக்கிந்திய படைகளோடு இணைத்து மற்ற சிற்றரசுகளை எதிர்த்துப் போரிட அனுப்பினால், ஔத் அரசுக்கு தன்னாட்சி அளிப்பதாக ஆசை காட்டினார். பேகம் ஹஸ்ரத் மஹல் அதற்குப் பணிய மறுத்துவிட்டார். தன் சக நாட்டினரைக் காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இப்படிப் பலவிதங்களில் ஆசைகாட்டிப் பார்த்தும், மிரட்டிப் பார்த்தும் , ஔட்ராம் மற்றும் அவருக்குப் பின் அப்பணிக்கு நியமிக்கப்பட்ட ஜாக்ஸன் மற்றும் அதன்பின் வந்த சர் ஹென்றி லாரன்ஸ் ஆகியோரால், பேகம் ஹஸ்ரத் மஹலின் தீவிர எதிர்ப்பு காரணமாக, இணைப்புப் பணியை நிறைவேற்ற முடியவில்லை.

கிடைத்த இடைவெளியில், பேகம் ஹஸ்ரத் மஹல், கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவிடம் தன் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, தன் மகனை ஔத்-ன் அதிகாரபூர்வ ஆட்சியாளராக அறிவிக்கச் செய்தார். தன் ஆட்சியில் இருந்த ஊழல் அதிகாரிகளைக் களையெடுத்தார். தன் படைகளைப் பலப்படுத்தினார். ‘ராஜா ஜெய் லால் சிங்என்பவரை படைத்தளபதி ஆக்கினார்.

ச்சமயம், 1857-ல் சிப்பாய்க் கலகம் தொடங்கியது.  படை வீரர்கள் வாயில் வைத்து கடித்து பயன்படுத்த வேண்டிய துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றிகளின் கொழுப்பைத் தடவி வைத்தது இதன் முக்கியக் காரணமாக இருந்தது. டெல்லியில் தொடங்கிய பொறி, நாடெங்கும் பற்றிக் கொண்டது. போராட்டத்திலிருந்து உயிர்தப்பி, ஆங்கிலேய அதிகாரிகள் அங்கங்கு பதுங்கி இருந்தனர். லக்னோவில், 37-ஏக்கர் பரப்பில் ரெஸிடென்ஸிஎன்ற பிரிட்டிஷ் தூதரகம் ஒன்று இருந்தது. அதனுள் சுமார் 600 ஆங்கிலேயர்கள் அபயம் பெற்று இருந்தனர்.
 
பேகம் ஹஸ்ரத் மஹல், துணிச்சலாக, ”ரெஸிடென்ஸிதூதரகம் மீது தாக்குதல் நடத்தினார். ஜூலை 1857 முதல் செப்டம்பர் வரை 90 நாட்கள் தூதரகத்தின் மீதான முற்றுகை தொடர்ந்தது.  பல முக்கிய ஆங்கிலேயர்களின் உயிரைப் பறித்த இந்த முற்றுகை ஆங்கிலேயர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாய்ப் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஆங்கிலேயே அரசு ஒரு தனி படை அனுப்பி அந்த 90-நாட்கள் முற்றுகையை முறியடித்து, பேகம் ஹஸ்ரத் மஹலின் படையினரை லக்னோவைவிட்டு வெளியெற்றியது. ஒரு பெண் தலைமையிலான ஒரு சிற்றரசு, தனியே  நீண்ட நாட்கள் ஆங்கிலேயரை முற்றுகையிட்டது ஒரு பெரும் சாதனை ஆகும்.

ல வழிகளில் முயன்றும், இணைப்புக்கு வழிகிட்டாததால், மார்ச் 1858-ல் கிழக்கிந்திய கம்பெனி  படைகள், பேகம் ஹஸ்ரத் மஹலின் அரண்மனையைத் தாக்க பெரும்படை ஒன்றை அனுப்பியது. அப்போரில்,  9000 வீரர்களுக்குத் தலைமையேற்று தானே களத்திலிறங்கிப் போரிட்டார் பேகம் ஹஸ்ரத் மஹல். அந்தக் காட்சிதான் நாம் இக்கட்டுரையின் ஆரம்ப வரிகளில் கண்டது. “முஸாபக் யுத்தம்என்றழைக்கப்பட்ட இந்தப் போரில், அவருடைய படைவீரர்கள் சுமார் 5000 பேர் துரோகம் செய்துவிட்டனர். எனினும் கலங்காமல் நெஞ்சுரத்தோடு போரிட்ட அவர்,  தோல்வியடைந்த போதும் சரணடைய மறுத்தார்.

சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து  இந்திய நாடு,  ராணி விக்டோரியாவின் நேரடி ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. அதையொட்டி விக்டோரியா மகாராணி, நவம்பர் 1858-ல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, எதிர்-பிரகடனம் (Counter- Proclamation)ஒன்றை பேகம் ஹஸ்ரத் மகல் வெளியிட்டார்.  மகாராணியாரின் பிரகடனத்தையே எதிர்க்கத் துணித்த அவரின் இத்தைரியம் கண்டு பிரிட்டிஷாரே வியந்தனர்.  அந்தப் பிரகடனம் விளக்கமாக இந்த வலைப்பக்கத்தில் இருக்கிறது: http://oudh.tripod.com/bhm/bhmproc.htm. அதன் சாராம்சத்தைக் கண்டால் அவரது அறிவுக் கூர்மையும் தீரமும் விளங்கும்.

அதைத் தொடர்ந்து, நாய்க்கு எலும்புத் துண்டுகள் வீசுவதைப் போல, மானியங்கள் அளிப்போம் என்று ஆசை காட்டியோ அல்லது மிரட்டியோ அனைத்து சிற்றரசுகளும் வலுக்கட்டாயமாக பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைக்கப்பட்டன.  பிரிட்டிஷாரின் பல வாக்குறுதிகளுக்கும் மானியங்களுக்கும் மசியாமல், அவற்றின் பின்னிருந்த நயவஞ்சகத்தைக் கண்டுணர்ந்து, தாய்நாட்டுக்குச் சுதந்திரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட பேகம், அவற்றை ஏற்க மறுத்தார்.

1859-ம் வருட இறுதி வரை அவர் ஔத்-ன் ராணியாகவே இருந்தார். அதன் பின் ஆங்கிலேயரின் எதிர்ப்புகள் கடுமையானதால், காடுகளில் மறைந்து தாக்குதல்கள் மேற்கொண்டார். மானியங்கள் பெற்று இராஜ அந்தஸ்தோடு அரண்மனையில் சேவகர்களோடு வசதியாக  வாழ வாய்ப்புகள் இருந்த போதும், அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு கம்பீரமாக அடங்க மறுத்த சுதந்திரப் பறவையாகவே நாட்டைவிட்டு வெளியேறினார்.

அண்டை நாடான நேபாளுக்குச் சென்று 20 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். தன்னோடு கொண்டு சென்ற செல்வங்களை, தன்னுடன் அகதிகளாக நாடு விட்டு வந்தோருக்காகவே செலவழித்தார். வறுமையில் உழன்ற அச்சமயத்திலும், பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல், பேகம் திரும்பி வந்தால் பதினைந்து இலட்ச ரூபாய் ஒவ்வொரு மாதமும் மானியமாகத் தருவதாக ஆசைகாட்டியும் மறுத்து விட்டார். கடும் ஏழ்மை வாட்டிய போதும், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல், மன்னிப்புக் கடிதங்கள் எழுதாமல், சுயமரியாதையோடு கடைசிவரை ஆங்கிலேயேரை எதிர்த்தவராகவே நாட்டுப் பற்றோடு வாழ்ந்து 1879-ல் மறைந்தார்.
  
க்னோவில் ஹஸ்ரத்கஞ்ச் என்ற இடத்தில், 1962-ஆம் ஆண்டு இவ்வீரப்பெண்மணியின் பெயரில்ஹஸ்ரத் பேகம் மஹல்என்ற பூங்கா அன்றைய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டுள்ளது1992-ல் உத்ர்பிரேசத்ின் பாஜ.. ஆட்சியில் இப்பூங்காவின் பெயர்ஊர்மிளா பூங்காஎன்று மாற்றப்பட்டதாகவும், அதைக் கண்டித்து போராட்டங்களும்,  பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பும் எழுப்பப்பட்டது என்றாலும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பே பின்னர் பெயர் மாற்றம் நீக்கப்பட்டதாகவும் செய்திகள் உண்டு.



இவரது நினைவாக 1984-ம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. இவ்வம்சத்தைச் சேர்ந்த இளவரச் அஞ்சும் குதர் என்பவர், “தம் அரச வம்சத்தின் முகங்களில் வழிந்த கோழைத்தனத்தைத் துடைத்து எறிந்தவர்” என்று பேகத்தைப் புகழ்கிறார்.

கௌகப் கத்ர் என்ற வரலாற்றாசிரியர், “ஃப்ரான்ஸின் ஜோன் ஆஃப் ஆர்க்கைப் போல பிரிட்டிஷ் ஏகதிபத்தியத்தை எதிர்த்து நின்றார். அதன்மூலம் அவநம்பிக்கையில் முழுகிப் போயிருந்த உள்ளங்களில் நம்பிக்கை ஜோதியை ஏற்றினார்; எங்கிருந்தோ திடீரென்று வரும் விண்கல்லைப் போல வந்து ஔத் நாட்டின் ஒவ்வொரு அடியிலும் சுதந்திர வேள்வியை மூட்டினார்” என்று புகழ்கிறார்.

கார்ல் மார்க்ஸ், ரஸ்ஸல் உள்ளிட்ட இன்னும் பல வரலாற்றாசிரியர்களும் பேகம் ஹஸ்ரத் மஹலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதே இவரது தீரத்திற்கு எடுத்துக்காட்டு. 

(”டீக்கடை”  முகநூல் குழுமத்தில் நடத்தப்பட்ட “சுதந்திரப் போரில் முஸ்லிம்கள்” என்ற போட்டீக்காக எழுதியது)

Post Comment

கடனும் உடனும்




டீக்கடை” முகநூல் குழுமத்தில் 2014 ரமதான் மாத கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை.

கட்டுரைக்குள் போவதற்குமுன், ஒரு சந்தேகம்: கடன் தெரியும், “உடன்” என்றால் என்ன?
 
கைத்தொலைபேசி ஒலித்தது. இன்று காலை முதல், தெரியாத எண்ணிலிருந்து வரும் மூன்றாவது அழைப்பு இது. சலிப்போடு எடுத்தேன். “நாங்க ABCD பேங்கிலிருந்து பேசுகிறோம். பெர்சனல் லோன் குறைந்த வட்டியில் கொடுக்கிறோம்…” என்று ஆரம்பித்துப் பேச, மிகவும் கோபம் வந்தது. ஏற்கனவே வந்த இரண்டு அழைப்புகளும் இதுபோல வேறு வங்கிகளிலிருந்து வந்த அழைப்புகள்தான்!! இன்றென்ன ”Loan Day” ஆக இருக்குமோ?

இன்றைய காலகட்டத்தில்தான் “கடன்” வாங்குவது எத்தனை எளிதாகிப் போனது? முன்பெல்லாம், வசதியான உறவினர்களை சங்கோஜத்தோடு நாட வேண்டும். கடன் கிடைக்கலாம்; சிலவேளைகளில் கூடுதலாக அவமானமும். இல்லையெனில் சேட்டுக் கடை. அங்கே போனால், கொண்டு போனது போனதுதான். அன்றைய வங்கிகளிலா… ஊஹூம்.. சான்ஸே இல்லை. இன்றோ தெருவுக்குத் தெரு வங்கிகள். தாங்கித் தாங்கி அழைத்து கடன் தருகிறார்கள். தேவைப்படாத போதும் “கொடுக்கிறாங்களே, வாங்கிக்குவோமே” என்று எண்ண வைக்கும் அளவுக்கு ஆஃபர்கள்!!

அப்படியும் கடன் மேல் கடன் பெற்று தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் மக்களும் இருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளுக்காக அல்லாமல், சில கூடுதல் வசதிகளுக்காகக் கடன் வாங்கும் மக்களின் அறியாமையை நினைத்தால் “மறுமை நாளின் அடையாளங்களில் அறியாமை நிலைத்து விடுவதும் ஒன்றாகும்” (சஹீஹ் புஹாரி எண் 80) என்கிற ஹதீஸ்தான் நினைவுக்கு வந்தது.


த்தகையவர்களைவிட பரிதாபமானது, அடிப்படை வாழ்வாதாரங்களுக்காக வங்கியில் கடன் பெறுபவர்களின் நிலை!! பெறுவது சொற்பத் தொகைதான்; எனினும் காலம் முழுவதும் கட்டினாலும் வட்டிகூட முடிவதில்லை. தவணைகள்தோறும் அந்நிறுவனங்கள் அனுப்பும் அடியாட்களின் மிரட்டல்களைக் கண்டு அஞ்சி வாழ வேண்டிய நிலை!! தாங்கமுடியாமல் தற்கொலை செய்து, நிரந்தர நெருப்பில் புகுவோரும் உண்டு.

அதனால்தான் கடனைக் குறித்து அல்லாஹுவும் அவனது நபி(ஸல்) அவர்களும் கடுமையாக அறிவுறுத்தியிருக்கிறார்கள் போல!!

அல்லாஹ்வுக்கே கடன்!!

ஸ்லாத்தின் அடிநாதங்களில் ஒன்றான ஸகாத், ஏழைகளை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டது. அதேபோன்ற இன்னொரு சிறப்பான கடமை “அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்பது”. அல்லாஹ்வுக்கே கடனா? பள்ளிவாசல்களில் உண்டியல் இல்லையே என்று யோசனை வரும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதைத்தான், தனக்கே கடன் கொடுப்பதாக நினைத்துக் கொடுக்கச் சொல்கிறான். அதற்கான பிரதியுபகாரமாக “கொடுப்பதைப் பன்மடங்காக்கித் தருவேன்; மன்னிப்பும் அளிப்பேன்” என்று உறுதி கூறுகிறான்!! (குர் ஆன் 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20)

கடன் வாங்க/கொடுக்க நடைமுறைகள்:

எழுத்துவகையிலான எந்த ஒப்பந்தங்களும் நடைமுறையில் இல்லாத அன்றே - 1400 வருடங்களுக்குமுன்பே - இறைவன் கடன் மற்றும் கொடுக்கல்-வாங்கல்களை, உரிய சாட்சிகளோடு எழுதிவைத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறான். அதுவும், கடனை வாங்குபவர்தான் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை நிர்ணயிக்க வேண்டுமாம்!! (2:282)

வாசிக்கக்கூட அவகாசம் தராமல், வாசித்தாலும் புரியாத பாஷையில் கண்ணுக்குத் தெரியாத எழுத்துக்களில் இருக்கும் பத்திரத்தில், நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிப் போகச் சொல்லும் இன்றைய வங்கி/நிதி நிறுவனங்கள்/ கந்துவட்டி காலத்தில், இது உலக அதிசயம் அல்லவா? இஸ்லாமிய வங்கிகளுக்கு எதிர்ப்பு கிளம்புவதன் பின்ணணிகளில் இதுவும் ஒன்றோ!!

கடன் வாங்கியோரிடம் கருணை!

கடன் கொடுத்தோர், கடனை வாங்கியோரிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறான் இறைவன்.

2:280. அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.

யார் கடனை அடைக்க சிரமப்படும் ஒருவருக்கு (சற்று) அவகாசம் வழங்குகிறாரோ அல்லது (கடனை) தள்ளுபடி செய்கிறாரோ எந்நிழலும் இல்லாத அந்நாளில் இறைவன் தனது நிழலை அவருக்கு வழங்குவான் என்று கூறினார்கள் (அறிவிப்பவர்: கஃப் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம் 263 ஸுனன் அத்தாரமீ)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. (ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். சஹீஹ் புஹாரி Volume :2 Book :43 2391.)

வாங்கியவரின் சிரமம் உணர்ந்து, கடனைத் திருப்பி வாங்காமல் விட்டுவிட்டால், அவருக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுவதோடு, இறைவனின் நிழலும் வழங்கப்படுமாம். சுப்ஹானல்லாஹ்!! நாம் மறுமையில் எதை அடையப் போராடுகிறோமோ, அது இவ்வளவு எளிதானதாகக் கிடைக்கிறதே!!

எனில், கடன் கொடுப்போருக்கு??

இதுவரை கடன் கொடுத்தவர் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றி பார்த்தோம். இப்போது உங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியிருக்கும். “அப்படின்னா கடன் கொடுத்தா திருப்பிக் கேட்கக்கூடாதா? எல்லா சட்டமும், கடன் வாங்குனவருக்கே சாதகமா இருக்குதே?” என்று. இதை வெளியே சொல்லத் தயக்கமாகவும் இருக்கும். அது மிக நியாயமான எண்ணம்தான்!!

இஸ்லாம் ஒருபோதும் ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமாக இருப்பதில்லை. அடுத்த தரப்புக்கான சட்டங்களைப் பார்க்கும்போது இது விளங்கும்.

ஒருமுறை நபியவர்களுக்குக் கடன் கொடுத்த ஒருவர், மற்ற தோழர்களோடு இருந்த நபி(ஸல்) அவர்களிடம் கடனைத் திருப்பிக் கேட்டுக் கடுமையான வார்த்தைகளைப் பேசினார். உடனிருந்த தோழர்கள், “நபி(ஸல்) அவர்களிடமே மரியாதையற்ற முறையில் பேசுவதா?” என்று வெகுண்டு அவரைத் தாக்க முனைந்தனர். நபியவர்களோ அவர்களைத் தடுத்து, ” அவரைத் தண்டிக்க வேண்டாம்; விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு” என்று கூறி, அவருக்கான கடனைத் திருப்பிக் கொடுத்தார்கள்!! (சஹீஹ் புஹாரி: 2390 Volume :2 Book :43)

சிலர் “அவர்கிட்ட என்ன பணத்துக்கா குறைச்சல்? நான் வாங்குன கடனைத் திருப்பிக் கொடுக்கலைன்னா அவருக்கு ஒண்ணும் குறைஞ்சிடாது” என்ற எண்ணத்தோடு கடன் வாங்குவார்கள். அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை இருக்கிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (சஹீஹ் புஹாரி: 2387)

கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மரணித்துவிட்டால் தப்பித்து விடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. இதற்காகவே வீட்டில் வயதானவர்கள் பெயரில் ப்ப்ப்ப்ளான் பண்ணி கடன் வாங்குவார்கள் சில குடும்பங்களில். பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கு என்பதைப் போல, அவர்களின் கடனும் பிள்ளைகளுக்கே என்பது இஸ்லாமியச் சட்டம்!! (சஹீஹ் புஹாரி: 2395 & 7315)

மேலும், கடனாளியாக இறந்தவருக்குக்கான ஜனாஸாத் தொழுகை நடத்த நபியவர்கள் மறுத்த சம்பவங்களும் உண்டு. (சஹீஹ் புஹாரி: 2298)

கடன் பாக்கியோடு உள்ளவர் மரணித்தால், அக்கடன் அடைக்கப்படும் வரை அவர் சுவர்க்கம் நுழைய முடியாது – அவர் ஷஹீதாகவே மரணித்தாலும்கூட!!. (al-Albaani in Saheeh al-Nasaa’i, 4367) (Ref: http://islamqa.info/en/71183) மேலும், கடனாளியின் ஆன்மா, அக்கடன் அடைக்கப்படும்வரை, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்குமாம்!! (திர்மிதீ 1078) இறைவன் காப்பானாக!!

தனால்தான் நபி(ஸல்) அவர்கள் கடனை விட்டுப் பாதுகாப்பு கேட்டு அதிகமதிகம் பிரார்த்துள்ளார்கள் போல! ”தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். (சஹீஹ் புஹாரி: 2397 Volume :2 Book:39)

இவையெல்லாமும் ஒருவேளை கடனின் தீவிரத் தன்மையைப் புரிய வைக்காவிட்டாலும் இவ்விறை வசனம் நிச்சயம் தெளிவுபடுத்தும்: மறுமைநாளில் பாவிகளின் மனநிலை எப்படியிருக்குமாம் தெரியுமா? “நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.“ (56:66) கேளுங்கள்!! பாவியின் நிலை கடன் பட்டிருப்பவனின் நிலைக்கு ஒப்பானது என்றால் இனி இதை வேறு வார்த்தைகள் கொண்டு விளக்கவும் வேண்டுமா?

இப்போது புரிந்திருக்கும்: இறைவன் ஏன் கடனாளிகளுக்கு உதவச் சொல்லி மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான் என்று!! இம்மையில் மக்கள் முன்பாக அவர்கள் தம் தன்மானத்தை இழந்து அவமானப்பட்டவர்களாகவும், மறுமையில் அவர்கள் அந்தரத்தில் விடப்பட்டவர்களாகவும் ஆகிவிடக்கூடாதே என்ற கருணையால்தான். அதனால்தான், ஸகாத் பெறக்கூடிய எட்டு வகையினரில், கடனாளிகளும் ஒரு பிரிவினராக (9:60) வைத்திருக்கிறான். ஏன், இறந்தவரின் சொத்துப் பங்கீட்டில்கூட, முதலில் கடனை அடைத்துவிட்டு பின்னர்தான் சொத்தைப் பங்கிட வேண்டும் என்று இறைவன் உத்தரவிடுகிறான். (4:11&12)

ன்றைய காலச்சூழ்நிலையில், தவிர்க்க நினைத்தாலும், மருத்துவம், கல்வி, குடும்பச்செலவுகள், வேலை என்று அடிப்படையான தேவைகளுக்கே கடன் பெற்றே ஆக வேண்டிய நிலையே பலருக்கு நிலவுகிறது. அங்ஙனம் கடன்பட்டோருக்கு உதவிடும் பாக்கியத்தையும், கடனில்லாப் பெருவாழ்வையும் தரவேண்டி இறைவனைப் பிரார்த்திப்போமாக. அதற்கான நபியவர்களின் பிரார்த்தனை இதோ:

'இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'


”அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ கலபதித் தைனி, வ கஹ்ரிர் ரிஜால்”


Why is there so much debt? 
(வங்கிக் கடன்களின் சூட்சுமத்தை விளக்கும் வீடியோ)
https://www.facebook.com/PositiveMoney/videos/951510468232691/

Post Comment

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என் குமாரா - 2




முதல் பகுதி இங்கு

"இந்தக் குழந்தை மட்டும் பெண் குழந்தையா பிறந்தா, அது நமக்கு வேணாம். யாருகிட்டயாவது தூக்கிக் கொடுத்துடு. நீ எத்தனைவாட்டி கேட்டாலும் என் பதில் இதுதான்!!
தற்கு மேல் பொறுமை காக்கத் தெம்பில்லை!! கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.... ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு பெண் குழந்தையை வெறுக்க என்னதான் காரணம் இருக்க முடியும்

ஏண்டா தங்கச்சி வேணாம்கிற...?”

கேர்ள்ஸ்லாம் ஃபைட் பண்ண மாட்டாங்க. பாய்ஸ்தான் ஃபைட் பண்ணுவாங்க. அதனால எனக்கு தம்பிதான் வேணும்!!

அடிங்.... இவனையெல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சு நான் உக்காந்து பேசிகிட்டிருக்கேன் பாரு.... இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்... அதெல்லாம் புள்ளையப் பெத்து கையில கொடுத்துட்டாச் சரியாகிடும். ஆனாலும் ஒரு மனக்கிலேசம். இப்பவே இப்படிப் பேசுறானே.... கொஞ்சம் கொஞ்சமா மனச இப்பவே மாத்துறதுதான் நல்லது என்று அவ்வப்போது கேட்டாலும், “என் வயசு எப்பவுமே பதினாறுதான்என்கிற மாதிரி... ம்ஹூம்... கொண்ட கொள்கையிலிருந்து இம்மியும் பிசகவில்லை.

அவனுடைய பாட்டிகள், சித்திகள், அத்தைகள், கஸின்ஸ் யார் கேட்டாலும் அதே பதில்தான்!! ஒரு பையனும், ஒரு பொண்ணும் இருந்தாத்தானே "balanced familyஆ இருக்கும். அதனால பொண்ணு கண்டிப்பா வேணும்ல...பாட்டி எடுத்துச் சொன்னபோதும்.... ம்ஹூம்..... பெட்ரோமாக்ஸேதான் வேணும்!!

இது வெறும் சிறுபிள்ளைத்தனம்; பின்னர் மாறிவிடும் என்று நினைத்த எனக்கு இப்போத்தான் ரொம்ப கவலையாகிப் போனது!! இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கானே, குழந்தையை வெறுத்துவிடுவானோ என்ற பயம்... (அதுல பாருங்க, பொண்ணுதான்னு நான் எப்படி ரொம்ப உறுதியா நம்பிகிட்டு இருந்தேன்??)  

ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும்போது அவன் என்னிடம் கேட்டான், “இந்த பேபி பாய் பேபியா பிறக்கணும்னா நான் என்ன செய்யணும்?” ம்க்கும்... வயித்துல வச்சிருக்க நானே ஒண்ணும் செய்ய முடியாது.... இதில இவுக என்ன செய்யணும்னு கேள்வி வேற....

இருந்தாலும் இம்மாதிரி சந்தர்ப்பங்கள் சுளையாகச் சிக்கும்போது விடக்கூடாது என்ற பாடம் கற்றுக் கொண்டிருந்ததால், “நீ அல்லாஹ்கிட்ட துஆ செய். உம்மா சொன்னபடி கேட்டு நீ நல்ல பிள்ளையா நடந்துகிட்டா, அல்லாஹ் நீ கேட்டதைத் தருவான்.தூண்டில் போட்டேன். ஒன்றும் பதில் சொல்லவில்லை அவன். (துஆ = பிரார்த்தனை)

ரவு படுக்கும்முன் ஓதவேண்டிய துஆ, குர் ஆன் வசனங்களை ஓதிமுடித்தபின், கையை ஏந்தியபடி வெளியே கேட்காபடி கிசுகிசுவென ஏதோ சொல்லிக் கொண்டான். என்ன ஓதுறே என்று வாய் வரை வந்த கேள்வியை விழுங்கி விட்டேன். ஏன்னா... இப்படித்தான் போன மாசம் கிசுகிசுவென ஓதியதை என்னதுன்னு கேட்டப்போ, “நாளைக்கு டெஸ்ட் இருக்குலம்மா.. அதுல என் ஃப்ரண்ட் ஃபர்ஹானா ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும். நான் அதுக்கடுத்த ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்கணும்னு துஆ செஞ்சேன்என்றதும் அவங்க அப்பாவுக்கு வந்ததே கோவம்... 

எலேய் உன்னிய காசு கொடுத்து படிக்க வக்கிறது நானு... இதுல நீ வேற யாரோ ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும்னா துஆ செய்றேஎன்று வெகுண்டு எழுந்துவிட்டார்!! அய்யே... சும்மாருங்க...சின்னப் புள்ளட்டப் போயி.... விவரம் தெரியற வயசா இது?” என்று நான் நடுவில் புக... நீ சும்மாரு.... அதுவும் அந்த பொண்ணு பாகிஸ்தானி...  அட, கேரளாப் பொண்ணச் சொல்லிருந்தாகூட வுட்டுருப்பேன்...என்று பொங்க.... இப்படியொரு கோணத்தைஎதிர்பார்க்காததால் அப்படியே ஷாக்காகி விட்டேன்!! ஆனாலும் சுதாரித்து, பையனை அப்பாவிடமிருந்து காப்பாற்றி விட்டேன்!!

இந்த எபிஸோட் நினைவுக்கு வந்ததால், அப்போது கேட்காமல் விட்டுவிட்டேன். ஆனால் இந்த கிசுகிசு துஆசில நாட்களாகவே தொடரவும், பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டேன். என்னத்தடா அப்படி தெனம் துஆ கேக்கிறே? இப்ப டெஸ்ட் எதுவும் இல்லியே...” 

நீ சொன்னல்ல... அதான் தம்பிதான் வேணும்னு கேட்கிறேன்என்றதும் எனக்கு அதிர்ச்சி..... இவ்ளோ சீரியஸாவா இருக்கான்.... 

னக்கு இப்போ இன்னொரு பெருங்குழப்பம்..... இவ்வளவு நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறானே... ஒருவேளை பெண் குழந்தை பிறந்துவிட்டால்?? அவனுக்கு பிரார்த்திப்பதில் நம்பிக்கை போய்விடுமோ.... அப்போதுதான் சிறுகச்சிறுக அல்லாஹ், தொழுகை, துஆக்கள் என்று  சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்த நாட்கள் அவை. 

அவனது நம்பிக்கை பலப்படுவதற்காக நானும் இனி ஆண் குழந்தைக்காகப் பிரார்த்திக்கணுமா..... கேட்டது கிடைக்கவில்லையென்றால், பெரியவர்கள் புரிந்துகொள்ளலாம். சின்ன பிள்ளை அதை எப்படி எடுத்துக் கொள்வான்நான் கேட்டபடி பெண்ணே பிறந்தாலும் அது இப்போதைய சூழலில் மகிழ்ச்சி கொடுக்குமா? “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகபுத்திசாலி போல அவனைத் தூண்டிவிட்டதில், இப்போ என் பெண்குழந்தை கனவைக் காவு கொடுக்க வேண்டிய நிலை!!

பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியம், என் உடல்நிலை என்று பல்வேறு மன உளைச்சல்களுக்கிடையில் இந்த டென்ஷன் வேறு!! அந்த ஆறு மாதங்களும் என் மனக்குழப்பங்கள் கூடிக் கொண்டேதான் இருந்தன.
இதற்கிடையில் குடும்பத்தினரும் அவனை ப்ரெய்ன் வாஷ்செய்ய முயற்சித்தார்கள். ம்ஹும்.... ஃபோட்டோ ஷாப் கதைகளை எடுத்துச் சொன்ன பிறகும் மோடி மாயையில் முங்கியவர்களைப் போல திருந்தவேயில்லை!! 

ந்த நாளும் வந்தது!! கிளைமேக்ஸ் காட்சி!! அவன் ஒருவன் மட்டும் ஆண் குழந்தை துஆ, குடும்பத்தில் உள்ள எல்லோரும் பெண் குழந்தை துஆ, கடைசிவரை இதுவா அதுவா என்ற குழப்பத்திலேயே நான்...  ஜெயித்தது அவனே!! 

நம்பிக்கையோடு பிரார்த்திப்பதன் பலனை அவன் அறிந்துகொண்டதோடு, பெரியவர்களான எங்களுக்கும் அறியத் தந்தான்!! அவனுக்கு துஆவைக் குறித்து நான் சொல்லிக் கொடுக்கப் போக, அவன் வழியே ஆண்டவன் எங்களுக்கு பாடம் கற்பித்த நினைவுகள் என்றும் மறக்காதவை. 

ப்போ தம்பியாப் புள்ளையைப் பற்றி அண்ணன் கம்ப்ளெயிண்ட் கொண்டு வரும்போதெல்லாம் ஒரே பதில்தான், “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என் குமாரா!!

Post Comment