Pages

Showing posts with label உலகப் பொருளாதாரம். Show all posts
Showing posts with label உலகப் பொருளாதாரம். Show all posts

உலகப் பேரரசின் நாடு பிடித்தல்





முன்காலத்தில், மன்னராட்சியில் மன்னர்கள் அடுத்த நாடுகளைப் போர் தொடுத்து,  வென்று தம் நாட்டோடு இணைத்துக் கொள்வர். இதற்கு முக்கியக் காரணம், அந்நாட்டின் செல்வ வளம்!! இந்தியாவை பிரிட்டிஷார் ஆக்கிரமித்ததின் காரணம் இந்தியாவின் செல்வம்தான்!!

ஆனால், இப்போது அப்படியெல்லாம் போர் தொடுக்க முடியாது என்றில்லை... அதைவிட, அந்நாட்டின் செல்வம் மட்டுமே தம் கைகளுக்கு வருமாறு தந்திர நாடகங்கள் அரங்கேற்றுவதை, நாடு பிடிப்பதைவிட எளிது என்பதால்!!
 
நாட்டை ஆக்கிரமித்தால், நாட்டை ஆள வேண்டும்; மக்களைப் பராமரிக்க வேண்டும். அது ஒரு பெருந்தலைவலி. ஆனால், இரண்டாவதில், செல்வத்தை மட்டும் உறிஞ்சிவிட்டு, அந்நாட்டையும் நாட்டு பிரஜைகளையும் சக்கையாகத் துப்பிவிட முடியும்.

அதற்கான படிப்படியான வழிமுறைகள் என்னென்ன?
1. முதலில்  ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்கவும். அங்கே பெட்ரோல் வளம் இருந்தா இன்னும் சிறப்பு.

 2. அவர்களது நாட்டின் வளர்ச்சிக்காக, உள்கட்டுமானத்தை மேம்படுத்துவது என்று நைஸாகப் பேசி சம்மதிக்க வைக்கவும். அதற்காகக் ”குறைந்த வட்டியில்” உலக வங்கியில் கடன் வாங்கிக் கொடுக்கணும்.


3. பிறகு, உள்கட்டுமான வேலைகளைத் தங்கள் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களை வைத்தே செய்து கொடுக்கணும். (கொடுத்த கடன் பூரா இதற்கான கட்டணமா/சம்பளமா அவங்க நாட்டுக்கே வந்துடும்)


4. அடுத்து, கடனுக்கு வட்டி-வட்டிக்கு குட்டினு அந்த நாட்டோட சொந்தப் பணத்தைப் பிடுங்கிடணும். (அல்லது பணத்துக்குப் பதிலா பெட்ரோலா - அதுவும் விலை குறைச்சு வாங்கிடணும்)

5. கடன் கொடுக்கும்போதே சில நிபந்தனைகளைத் தேன் தடவி விதிச்சிடணும்.அதாவது அரசு நிறுவனங்கள்-கல்வி-மருத்துவம் ஆகியவற்றைத் தனியார்மயமாக்குவது போன்ற நிபந்தனைகள்.

6. அடுத்து, அந்நாட்டு மக்களையும் நீ ஏன் ஏழையா இருக்கே, வீடு-கார் வாங்கு,  சந்தோஷமா இரு; தொழில் செய்னு சொல்லி கடன் கொடுக்கணும். அதுக்கும் வட்டி-குட்டி எல்லாம் உண்டு.

7. இதுக்கு நடுவுலே, அந்தக் கட்டுமானங்களுக்காக நிலத்தைக் கொடுத்த மக்கள் ஏழைகளா நிப்பாங்க. அவங்களுக்கும் கடன் கொடுக்கணும்.




இப்படி, நாட்டையும் நாட்டு மக்களையும் கடனாளியா ஆக்கி, இங்கிருந்து பொருளாதாரத்தை உரிஞ்சி எடுத்து, வறுமையையும் பஞ்சத்தையும் கொடுத்து நிர்க்கதியா விட்டுடணும்.




ருவேளை ஆட்சியில் இருப்பவர்கள் நேர்மையானவர்களா இருந்து,  இதுக்குச் சம்மதிக்க மறுத்தா? அதுக்கும் வழி இருக்கு.


1. அவங்க ஹெலிகாப்டர்ல போகும்போது, ஹெலிகாப்டர் கீழே விழுந்து இறந்துவிடலாம்.

2. நாட்டில் ஏற்கனவே கொஞ்சமா கருத்துமுரண் இருக்கும் ஏதேனும் சில  குழுக்களுக்கு ஆயுத சப்ளை செய்து, #புரட்சி செய்ய வைத்து, அவர்களைக் கொண்டே அந்தத் தலைவரை கதம் செய்துவிட்டு, தன் கைப்பொம்மை ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் வைத்து விடலாம்.

சரி, தலைமை சம்மதிச்சாலும், அந்த நாட்டில் உள்ள மக்கள் அதை எதிர்த்தா?  

என்னங்க நீங்க.... மக்களைச் சமாளிப்பதெல்லாம் ஒரு விஷயமா?

1. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராப் போராடுறாங்க... அதனால் தீவிரவாதிகள்னு சொல்லிடணும்.   

2. அதுக்கப்புறம் தேசபக்தி, தேசியக்கொடி,தேசியகீதம், நாட்டுப் பற்றுனு அந்தந்த நாட்டுக்கேத்த மாதிரி சொல்லி மீதி இருக்க மக்களைக் குழப்பி விட்டுடணும்.

3. அவங்க இராணுவத்தை வச்சே அவங்களை அடக்கிடலாம். தேவைப்பட்டா “உலக” இராணுவமும் உதவிக்கு வரும்.


இப்போ, உங்க நினைவில் வரும் நாடுகளை இதனோடு ஒப்பிட்டுப் பாருங்க... இதேதான் அப்படியே அச்சு பிசகாம நடந்திருக்கும் - நடந்துகிட்டு இருக்கும்.

நிகழ்கால உதாரணம் ஒன்று:  #வெனிசுலா!!
காரணம்: அதன் அபரிமிதமான பெட்ரோல் வளம்!!

What's going on in Venezula?



Post Comment